search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர்"

    முதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல வெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர், சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம்.
    முதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல வெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர், சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம். அங்கு படக்குழுவினரை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, நான் இசையமைத்த இரண்டாவது படம் தான் வெற்றி என்று கூறியிருக்கிறாராம்.

    இதைக்கேட்ட ஒல்லி நடிகரின் ரசிகர்கள், இவர் இசையமைத்த முதல் படம் சூப்பர் ஹிட்டானது. மேலாக இசையமைப்பாளருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனால், ஒல்லி நடிகர் மேல் உள்ள கோபத்தால் இசையமைப்பாளர் இப்படி பேசுகிறாரா. என்று கோபமடைந்திருக்கிறார்களாம்.
    சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரியத்திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர்.
    சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரியத்திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர். தற்போது புகழின் உச்சியில் இருக்கும் நடிகரை அணுகி கதை சொல்லி இருக்கிறாராம் இயக்குனர். 

    கதையை கேட்ட நடிகர் கோடியில் சம்பளம் கேட்டாராம். இதற்கு இயக்குனர் அதிர்ச்சியாகி நெருங்கியவர்களிடம் நடிகரை பற்றி அதிக சம்பளம் கேட்கிறார் என்று சொல்லி வருகிறாராம்.

    இதையறிந்த நடிகர், நானும் இப்போது தயாரிப்பு கம்பெனி வைத்திருக்கிறேன். எனக்காக அவர் முதல் படத்திற்கு வாங்கின சம்பளத்தை பெற்றுக் கொண்டு படத்தை இயக்குவாரா? அவரும் இப்போது அதிக சம்பளம் வாங்குகிறார் தானே? என்று பதிலடி கொடுத்திருக்கிறாராம். 
    சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரியத்திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர்.
    சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரியத்திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர். தற்போது நடிகர் புகழின் உச்சியில் இருக்கிறாராம். முன்னணி நாயகிகள், இயக்குனர்கள் என தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறாராம் நடிகர். இதனால் நடிகரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இருக்கிறதாம். 

    இந்த நிலையில், தனது புதிய படத்தில் நடிப்பதற்காக தனது அறிமுக நாயகனை சந்தித்திருக்கிறார் இயக்குனர். கதை கேட்ட நடிகர் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம். பின்னர் சம்பளமாக பெரும் தொகையைக் கேட்டுள்ளாராம். இதை கேட்ட இயக்குனர் அதிர்ச்சியாகி இருக்கிறாராம். 

    அறிமுகப்படுத்திய போது ஆயிரத்தில் சம்பளம் கொடுத்த தன்னிடமே, கோடிகளில் நடிகர் சம்பளம் கேட்கிறாரே என அவர் ஆதங்கப் பட்டுள்ளாராம். 
    ×