search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர்"

    சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி வந்த வம்பு நடிகருக்கு தற்போது அதிகமாக பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறதாம்.
    சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி வந்த வம்பு நடிகருக்கு தற்போது அதிகமாக பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறதாம். பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவர் கதவை தட்டி வருகிறார்களாம். நடிகரும் பல கதைகளை கேட்டு வருகிறாராம்.

    ஆனால், தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை விட எனக்கு தனியாக வீட்டுக்கு தெரியாமல் பணம் கேட்கிறாராம். நடிகரின் சம்பளம் அனைத்தையும் அவரின் தாய் தான் கவனித்து வருகிறாராம். இதனால்தான் வீட்டிற்கு தெரியாமல் பணம் கேட்கிறாராம்.
    நாடோடியாக இருந்த நடிகரின் புதுப்படங்கள் ஏதுவும் சரியாக ஓடவில்லையாம்.
    நாடோடியாக இருந்த நடிகரின் புதுப்படங்கள் ஏதுவும் சரியாக ஓடவில்லையாம். இதனால், தன்னை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் படத்தில் நடிக்க முடிவு செய்தாராம். இதற்காக நடிகையின் தேடல் விறுவிறுப்பாக நடைபெற்றதாம். இதில் முதல் சாய்ஸாக வாரிசு நடிகை பெயர் இடம்பிடித்ததாம். ஆனால், நடிகை அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம்.

    இதனால், இயக்குனர் வேறு நடிகையை தேர்வு செய்ய, அவரும் அதிக சம்பளம் கேட்க, கடைசியாக நடிகர், பிரேமமான நடிகையை சிபாரிசு செய்திருக்கிறாராம். நடிகையும் வாய்ப்பு இல்லாததற்கு இதாவது கிடைத்ததே என்று சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
    நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.
    நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம். வாரிசு நடிகர் உத்தரவாதம் அளித்ததன் பேரில், அந்த தயாரிப்பாளர் ஒரு பெரிய தொகையை கொடுத்தாராம். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லையாம். கடனாக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி வாரிசு நடிகரிடம் அந்த தயாரிப்பாளர் கேட்க நான் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என்று வாரிசு நடிகர், தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி இருக்கிறாராம்.

    இப்போது, வாரிசு நடிகர் சொன்னபடி நடித்து கொடுக்க மறுக்கிறாராம். தயாரிப்பாளர் தன்னை சந்திக்கிறவர்களிடம் எல்லாம், வாரிசு நடிகர் பற்றி புகார் செய்து வருகிறார்.
    பல வெற்றி படங்களை கொடுத்த பேய் இயக்குனர், தற்போது நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.
    பல வெற்றி படங்களை கொடுத்த பேய் இயக்குனர், தற்போது நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம். இவர் ஒரு புதுமுக நடிகரிடம் உன்னை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறி, பல கோடிகளை முன்பணமாக வாங்கி இருக்கிறாராம். அந்த பணத்தை செலவு செய்துவிட்டு, படம் விரைவில் ஆரம்பிக்கிறேன் என்று நடிகரிடம் கூறி வேறு படத்தை தயாரிக்க சென்று விட்டாராம்.

    அந்த எதிர்பார்த்தளவிற்கு லாபம் பெறவில்லையாம். இதையடுத்து, சங்க தலைவரை வைத்து படம் இயக்க சென்று விட்டாராம். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட புதுமுக நடிகர், அடுத்தது என்னை வைத்து தான் படம் இயக்குவார் என்று காத்துக் கொண்டிருந்தாராம்.

    ஆனால், இயக்குனரோ, மீண்டும் வேற நடிகரை வைத்து படம் இயக்க சென்று விட்டாராம். அந்த கதை, புதுமுக நடிகருக்கு உருவாக்கப்பட்ட கதையாம். இதையறிந்த நடிகர் இயக்குனர் மீது கோபப்பட்டு கேட்க, அதற்கு இயக்குனர் உன்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் இன்னும் அதிக பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
    பரபரப்புக்கு பெயர் போன மூன்றெழுத்து நாயகன் புதிதாக நடிக்கும் படத்துக்கு கதாநாயகி வேட்டை மும்முரமாக நடக்கிறதாம்.
    பரபரப்புக்கு பெயர் போன மூன்றெழுத்து நாயகன் புதிதாக நடிக்கும் படத்துக்கு கதாநாயகி வேட்டை மும்முரமாக நடக்கிறதாம். தனக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி கூறுகிறாராம், பரபரப்பு நாயகன்.

    அதைத்தொடர்ந்து ‘வாரிசு’ நடிகையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். பரபரப்பு நாயகனுடன் ஜோடி சேர ‘வாரிசு’ நடிகை தயங்குகிறாராம். அவருடைய தயக்கத்தை போக்கி, படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம். 

    சுமார் மூஞ்சி நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம்.
    சுமார் மூஞ்சி நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம். ஆனால், அந்த படத்தை மொத்தமாக வாங்கிய நடிகர், திருப்தி அடையவில்லையாம்.

