search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் திங்கட்கிழமை முடிவடைய இருந்த நிலையில் இன்றுடன் நிறைவடைந்தது.
    • பிரதமர் மோடி மற்றும் ஓம் பிர்லா தலைமையில் தேனீர் விருந்து நடைபெற்றது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கியது. வரும் திங்கட்கிழமை வரை கூட்டத்தொடர் நடைபெற இருந்தது.

    ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இன்றுடன் சபை நிறைவடைவதாக அறிவித்து அத்துடன் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் அறிவிக்கப்படாத தேனீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களவை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கனிமொழி எம்.பி., துரை வைகோ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    ஷோபா ஒன்றில் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் அமர்ந்திருக்க, பிரதமருக்கு இடது பக்கம் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். வலது பக்கம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

    ராகுல் காந்தில் வந்தபோது பிரதமர் மோடியும் அவரும் பரஸ்பர நமஸ்காரம் (வாழ்த்து) தெரிவித்துக் கொண்டதாகவும், போட்டோவுக்கு இருவரும் புன்னகையுடன் போஸ் கொடுத்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக என்டிடிவி செயதி வெளியிட்டுள்ளது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாமரை வடிவிலான சக்கரவியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் அச்சம் என்ற சக்கரவியூகத்தில் மக்களை சிக்கவைத்துள்ளனர். தற்போதைய நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட அச்சத்தில் உள்ளனர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இதில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி கூட்டுக்குழு அமைக்கப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய 31 பேர் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பிறப்பித்துள்ளார்.

    பா.ஜ.க.வின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மசோதாவை ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டுக் குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.

    இந்த கூட்டுக் குழுவானது மசோதா குறித்து ஆய்வுசெய்து அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

    • நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ந்தேதி தாக்கல் செய்தார்.
    • எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை 23-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    இந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

    இன்று மாநிலங்களவையில் ஜெயா பச்சன்- மாநிலங்களவை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதில் ஒரு அமர்வுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

    • அறிக்கைப்படி, இந்தியாவின் பட்டினிக் குறியீடானது மிகவும் பின்தங்கிய நிலையில் 111வது இடத்தில் தீவிரமான அளவில் உள்ளது.
    • ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மட்டுமே பட்டினியோடு நேரடியாகத் தொடர்புடையது என்று அன்னபூரணா தேவி விளக்கமளித்துள்ளார்.

     2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீடு Global Hunger Index (GHI) அறிக்கை கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டில் மொத்தம் உள்ள 121 நாடுகளில் 111 வது இடத்தில் இந்தியா உள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    அதன் அறிக்கைப்படி, இந்தியாவின் பட்டினிக் குறியீடானது மிகவும் பின்தங்கிய நிலையில் 111வது இடத்தில் தீவிரமான அளவில் உள்ளது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில் இதுகுறித்து தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்குத் தனது பதிலை மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளார்.

     

    அதில் அவர், GHI -யின் அறிக்கை இந்தியாவின் உண்மை நிலையை விவரிக்கவில்லை. GHI பயன்படுத்தும் பட்டினியை அளக்கும் காரணிகள் குறைபாடுடையதாகும். எனவே அந்த அறிக்கை face value கொண்டதல்ல. மேலும் இந்தியாவின் பட்டினி அளவைப் பொறுத்தவரை GHI உடைய மதிப்பீடு தவறானது.

     

    GHI பட்டினிக் குறியீட்டை ஊட்டச்சத்துக் குறைபாடு, 5வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது. இவற்றில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மட்டுமே பட்டினியோடு நேரடியாகத் தொடர்புடையது என்று அன்னபூரணா தேவி விளக்கமளித்துள்ளார்.  

    • குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
    • நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

    மக்களவையில் இன்று நாடாளுமன்ற திமுக குழு தலைவரும் எம்.பியுமான கனிமொழி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

    கேந்திரிய வித்யாலயாக்கள் உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் மொழி கொள்கைகளை எப்படி நடந்து கொள்வீர்கள் என்று உங்களுக்கும் இங்கு இருக்கும் சிலருக்கு விளக்குவதார்காக நான் சொல்கிறேன்.

    அங்கே இருக்கக் கூடிய மாநில மொழியே கற்றுத்தருவோம் என்று சொல்கிறீர்கள். தமிழ் நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயாக்கள் இருக்கிறது. ஆனால், அங்கு நீங்கள் எப்படி தமிழ் சொல்லி தருவீர்கள்.

