search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தான்சானியா"

    தான்சானியாவில் மினி பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #TanzaniaAccident
    டர் எஸ் சலாம்:

    தான்சானியா நாட்டின் சோங்வே பகுதியில் மினி பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    டுண்டுமா பகுதி அருகே மினி பஸ் சென்றபோது எதிரே வந்த லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். சாலை விபத்து குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் ஜான் மொகபுலி, விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #TanzaniaAccident
    தான்சானியா நாட்டின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. #LakeVictoriaFerryAccident
    உகாரா:

    ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கிய விபத்தில் பலர் பலியாகினர். விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 207 ஆனது என தகவல்கள் வெளியானது. மேலும், உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் சிலரை உயிருடன் மீட்டு வந்தனர்.

    இந்நிலையில், தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 



    இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். படகு மூழ்கி விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். #LakeVictoria  #LakeVictoriaFerryAcciden
    தான்சானியா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. #LakeVictoriaFerryAccident
    லேக்விக்டோரியா:

    தான்சானியா நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான விக்டோரியா ஏரியில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப்படகு திடீரென நீரில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெறும் மீட்பு பணிகளில் ஒரே ஒரு நபர் மட்டும் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    இந்த விபத்தில் ஏற்கனவே 136 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. படகில் சுமார் 300 பேர் பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கை நடந்துகொண்டே இருக்கிறது.

    இந்த விபத்து குறித்து ஏற்கனவே படகின் உரிமையாளர் உட்பட விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு தான்சானியா அதிபர் உத்தரவிட்டு இருந்தார். இன்று இதுகுறித்து பேசிய போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு மந்திரி இசாக் கம்வெல்வி கூறுகையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைவரையும் மீட்கும் வரை மீட்புப்பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். #LakeVictoriaFerryAccident
    ×