என் மலர்
நீங்கள் தேடியது "சுங்க அதிகாரிகள்"
- சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை விமானநிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உள்பட உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி சுங்க இலாகா முதன்மை கமிஷனராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, கூடுதல் துணை கமிஷனர் பெரியண்ணன், சுங்க இலாகா துணை கமிஷனர்கள் சரவணன், பனீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 கமிஷனராக பணியாற்றி வந்த தமிழ்வளவன் பதவி உயர்வு செய்யப்பட்டு, சென்னை விமானநிலையத்தின் புதிய சுங்க இலாகா முதன்மை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று டெல்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா. பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வமான உத்தரவை மத்திய அரசின் துணை செயலாளர் ஷீரேஷ் குமார் கவுதம் பிறப்பித்துள்ளார்.
ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகாவில் இருந்து வந்த பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.
அப்போது அந்த நபர், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை உடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட தங்க பேஸ்ட் 1.16 கிலோ கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 36,99,782 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Hyderabadcustomsaction #Manarrested
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் இந்தியா முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில் ஒருவரிடமிருந்து இன்று ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #Customsseized #foreigncurrency
கோவா விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.
அப்போது அந்த பெண், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை ஜீன்ஸ் உடைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட தங்க பேஸ்ட் 590 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 18,08,840 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த பெண்ணை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Goacustomsaction #womenarrested
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பாக சுங்க அதிகாரிகள் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் சோதனையிடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை சுங்க இலாகா அதிகாரிகள் 20 பேர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவர்களை உள்ளே விட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மறுத்துவிட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை ஊழியர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே வருவதற்கு நுழைவு பாஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த நுழைவு பாஸை மாதந்தோறும் அவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் நுழைவு பாஸ் கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்ட நிலையில் அவர்கள் அதனை புதுப்பிக்காமல் திருச்சி விமான நிலையத்திற்கு பணிக்கு வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் புதிய அடையாள அட்டை கொண்டு வந்தால்தான் அனுமதி அளிக்கப்படும் என்று தொழிற்பாதுகாப்பு படையினர் உறுதியாக தெரிவித்து விட்டனர்.
இதற்கிடையே ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியாவிற்கு செல்ல 160 பயணிகள் தயாராக இருந்தனர். நீண்ட நேரம் அவர்கள் காத்திருந்தும் சுங்க அதிகாரிகள் இல்லாததால் சோதனை நடத்த முடியவில்லை.
இதையடுத்து ஏர் ஏசியா மேலாளரின் அனுமதியுடன் சுங்கத்துறை சோதனையின்றி 160 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலேசியா விமானம் சென்றது. இதையடுத்து சுங்க சோதனையின்றி பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சுங்க இலாகா சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஸ்ரீலங்காவில் இருந்து ஒரு விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகள் பரிசோதனைக்காக காத்திருந்தனர். ஆனால் சோதனை செய்ய யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டனர்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு படையினர் விமான நிலைய இயக்குனர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக சுங்கத்துறை ஊழியர்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ஊழியர்கள் விரைந்து பணிக்கு சென்றனர். பின்னர் விமான பயணிகள் சோதனை செய்யப்பட்டு வெளியே வந்தனர். இதனால் விமான நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TrichyAirport