    அங்கே இருக்க கூடிய மாணவர்களே 20 பேர் ஒரு வகுப்பில் எல்லோரும் சேர்ந்து தலைமை ஆசிரியர்களிடம் வந்து கோரிக்கை வைக்க வேண்டுமாம்.

    அப்படி கோரிக்கை வைத்தால்தான் அதற்காக ஆசிரியர் நியமிக்கப்படும் என்றும் ஆசிரியர் கிடைத்தால் தான் அவர்களை நியமிக்கப்பட்டு அங்கே தமிழ் சொல்லித் தரப்படும் என்று சொல்கிறார்கள். இது தமிழ்நாட்டிலேயே.

    நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

    45 பள்ளிகளிலே 15 பள்ளிகளில்தான் தமிழ் சொல்லி தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது.

    உங்கள நம்பி மொழி கொள்கைகளிலே நீங்கள் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்று எப்படி நினைக்க முடியும்.

    ரெயில் நிலையங்களில் கூட டிக்கெட் வாங்க முடியவில்லை. அங்கையும் ஹிந்தி திணிக்கப்பட்டு இருக்கிறது.

    அப்படிபட்ட அரசாங்கம் எங்கள் மீது ஹிந்தியை மட்டும் இல்லாமல் சமஸ்கிருதத்தையும் திணிக்கின்றனர்.

    அதுமட்டும் இல்லை எங்களுடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேல் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    மதியம் உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது தமிழகம் என்ற பெருமையே நாங்கள் தலை நிமிர்ந்து சொல்லிக் கொள்வோம்.

    ஆனால், பி.எம்.போஷன் என்ற திட்டம் நாடு முழுவதும் இருக்கக் கூடிய திட்டத்திற்கு இந்த அரசாங்கம் அந்த திட்டத்திற்காக மதிப்பீடு 11ஆயிரத்து 600 கோடி. அதில் குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய திட்டத்திலே நீங்கள் ஒதுக்கீடு செய்திருப்பது 10 ஆயிரம் கோடி.

    குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய இந்த பி.எம்.போஷன் திட்டத்திற்கு கூட போதிய நிதியை ஒதுக்க முடியாத நீங்கள், எங்களுக்கு கல்வியை பற்றி சொல்லி தருகிறீர்கள். இதற்கு நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளவேண்டுமா ?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மகாபாரத யுத்தத்தில் சக்கரவியூகத்தில் ஆறு பேரால் அபிமன்யூ சிக்கவைக்கப்பட்டு கொல்லப்படுவார்.
    • மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி தாமரை சக்கரவியூகத்தை கட்டுப்படுத்துகின்றனர்.

    2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.

    அப்போது மகாபாரத்தில் அபிமன்யூ, ஆறு பேரால் உருவாக்கப்பட்ட சக்கரவியூகத்தில் சிக்கவைக்கப்பட்டு கொல்லப்படுகிறார். அதேபோல் ஆறுபேரால் தற்போது தாமரை வடிவிலான சக்கரவியூகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆறு பேர் கட்டுப்படுத்துகின்றனர் என்றார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    மகாபாரத யுத்த கதையில் சக்கரவியூகத்தில் ஆறு பேரால் அபிமன்யூ சிக்கவைக்கப்பட்டு கொல்லப்படுவார்.

    பத்மவியூகம் எனவும் அறியப்படும் சக்கரவியூகம் என்ற வார்த்தைக்கு தாமரை வடிவம் என்பது பொருள் என்பதை நான் சில ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளேன். 21-ம் நூற்றாண்டில் புதிய சக்கரவியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தாமரை வடிவிலானது. இந்த உருவத்தை பிரதமர் மோடி அவரது மார்பில் அணிந்துள்ளார்.

    அபிமன்யூவுக்கு என்ன நடந்ததோ, அதேபோல் இந்தியாவில் உள்ள இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடந்து வருகிறது. இன்று சக்கரவியூகத்தின் மையத்தில் ஆறு பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் நாடு சிக்கியுள்ளது. மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி ஆகிய ஆறு பேரும் அதை கட்டுப்படுத்துகிறார்கள்.

