search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105749"

    • ஏற்காடு வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உதவி திட்ட அலுவலர் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இதில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக ஏற்காடு வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    முகாமில் மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் பெரியசாமி, ஆணையாளர் அன்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன் மற்றும் மகளிர் திட்ட ஏற்காடு வட்டார மேலாளர் மகா லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா தொடங்கி வைத்தார்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகா மில் 10 தனியார் துறை நிறு வனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்களை தேர்ந்தெடுத்தனர். இதில் நேரடி வேலை வாய்ப்பாக 48 இளைஞர்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வழங்கப்படும் கட்டணமில்லா மெக்கானிக், சில்லரை விற்பனை மற்றும் சந்தை படுத்துதல், சர்வீஸ் அட்வைசர், வாட்ச்மேன், சூப்பர்வைசர், கணக்காளர், நர்சிங் போன்ற பல பயிற்சி களுக்கு 56 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வானவர்களுக்கு மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி பணி ஆணையை வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன் மற்றும் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தார்கள்.

    ஜம்மு காஷ்மீர் வங்கி பணிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்தது பற்றி பரவிய பொய் செய்திக்கு வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



    ஜம்மு காஷ்மீர் வங்கியில் பணிபுரிய அதிகாரிகள் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியுற்றோர் மத்தியில், ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து தோல்வியுற்றோர் தங்களுக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகள் சார்பில் வங்கி பணிகளில் சேர பின்பற்றப்பட்ட ஆட்சேர்ப்பு முறைகளில் முழு விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தன. இதற்கு ஜம்மு காஷ்மீர் வங்கி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதில், வங்கி பணிகளில் சேர்வதற்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு பற்றி போட்டியாளர்களிடையே பொய் தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு பரப்பப்படும் தகவல்களில் எவ்வித ஆதாரமும் இல்லை. வங்கி பணிகளுக்கு தேவைப்படும் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் சிறப்பு ஆணையம் பரிந்துரைத்த விதிகளின் கீழ் பணியமர்த்தப்படுகின்றனர்.



    அந்த வகையில் ஆட்சேர்ப்பு வழிமுறைகளில் சிறப்பு ஆணையத்தின் விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டது. ஆன்லைன் தேர்வில் ஆணையத்தின் விதிகள் முறையே பின்பற்றப்பட்டு அதன்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வங்கி பணிகளி்ல் ஆட்சேர்ப்பு முறைகளில் நடைபெற்ற முழு வழிமுறைகளும் பொதுவாகவே பின்பற்றப்பட்டுள்ளன. இதனால் விண்ணப்பதாரர்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் ஆதாரமற்ற விவரங்களை நம்ப வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
    வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோற்று விட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடி உள்ளார். #ManmohanSingh #EmploymentOpportunities
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் சீர்குலைவு எல்லாவற்றுக்கும் மேலாக பணித்தளங்களில் பிரிவினை சக்திகள் ஆகியவை இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களாக அமைந்துள்ளன.

    விவசாயிகளின் தற்கொலைகளும், விவசாயிகள் அடிக்கடி நடத்தி வருகிற போராட்டங்களும் நமது பொருளாதார கட்டமைப்பு சமநிலையின்மையை பிரதிபலிக்கிறது. இதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அரசியல் தலைமை (மத்திய அரசு) இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அது வேலை இழப்பு வீழ்ச்சிக்கு வழிநடத்தி உள்ளது. கிராமப்புறங்களில் கடன்கள் பெருகி வருவதும், நகர்ப்புறங்களில் நிலவுகிற குழப்பங்களும் சேர்ந்து எதிர்பார்ப்பு மிக்க இளைஞர்களை அமைதி இழந்து போகச்செய்கிறது.

    தொழில் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தொழில்துறையும் வேகமான வளர்ச்சியை அடையவில்லை.

    நாட்டின் பொருளாதாரம் பெருகுவதில் சிறு தொழில் துறையும், அமைப்பு சாரா தொழில் துறையும் துடிப்பு மிக்கவை. ஆனால் பேரழிவை ஏற்படுத்தி உள்ள ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு மற்றும் சேவைவரி நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் வேலை வாய்ப்புகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தொழில் துறையையும், வர்த்தக துறையையும் ஊக்குவிப்பதற்கு நல்ல ஆழ்ந்த சிந்தனையில் தோன்றும் கொள்கைகளும், நல்ல செயல்பாட்டு உத்திகளும் தேவை.

    இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிற உலகம். ஒரு பக்கம் உலகப்பொருளாதாரத்தில் நாம் நம்மை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறோம். உலக சந்தைக்கு நம்மை வெளிப்படுத்தி வருகிறோம். மற்றொரு பக்கத்தில், உள்நாட்டில் நாம் மிகப்பெரிய பொருளாதார, சமூக சவால் களை எதிர்கொண்டு வருகிறோம்.

    இது நமது ஜனநாயக உணர்வுகளுக்கும், நமது பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஒரு சோதனையான கால கட்டம்.

    2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் 3-வது முக்கிய நாடாக இந்தியா வந்து விடும் என கூறப்படுகிற முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் (மாணவர்கள்) வர்த்தக உலகில் இணைகிறீர்கள்.

