search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    மதுரை:

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பினார்.

    தல்லாகுளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கார்த்திகாதேவி (21). இவர் சம்பவத்தன்று அதிகாலை காந்தி மியூசியம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கார்த்திகாதேவி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இந்த 2 சம்பவங்களும் கடந்த மாதம் முதல் மற்றும் 2-வது வாரத்தில் நடந்துள்ளன.

    நகையை பறிகொடுத்தவர்கள் உடனே தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கொள்ளை சம்பவம் நடந்த 1 மாதத்துக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மதுரையில் வங்கி கடன் செலுத்த முடியாததால் ஏற்பட்ட நெருக்கடியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் அகிம்சா நகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 38). இவர் அதே பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல தனியார் வங்கியில் சுந்தரமகாலிங்கம் கடன் வாங்கினார்.

    வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மாதத் தவணையை சரிவர செலுத்த முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

    இதனால் மன வேதனை அடைந்த அவர், சம்பவத்தன்று வீடடில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் சுந்தரமகா லிங்கத்தை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiGovernmenthospital #HighCourt
    மதுரை:

    மதுரையில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின் இணைப்பு துண்டானது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேர் இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்டதும் ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இதனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.

    அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி தான் அவர்கள் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைப்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

    தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #MaduraiGovernmenthospital #HighCourt
    மதுரை அரசு மருத்துவனையில் 3 பேர் பலியானதற்கு அரசு மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். #MaduraiGovernmenthospital #Stalin
    சென்னை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெய்த மழை காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை. ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்தனர். சிகிச்சை பலனின்றிதான் அவர்கள் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மதுரை அரசு மருத்துவனையில் 3 பேர் பலியானதற்கு அரசு மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழு காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழு பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை என பதிவிட்டுள்ளார். #MaduraiGovernmenthospital #Stalin
    மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள், திருப்பரங்குன்றம், கப்பலூர், அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.
    மதுரை:

    தமிழகம் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பானி புயலால் மழை வரும் என எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு புயல் திசை மாறியதால் ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    ஆனால் மதுரை மாவட்டத்தில் மட்டும் மழையின்றி வறண்ட வானிலை நிலவியதால் வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது. நாள்தோறும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அளவு பதிவானது. மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் மதுரையில் மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் நேற்று பகலில் வழக்கத்தை விட அனல்காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்தது. மாலை 4 மணியளவில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு வந்தன. குளிர்ந்த காற்று, இடி-மின்னலுடன் 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.

    முதலில் சாரலாக விழுந்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்தது. மதுரை நகரின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. 5 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி வரை கொட்டித்தீர்த்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய பகுதிகளான மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகள், விளக்குத்தூண், மாசி வீதிகள், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.

    இதே போல் மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள், திருப்பரங்குன்றம், கப்பலூர், அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    மதுரை கூடல்புதூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூரில் உள்ள செல்லையா நகரைச் சேர்ந்தவர் செல்வன் தினேஷ் டேவிட்சன் (வயது51). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவுக்குள் இருந்த 30 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    மாலையில் வீடு திரும்பிய செல்வன்தினேஷ் டேவிட்சன், கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் உருவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaduraiCentralPrison
    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள்  சட்டைகளை அவிழ்த்து சிறையில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை வீசினர். சிறை அருகே உள்ள சாலைகளில் கற்களை வீசியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiCentralPrison
    மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #SatyabrataSahoo #MaduraiConstituency
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குசாவடிகளில் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு எந்திரங்கள் அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த 20-ந்தேதி மதுரை மேற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் கீழ் பணியாற்றும் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான கே.சம்பூரணம் என்பவர் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் சென்று உள்ளார். இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டரிடம் விரிவான அறிக்கை அனுப்ப கேட்கப்பட்டது. அதன்படி அவர் அறிக்கை அனுப்பி உள்ளார்.



    தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் எந்திரங்கள் உள்ள அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) அருகில் உள்ள தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைத்திருந்த அறைக்குத் தான் (ஸ்டோர் ரூம்) சென்றுள்ளார். வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை பாதுகாப்பாக உள்ளது. அங்கு யாரும் அத்துமீறி நுழையவில்லை. நுழையவும் முடியாது. இருந்த போதிலும் விதிகளை மீறித் தான் அவர் சென்றுள்ளார். முறையாக அனுமதி பெறாமல், முறையான அடையாள அட்டை காண்பிக்காமல் அறைக்குள் சென்றதால் அவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்யத் தான் தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ள வளாகத்துக்கு சென்றதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தபால் ஓட்டுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் (ஸ்ட்ராங் ரூம்) தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துணை ராணுவத்தை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கேட்கின்றனர். அனைத்து மையங்களும் 3 அடுக்கு பாதுகாப்பில் உள்ளன. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர்தான் உள்ளனர். அதனை தொடர்ந்து மாநில போலீசாரும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    அரசியல் கட்சியினரும் அங்கு சென்று பார்க்கலாம். ஏதாவது குறை இருந்தால் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கலாம். இருந்தாலும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களிடமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறைப்படி மின்னணு எந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.

    மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னையில் இருந்து கண்காணிக்க இணைப்பு வசதி இல்லை.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் சில பகுதியில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டரிடம், எந்தந்த பகுதிகளில் எத்தனை பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன? என்பது பற்றி வாக்குச்சாவடி வாரியாக தெரிவிக்க வேண்டும் என்று சிறப்பு அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு அவர், ஒரு சப்-கலெக்டர் தலைமையில் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அனுப்புவதாக கூறி உள்ளார்.