    (பெயரை குறிப்பிட்டதால் சபாநாயகர் இடைமறித்தார். அப்போது ராகுல் காந்தி நீங்கள் விரும்பினால் என்எஸ்ஏ, அம்பானி, அதானி பெயர்களை விட்டுவிடுகிறேன். 3 பெயர்களை எடுத்துக் கொள்கிறேன் என்றார்.)

    மூன்று படைகள் சக்கரவியூகத்திற்கு பின்னணியாக உள்ளன.

    முதல்படை: (ஏகபோக மூலதனத்தின் யோசனை)

    இந்திய வளத்தின் ஒட்டுமொத்த உரிமைக்கும் இரண்டு பேரை அனுமதிப்பது. எனவே, 'சக்ரவ்யூ'வின் ஒரு அங்கம் நிதி அதிகாரத்தால் வருகிறது.

    இரண்டாவது- அமைப்புகள்

    இந்தியாவின் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை போன்ற அமைப்புகள்.

    3-வது அரசியல் நிர்வாகிகள்

    இந்த மூன்றும் இணைந்து சக்கரவியூகத்தின் இதயமாக இருந்து, இந்த நாட்டை சீரழித்து விட்டனர்.

    மத்திய பட்ஜெட் நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு தொழில் அதிபர்கள் ஆகியற்றிற்கு உதவி செய்து சக்கரவியூகத்தன் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் என எதிர்பார்த்தேன்.

    ஆனால் நான் கண்டது என்னவென்றால் இந்த பட்ஜெட்டின் ஒரே நோக்கம் ஏகபோக வணிகத்தின் கட்டமைப்புகள், ஜனநாயகக் கட்டமைப்பையும் மற்றும் அரசு அமைப்புகளையும் அழிக்கும் அரசியல் ஏகபோகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதாகும்.

    இதன் விளைவு என்னவெனில்- பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் வரி தீவிரவாதத்தின் மூலம் இந்தியாவுக்கு வேலை கொடுத்தவர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாக்கப்பட்டதாகும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • அதானி, அம்பானியை பாதுகாக்க நடுத்தர மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது.
    • பட்ஜெட் அல்வாவின் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு விட்டது.

    பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் மக்களவையில் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சிறு குறு தொழிற்சாலைகளுக்கு எதிராக வரித் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் போராடியும் பலனில்லை. பேராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சந்திக்க விடாமல் மத்திய அரசு என்னை தடுக்கிறது. நாட்டில் நடுத்தர வர்க்க மக்களை மோடி அரசு முதுகில் குத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த கோரி விவசாயிகள் போராடியும் பலனில்லை.

    நாடு முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். வேலையில்லாத இளைஞர்களுக்கு வெறும் பயிற்சி மட்டுமே அளிப்பது போதாது.

    தாக்கப்பட்ட பட்ஜெட்டில் கல்விக்கான நிதியை குறைத்தது ஏன்?

    எந்த உதவியும் செய்யாமல் நடுத்தர குடும்பங்களை மோடி அரசு கைவிட்டு விட்டது. ஐடி மறறும் ஜிஎஸ்டி அமைப்புகள் மூலம் சிறுகுறு தொழில் முனைவோருக்கு அச்சுறுத்ல் கொடுக்கப்படுகிறது. பட்ஜெட் மூலம் நடுத்தர மக்களை மத்திய அரசு ஏமாற்றியுள்ளது.

    அதானி, அம்பானியை பாதுகாக்க நடுத்தர மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது. அதானி, அம்பானியை பாதுகாக்க மக்களுக்கு எதிராக மத்திய அரசு சக்கரவியூகம் அமைத்துள்ளது. (அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் அதானி, அம்பானி பெயரைக் குறிப்பிடக் கூடாது என்றார். உடனே ராகுல் காந்தி A1, A2 என அவர்களை குறிப்பிட்டு பேசினார்.)

    நாட்டில் தலித், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்ட மக்கள் 73 சதவீத் பேர் உள்ளனர். 73 சதவீதம் உள்ள மக்களுக்கு பட்ஜெட்டில் என்ன கொடுத்தீர்கள்?

    பட்ஜெட் அல்வாவின் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு விட்டது (அப்போது நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கும் போட்டோவை காட்டினார்). பட்ஜெட் அல்வா நிகழ்ச்சியில் ஒரு ஆதிவாசி அதிகாரி கூட இல்லை.

