என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்னத்தூர்"

    • திருப்பூர் குமார் நகர், பல்லடம், துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன், பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் குமார் நகர், பல்லடம், துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, கொங்கு மெயின்ரோடு, இளங்கோநகர், ஜவகர்நகர், எம்.எஸ்.நகர், எஸ்.எஸ்.நகர், டி.எம்.எஸ்.நகர்., கவுண்டநாயக்கன்பாளையம், குறிஞ்சிநகர், பவானிநகர், வீவர்ஸ் காலனி, திருமலைநகர், சந்திராகாலனி, முருகானந்தபுரம், அம்பேத்கர் காலனி, நீதியம்மாள் நகர், கண்ணகி நகர், பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    அதுபோல் குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய பகுதிக்கு உட்பட்ட ஆதியூர், தளபதி, காவத்தம்பாளையம், சின்னையம் பாளையம், கணபதிபாளையம், நவக்காடு, கருமஞ்செரை, 16 வேலம்பாளையம், கணபதிபாளையம் சொக்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    குன்னத்தூரில் ஆட்டோ மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் ஜீவா என்ற ஜீவானந்தம் (வயது 19). இவர் ஈரோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஜீவா வழக்கம்போல் கல்லூரி பஸ்சில் சென்று வந்தார்.

    நேற்று கல்லூரியில் விழா நடைபெற்றது. இதற்காக தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றார். விழா முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    குன்னத்தூர் பெருந்துறை ரோடு தேவம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிரே சரக்கு ஆட்டோ வந்தது. எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜீவாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவரை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவாவை பரிசோதனை செய்த டாக்டர் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திக்குமாரை கைது செய்தனர்.

    ×