    தொடர்ந்து மே 19-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். 4 சட்டசபை தொகுதி இடைதேர்தல்களுக்கான மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தி தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #MaduraiConstituency

    மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. #MaduraiConstituency

    மதுரை:

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன.

    அதன் பிறகு துணை ராணுவத்தினர் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு மருத்துவக்கல்லூரிக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று பாதுகாப்பையும் மீறி பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு மேலும் சில பணியாளர்களுடன் சென்றதாக தகவல் பரவியது.

    இதையடுத்து இரவு 8 மணிக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் மருத்துவக் கல்லூரிக்கு வந்தார். அவர் அங்கு வந்து சென்ற பெண் அதிகாரி யார்? என வாக்குவாதம் செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனை தொடர்ந்து சு.வெங்கடேசன் மற்றும் கட்சியினர் மருத்துவக் கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் தகவல் கிடைத்து அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர், சுயேட்சை வேட்பாளர் பசும்பொன்பாண்டியன் ஆகியோரும் அங்கு வந்து விளக்கம் கேட்டனர்.

    இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த மருத்துவக்கல்லூரி முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. மதுரை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சசிமோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் துணை கமி‌ஷனர் சசிமோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது யார் அனுமதியுடன் பெண் அதிகாரி இங்கு வந்தார்? அவர் எந்த அறைக்கு சென்றார்? என்பது குறித்து வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் காண்பிக்கப்பட்டன. அதில் குறிப்பிட்ட பெண் அதிகாரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு செல்லவில்லை என்பதும், அதன் எதிரே உள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று திரும்பியதும் தெரியவந்தது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இருப்பினும் பெண் அதிகாரி குறிப்பிட்ட அறையில் எடுத்து சென்ற ஆவணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அறை ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாகவே உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெண் அதிகாரி ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குதான் சென்றுள்ளார். தற்போது அந்த அறையும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கிடையில் பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாநில தலைமை தேர்தல் ஆணையர்தான் இறுதி முடிவை அறிவிப்பார்.

    மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி மதுரை கலால்துறை தாசில்தார் சம்பூர்ணம் என தெரியவந்துள்ளது. இவர் மதுரை மேற்கு தொகுதி தேர்தல் உதவி அலுவலராக செயல்பட்டுள்ளார்.

    வாக்குப்பதிவு நாளில் மதுரை சித்திரை திருவிழா நடைபெற்றதை கருத்தில் கொண்டு இங்கு மட்டும் வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மருத்துவக்கல்லூரி கொண்டு செல்லப்பட்டு தனி அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

    இந்த பணிகள் முடிந்த பிறகு உதவி தேர்தல் அலுவலர் சம்பூரணம் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என தெரியவந்துள்ளது. எனவே ஆவணங்கள் அறைக்கு சென்று அதில் கையெழுத்திட அதிகாரி சம்பூரணம் சென்றதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் யார்? அனுமதி பெற்று சென்றார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் கூறுகையில், பெண் அதிகாரி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிக்கு வந்து சென்ற தகவல் கிடைத்ததும் நாங்கள் விரைந்து வந்தோம். ஆனால் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சில போராட்டங்களுக்கு பின்னர் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் காண்பிக்கப்பட்டன.

    அதில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறையின் ‘சீல்’ அப்படியே இருந்தது. அதன் எதிரே உள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குதான் பெண் அதிகாரி சென்று வந்துள்ளார். அங்கும் தற்போது பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

    அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் யார் தூண்டுத லின்பேரில் பெண் அதி காரி இங்கு வந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். #MaduraiConstituency

    மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் அனுமதியின்றி மர்ம நபர் நுழைந்தது தொடர்பான புகார் குறித்த உரிய விசாரணை நடத்தப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். #MaduraiConstituency
    மதுரை:

    மதுரையில் கடந்த 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்று நகல் எடுத்ததாக புகார் நேற்று இரவு புகார் எழுந்தது.

    இதையடுத்து அங்கு குவிந்த அரசியல் கட்சியினர், கலெக்டர் வந்து விளக்கம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் அங்கு வந்து ஆய்வு செய்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிசிடிவி மற்றும் காவல் துறையின் பாதுகாப்பில் மின்ணணு இயந்திரங்கள் பத்திரமாக உள்ளது. மின்ணணு வாக்குப்பதிவு அறைகள் அனைத்தும் முழு பாதுகாப்பில் உள்ளன. வேட்பாளர்கள் பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து முழு திருப்தி தெரிவித்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு அனுமதியின்றி உள்ளே சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். #MaduraiConstituency
    மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் அனுமதியின்றி மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiConstituency
    மதுரை:

    மதுரையில் கடந்த 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்று நகல் எடுத்ததாக புகார் இன்று இரவு புகார் எழுந்தது.

    இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அங்கு வந்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    மர்ம நபர் நகல் எடுத்ததாக தகவல் பரவியதும் தி.மு.க.-வினர் மற்றும் அ.ம.மு.க-வினர் குவிந்தனர். தொடர்ந்து அறையின் சிசிடிவி காட்சிகளை காண்பிக்கவும்,  மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiConstituency
    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க வந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

    திருக்கல்யாண விழாவை பக்தர்கள் சிரமமின்றி காண விழா பந்தல் மற்றும் ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் முன்பு அமர்ந்து பக்தர்கள் திருக்கல்யாண விழாவை கண்டுகளித்தனர்.

    மதுரை பழங்காநத்தம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஞானசவுந்தரி (வயது 60) என்பவர் தெற்கு கோபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை முன்பு அமர்ந்து திருக்கல்யாண விழாவை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது யாரோ மர்ம மனிதன் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.

    இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம மனிதனை தேடி வருகின்றனர்.

    ×