    இந்து மதம் என்ன கூறுகிறது என பாஜக-வினருக்கு தெரியவில்லை. அமைதி, பொறுமையை போதிக்கும் இந்து மதத்தை பாஜக தவறாக பரப்புகிறது.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    • பாஜக ஆட்சியில் அமைச்சர்கள் கூட அச்சத்தில் உள்ளனர்.
    • தாமரை வடிவில் சக்கரவியூகம் அமைத்து மக்களவை அச்சத்தில் வைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

    பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் மக்களவையில் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சக்கர வியூகத்தில் அபிமன்யூ சிக்கியதை போல் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிக்கியுள்ளனர்.

    பாஜக ஆட்சியில் அமைச்சர்கள் கூட அச்சத்தில் உள்ளனர்.

    நாடு முழுவதும் அனைத்து விசயங்களிலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    நாடு முழுவதும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இளைஞர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலை உள்ளது.

    தாமரை வடிவில் சக்கரவியூகம் அமைத்து மக்களை அச்சத்தில் வைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

    அச்சம் எனும் சக்கரவியூகத்தை அமைத்து மக்களை பயமுறுத்தி வருகின்றனர் மோடி, அமித் ஷா. மகாபாரத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டது போல் மோடி மற்றும் அமித் ஷாவால் புதியதாக அமைக்கப்படடுள்ள சக்கர வியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கி உள்ளனர்.

    சக்கரவியூகம் அமைத்து நாட்டு மக்களை கொள்ளை அடித்து வருகின்றனர்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை.
    • நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை தொடர் பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை மந்திரிகள் பதிலளித்தனர்.

    இதில் முக்கியமாக கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், எழுத்து மூலம் பதிலளித்து இருந்தார்.

    அதில் அவர், 'நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சுப்ரீம் கோர்ட்டில் 84,045 வழக்குகளும், பல்வேறு ஐகோர்ட்டுகளில் 60.11 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மாவட்ட மற்றும் துணை கோர்ட்டுகளில்தான் 4.53 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த மேக்வால், இதில் 1.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் உத்தரபிரதேச கோர்ட்டுகளில் உள்ளதாகவும் கூறினார்.

    இந்த நிலுவைக்கான பின்னணியில் உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஐகோர்ட்டு நீதிபதி நியமனங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு கொலீஜியம் அனுப்பியுள்ள 205 பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

    இதைப்போல ஆயுஷ்மான் பாரத் தொடர்பான கேள்விகளுக்கு சுகாதாரத்துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் பதிலளித்தார்.

    அவர் கூறும்போது, 'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை இணைக்கும் வகையில் நிபுணர் குழு எதையும் அமைக்கவில்லை. இதைப்போல பிரீமியம் பங்களிப்பின் அடிப்படையில் தற்போதுள்ள பயனாளிகளுக்கு மேல் திட்டத்தை விரிவுபடுத்தும் பரிந்துரை எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.

    அனைத்து பணியிடங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி மக்களவையில் பதிலளித்தார்.

    10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளதாக கூறிய அன்னபூர்ணா தேவி, 17 சதவீதம் பேர் எடை குறைவாகவும், 6 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைவுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் அதிகபட்சமாக 46.36 சதவீதம் பேர் உத்தரபிரதேசத்தில் கண்டறியப்பட்டதாகவும், லட்சத்தீவுகள், மராட்டியம், மத்திய பிரதேசம் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் கூறினார்.

    கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இறந்திருப்பதாக வெளியுறவு இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக 172 பேர் கனடாவில் மரணித்ததாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையே மாநிலங்களவையில் ரெயில்வே தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதிலளித்தார்.

    அப்போது அவர், 22 பெட்டிகளை கொண்ட மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 12 பெட்டிகள் ஏ சி அல்லாத பொது மற்றும் படுக்கை வசதி கொண்டவையாகவும், 8 பெட்டிகள் பல்வேறு நிலையிலான ஏ சி பெட்டிகளாவும் இருக்கும் என தெரிவித்தார்.

    உஞ்சாகர்-அமேதி ரெயில் வழித்தடம் தொடர்பாக மறுஆய்வு செய்ய இருப்பதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ். ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழித்தடம் சலோன் தொழில்துறை பகுதி வழியாக செல்வதால் சாத்தியமில்லை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    • பல எம்.பி.க்கள் பாரத் மா கி ஜே என கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.
    • ஓவைசி பதவி ஏற்றபின் ஜெய் பாலஸ்தீனம் என கோஷமிட்டார்.

    தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் மக்களவை உறுப்பினராக ஒரு வாரத்திற்கு முன் பாராளுமன்றத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பின்போது உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள். உறுதி மொழி எடுத்த பின் ஜெய் ஹிந்த், ஜெய் அரசமைப்பு போன்று கோஷம் எழுப்பினர். திமுக எம்.பி.க்கள் பலர் கருணாநிதி வாழ்க, பெரியார் வாழ்க, முக ஸ்டாலின் வாழ்க, உதயநிதி ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர்.

    ஹைதராபாத் தொகுதி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி உருது மொழியில் பதவியேற்று கடைசியில் 'ஜெய் பாலஸ்தீனம்' என கோஷமிட்டார். எம்.பி.க்கள் பலர் பாரத் மதா கி ஜே என கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் இனி எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின்போது எந்த கோஷங்களையும் எழுப்பக்கூடாது. நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக்கூடாது. உறுதி மொழிக்கான படிவத்தின் முன்பாகவும், பின்பாகவும் எந்த வார்த்தைகளையும் சேர்க்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    • மத்திய அமைச்சரை வீழ்த்தி முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்தார் முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்.
    • தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள்

    பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வரும் நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக மீது காரசாரமான முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    அந்த வகையில் வன்முறையால் துண்டாடப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் பாஜக மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தி வெற்றிபெற்று முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்த முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்-க்கு நேற்று இரவு கூட்டம் முடியும் சமயத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

    ஏற்கனேவே பலர் கூட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகளுக்கு மத்தியில் பிமோல் பேசத் தொடங்கினார். ஆனால் அவரின் பேச்சு அனைவரையும் வாயடைக்கச் செய்வதாக மிகவும் கூர்மையாக இருந்தது.

     

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது, மணிப்பூரில் இன்னும் 60,000 மக்கள் மிகவும் மோசமான நிலையில் நிவாரண முகாம்களில் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்களின் அவஸ்த்தையும் கோபமும் என்னைப்போன்ற ஒரு ஒன்றுமற்ற மனிதனை  அமைச்சராக இருந்தவரை வீழ்த்தச் செய்து ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்துக்கு என்னை அனுப்பியுள்ளது. அந்த வலியை எண்ணிப்பாருங்கள். ஆனால் நமது பிரதமர் [மணிப்பூர் விஷயத்தில்] மௌவுனமாக உள்ளார். ஜனாதிபதி உரையிலும் மணிப்பூர் கலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெற வில்லை. இந்த மௌனம் சாதரணமானது அல்ல.

    மவுனம் தான் மணிப்பூர் போன்ற தென்கிழக்கு மாநிலங்களிடம் நீங்கள்  பேசும் மொழியா? என்று நீங்கள் அக்கறை காட்டாத மணிப்பூர் மாநிலம் உங்களை பார்த்து கேட்கிறது, மணிப்பூரில் 200 க்கும் மேற்பட்டோர் கலவரத்தால் இறந்தனர். உள்நாட்டுப்போர் நடப்பது போன்ற சூழலே அங்கு உள்ளது . ஆனால் கடந்த 1 வருடமாக அது யார் கண்களுகும் தெரியவில்லை.

    உங்கள் நெஞ்சில் கைவைத்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று நிற்பவர்களையும், தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூரை பற்றி மோடி பேசத் தொடங்கினாள் நான் அமைதி ஆகிறேன் என்று தெரிவித்தார் 

    • இந்திய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.
    • உங்கள் அறிவுரைகளை முதலில் தமிழக முதல்வருக்கு வழங்குங்கள் என்றார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47-ல் நாடு முழுவதும் போதைப் பொருள் சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி நான் வேதனை அடைகிறேன். ஒன்றிய அரசுக்கு அந்த வேதனை இருக்கிறதா என கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இந்தியா முழுவதும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன.

    கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. ஆகவே, இந்திய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    அப்போது எழுந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பை, மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதை வரவேற்கிறேன். அதேசமயம், திருமாவளவன் கூட்டணியில் உள்ள தி.மு.க. ஆளும் தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை அருந்தி 56 பேர் வரை உயிரிழந்துள்ளனர். உங்கள் அறிவுரைகளை முதலில் தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என காட்டமாகக் கூறினார்.

    இதற்கு தி.மு.க, வி.சி.க. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

    ×