என் மலர்
நீங்கள் தேடியது "மைனர் பெண்ணிடம் உல்லாசம்"
தேனி:
தேனி அருகே கோம்பை அணைமேட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் விக்னேஸ்வரன் (வயது 23). அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கேரளாவில் வேலை பார்த்து வந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.
விக்னேஸ்வரன் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து ஓடைப்பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இது குறித்து கோம்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வருஷநாடு அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இதனால் சுரேசும், அந்த பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். இளம் வயது காரணமாக அடிக்கடி அத்து மீற தொடங்கியுள்ளனர். அப்போது சுரேஷ் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும் மைனர் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
தற்போது அந்த பெண்ணிடம் செல்போனில் உள்ள அந்தரங்க படத்தை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மைனர் பெண் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வருஷநாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் - கரூர் சாலை எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் புவனா (வயது 16). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் கனகபாண்டி (24). இவர் டாடா மேஜிக் வாகனம் ஓட்டி வருகிறார்.
இருவரும் கடந்த சில நாட்களாக பேசி பழகி வந்துள்ளனர். கனகபாண்டி காதலிப்பதாக புவனாவிடம் கூறி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த புவனாவை தனது வேனில் ஏற்றி தனியார் கல்லூரி அருகே அழைத்துச் சென்றார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்தார். அதன் பின்னர் வீட்டுக்கு போக வேண்டும் என புவனா கூறவே சிறிது நேரம் கழித்து தானே கொண்டு போய் விடுவதாக கூறியுள்ளார்.
அப்போது மழை பெய்யவே அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இரவு முழுவதும் புவனாவிடம் ஆசை வார்த்தை பேசியபடியே கனகபாண்டி உல்லாசமாக இருந்துள்ளார்.
வேலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அதிகாலையில் புவனாவை தனது நண்பரான சீனிவாச நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (18) என்பவரை வரவழைத்து அவரது மோட்டார் சைக்கிளில் வீட்டில் விடுமாறு கூறியுள்ளார். மோட்டார் சைக்கிளில் புவனாவை அழைத்துச் சென்ற ஸ்டீபன் ராஜ் பாடியூரில் உள்ள உறவினர் வீட்டில் அவரை விட்டுச் சென்று விட்டார். உடல் சோர்வாக காணப்பட்ட புவனாவை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் நடந்த விபரங்களை கூறியுள்ளார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. பாலகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மும்தாஜ்மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை கற்பழித்த கனகபாண்டியையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்டீபன் ராஜையும் கைது செய்தனர்.
கனகபாண்டி மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.