என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வாதி"

    • ரன்வீர் அல்லாபாடியாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • சர்ச்சை கருத்து கூறியதற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டார்.

    புதுடெல்லி:

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என அறியப்படும் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கினார்.

    சமீபத்தில் Indias Got Tatent நிகழ்ச்சியில் பங்கேற்ற ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒருமுறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா? இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?'' என கேட்டார்.

    ரன்வீரின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவருக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சர்ச்சை கருத்து கூறியதற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், நகைச்சுவை நடிகை ஸ்வாதி சச்தேவா ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    வீட்டில் ஒரு வைப்ரேட்டரைக் கண்டுபிடித்தது குறித்து தனது தாயின் எதிர்வினையை ஸ்வாதி நகைச்சுவையாகக் கூறுகிறார். ஒரு வைப்ரேட்டரைக் கண்டுபிடித்த பிறகு, தனது அம்மா தன்னுடன் வெளிப்படையாகப் பேச முயற்சித்ததைப் பற்றி நகைச்சுவையாகக் கூறிய ஸ்வாதி, தனது அம்மா வைப்ரேட்டரை ஒரு கேஜெட் மற்றும் பொம்மை என்று எப்படி சங்கடமாகக் குறிப்பிட்டார் என்பதையும் விளக்கினார்.

    ஸ்வாதி சச்தேவாவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் ஸ்வாதி ஆபாசத்தைப் பரப்புவதாக குற்றம்சாட்டிய நெட்டிசன்கள், அவரது கருத்து வெட்கக் கேடானது எனவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

    விஜய்யுடனும், அஜித்துடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். #Vijay #Ajith
    ‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

    அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.



    இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

    நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்’. இவ்வாறு ஸ்வாதி கூறினார்.
    ×