    இதுவரை இல்லாத வகையில் மிக வேகமாக மாற்றங்களை சந்தித்து வருகிற உலகில் உங்களுக்கு வாய்ப்புகளும், சவால் களும் நிரம்ப இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மத்தியபிரதேசத்தில் உள்ள நிறுவனங்கள் அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களை 70% கட்டாயம் பணியில் அமர்த்த வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #MPGovernment #Localyouthjob #KamalNath
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்  முதல் மந்திரி கமல் நாத் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், நேற்று அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அம்மாநிலத்தின் அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்தந்த பகுதியில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு 70% பணி கட்டாயம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் சலுகைகளை பெற நினைக்கும் அனைத்து நிறுவனங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என கூறினார். இதனையடுத்து அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை வேண்டாம் என்று கூறி எந்தவொரு வேண்டுகோளும்  வராததால், புதிய உத்தரவின்படி அனைத்து தொழில் நிறுவனங்களும் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என தொழில் துறையின் முதன்மை செயலாளர் முகமது சுலைமான் தெரிவித்தார்.

    முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய வேலைவாய்ப்பு குறித்து கமல் நாத் கடந்த டிசம்பரில் ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது நடைமுறைபடுத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19-ம் தேதி இந்த புதிய நடைமுறையின்படி தொழில்துறைகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    மத்தியபிரதேச மாநில அரசு தொழில் நிறுவனங்கள் அமைக்க அனைத்து உதவிகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும்  ‘இன்வெஸ்ட் மத்தியபிரதேஷ்’ உச்சிமாநாடு இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ளது.  இந்த மாநாட்டின்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தலைமை செயலாளர் மோகந்தி தெரிவித்துள்ளார்.

    புதிய தொழில் கொள்கையின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளும், வேலைவாய்ப்புக்கான முகாம்களும் நடத்தப்பட்டு, உதவித் தொகை வழங்கப்படும். பின்னர் 70 சதவீத வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படும். #MPGovernment #Localyouthjob #KamalNath 
    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்(பொது) ரூ.200, (மாற்றுத்திறனாளி) ரூ.600, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (பொது) ரூ. 300, (மாற்றுத்திறனாளி) ரூ. 600, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (பொது) ரூ. 400 (மாற்றுத்திறனாளி) ரூ.750.பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் (பொது) ரூ. 600, (மாற்றுத்திறனாளி) ரூ. 1000. வயது வரம்பு (உதவித்தொகை பெறும் நாளில்) ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள், இதர வகுப்பினர் 40 வயதிற்குள் மாற்றுத்திறனாளிகள் உச்சவயது வரம்பு ஏதும் இல்லை. பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.

    மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ- மாணவிகளாக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து 5 வருடங்கள் வேலையில்லாமல் காத்திருப்பவர் கீழ்கண்ட இணையதளம் வாயிலாகவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும் இப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்விற்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெற்றுக் கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழி கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

    ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்.

    மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் அரசு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவிதொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எந்தவித தடையும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்கள் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ பிரேமலதா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Rewari #RewariRapeCase #BJP #MLAPremlata
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சிபிஎஸ்சி மாணவி 12 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மிகவும் மோசமான இந்த நிகழ்வு குறித்து பலதரப்பட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அரியானா மாநில பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி அளித்தனர். அதற்கு பதிலளித்த அவர், நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சில பா.ஜ.க.வினர் பேசும் கருத்துக்கள் சர்ச்சைக்கு பெயர் போனவை என்றாலும், பெண் வன்கொடுமை குறித்து ஒரு பெண் எம்.எல்.ஏ. இதுபோன்ற கருத்து தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. #Rewari #RewariRapeCase #BJP #MLAPremlata
    வேலைவாய்ப்பு அளிப்பதாக சாகர்மாலா திட்டம் பெயரில் போலி இணையதள விளம்பரங்களை நம்பவேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #SagarMala
    சென்னை:

    மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வேலை தேடும் நபர்களுக்கும், சாகர்மாலா திட்டத்தின் உண்மையான பங்குதாரர்களுக்கும் இ-மெயில் மூலம் http://sagarmala.org.in/ என்ற போலியான இணையதள முகவரி அனுப்பப்படுவதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன.

    இந்த போலி இணையதளம் சாகர்மாலா திட்டத்தின் உண்மையான இணையதளம் போல காட்சி அளிக்கிறது. பொறியாளர் மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர்கள் குறித்த போலி விளம்பரம் அதில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுபோன்ற போலியான மற்றும் தவறான விளம்பரங்களை நம்பவேண்டாம். தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய செயலாகும். இது தொடர்பாக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    சாகர்மாலா திட்டத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் http://www.sagarmala.gov.in/ என்பதே சாகர்மாலாவின் உண்மையான இணையதளம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #SagarMala 
    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வேலைவாய்ப்புக்கான ஸ்டார்ட் அப் கொள்கை மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கான தொடக்கநிலைக் கொள்கை மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மாநில பல்கலைக்கழகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பல்கலைக்கழகங்களின் பணி, மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, உயர்கல்வியில் தமிழகம் முதன்மை இடம் பெற்று திகழ்வதாகவும், தொழில்துறையில் வளம்கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் கூறினார்.

    ‘நமது இளைஞர்களுக்கு கல்வியுடன் தொழில் திறன் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்பது அவசியம். அந்த பயிற்சி நமது தேவைக்கும் சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். விரைவாக வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதனை திட்டமிட்டு வடிவமைக்கக் கூடிய பொறுப்பு நமது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தான் உள்ளது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்ற திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது’ என்றும் அமைச்சர் பேசினார்.

    கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்றனர். #AnnaUniversityConference
    ×