    தயாரிப்பாளரான நடிகரிடம், பணத்தை திருப்பி கேட்கிறாராம். “பணத்தை கொடு...அல்லது புதுசாக ஒரு படத்தை நடித்துக் கொடு” என்று நெருக்குகிறாராம். இருவருக்கும் இடையே பஞ்சாயத்து நடக்கிறதாம்.
    வாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம்.
    வாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். அதன்பின் சில சுமாரான படங்களில் நடித்து வந்த நடிகருக்கு சமீபத்திய படங்கள் வெற்றி பெற்றதாம். குறிப்பாக அடல்ட் படம் ஒன்று இளைஞர்களை கவர்ந்ததாம்.

    இளம் இயக்குனர்கள் சிலர் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார்களாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தினாராம். சம்பளத்தை உயர்த்தினாலும் தன்னை தேடி, நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று அந்த நடிகர் எதிர்பார்த்தாராம். அவருடைய எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகி விட்டதாம்

    கைவசம் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், கடல் நடிகர் சோர்ந்து போய் காணப்படுகிறாராம்.
    முதல் படம் இளைஞர்களிடம் வெற்றி பெற, இரண்டாவது படத்திலேயே தளபதியாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்த ஒல்லி இயக்குனர்,
    முதல் படம் இளைஞர்களிடம் வெற்றி பெற, இரண்டாவது படத்திலேயே தளபதியாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்த ஒல்லி இயக்குனர், குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானாராம். மேலும் அடுத்த படத்திலும் தளபதியாரே நடிக்க புகழின் உச்சிக்கே சென்றாராம் இயக்குனர்.

    இருந்தாலும், அந்த படம் நஷ்டம் என்று ஒரு பக்கம் கூறுவதால், இயக்குனர் அடுத்த படத்தை இயக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லையாம். மேலும் நடிகர்களும் அவருடைய படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். 

    இந்த நிலையில், சுமார் மூஞ்சி நடிகரின் படத்தை பாராட்டி கூறியிருக்கிறாராம். இதை பார்த்த பலரும் நடிகருக்கு கொக்கி போடுவதாக பேசிவருகிறார்களாம்.
    சுமார் மூஞ்சி நடிகர் நடிக்கும் படங்களில் ப்பா... யாருடா இது என்ற நடிகைக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று அடிக்கடி சிபாரிசு செய்து வந்தாராம்.
    சுமார் மூஞ்சி நடிகர் நடிக்கும் படங்களில் ப்பா... யாருடா இது என்ற நடிகைக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று அடிக்கடி சிபாரிசு செய்து வந்தாராம். நடிகையும் நடிகருடன் பல படங்களில் நடித்து விட்டாராம். 

    ஆனால், நடிகர் தற்போது பிரேம நடிகைக்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறார். தற்போது உருவாகி இருக்கும் படத்திலும் நடிகை நடிக்க இவர்தான் காரணமாம். மேலும் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் நடிகை பற்றி சொல்லி, நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.

    இரண்டு நடிகைகளும் சிறந்த நடிகைகளாம். சரியான வாய்ப்பு இல்லாததால் ஜொலிக்காமல் இருக்கிறார்களாம். அந்த வாய்ப்பைதான் நடிகர் ஏற்பாடு செய்து கொடுக்கிறாராம்.
    கதாநாயகனாக உயர்ந்த அந்த இசையமைப்பாளர் வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்தாராம்.
    கதாநாயகனாக உயர்ந்த அந்த இசையமைப்பாளர் வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்தாராம். யார் கண்பட்டதோ... அவர் நடித்து வெளிவந்த 2 படங்கள் தோல்வி அடைந்து விட்டதாம். அடுத்து ஒரு வெற்றி படம் கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என்று புரிந்து கொண்ட ‘இசை-நாயகன்,’ அதற்கான முயற்சியில் முழு நேரமும் ஈடுபட்டுள்ளாராம்.

    அடுத்து ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் வரை, ‘கைப்பேசி’யை பயன்படுத்துவதில்லை என்று சபதம் எடுத்து இருக்கிறாராம். அவருடைய ‘கைப்பேசி’ அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது!
    இதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை அறிமுகப்படுத்திய சில வருடங்களில் காலமாகி விட்டார்.
    இதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை அறிமுகப்படுத்திய சில வருடங்களில் காலமாகி விட்டார்.

    ‘வாரிசு’ நடிகர் தன்னை தேடி வந்த படங்களில் மட்டும் நடித்தாராம். அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்ததாம்.

    எனவே சொந்த படம் எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றார், நடிகர். முதல் தயாரிப்பே அவருடைய காலை வாரிவிட்டதாம். முதலீடு செய்த பணம் முழுவதையும் இழந்த அவர், “இனிமேல் சொந்த படம் எடுக்க மாட்டேன், சாமி” என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்!
    டார்ஜிலிங்கில் சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினரும் சென்று இருந்தனர்.

    அங்கு சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் நேற்று இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

    சினிமா படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த், வரும் நாட்களில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  #Rajinikanth
    ×