என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    • நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்று ராகவ் சத்தா தெரிவித்தார்.
    • மாநிலங்களவையில் மசோதா தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத்திருத்த மசோதா- 2023 என்ற இந்த மசோதாவை உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் அறிமுகம் செய்து பேசினார்.

    இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா கூறுகையில், இந்த மசோதா முந்தைய அவசரச் சட்டத்தை விட மோசமானது என்றும், நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களிலேயே மிகவும் ஜனநாயக விரோத பேப்பர் என்றும், இது ஜனநாயகத்தை அதிகாரத்துவம் மூலம் மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டார்.

    இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்து ஆளுநர் மற்றும் அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கும் எனவும் ராகவ் சத்தா தெரிவித்தார்.

    மக்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய உறுப்பினர்கள் இருப்பதால் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

    • மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இந்த மசோதாவுக்கான எதிர்ப்புகள் அனைத்தும் அரசியல் என அமித் ஷா தெரிவித்தார்.

    டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்திற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதை பாராளுமன்றத்தில் சட்டமாக்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார். இதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இந்நிலையில், டெல்லி சேவைகள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முன்னதாக மசோதா தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, டெல்லி தொடர்பாக எந்த மசோதாவையும் கொண்டு வருவதற்கு மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்ற சமீபத்திய தீர்ப்பில் ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

    'டெல்லி தொடர்பாக எந்த சட்டத்தையும் இயற்றும் அதிகாரத்தை அரசியலமைப்பு இந்த அவைக்கு வழங்கியுள்ளது. டெல்லி மாநிலம் தொடர்பாக பாராளுமன்றம் எந்தச் சட்டத்தையும் கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. இந்த மசோதாவுக்கான எதிர்ப்புகள் அனைத்தும் அரசியல். இந்த மசோதாவை கொண்டு வர அனுமதிக்கவேண்டும்' என அமித் ஷா பேசினார்.

    • எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை வரமாட்டேன் என கூறியதாக தகவல்.
    • பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி மக்களவையை தலைமை தாங்கி நடத்தினார்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இவ்வாறு மக்களைவயில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக நேற்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

    பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை நடவடிக்கைகள் இன்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்வதாக அதிருப்தி
    • நேற்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது.

    இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர் இருக்கைக்கு வரவில்லை. ராஜேந்திர அகர்வால் தலைமை தாங்கினார். அப்போது காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ''அவை நடவடிக்கைகளை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவர் எங்களுடைய பாதுகாவலர்'' என்றார்.

    உடனே, இன்று அவைத்தலைவராக இருக்கும் ராஜேந்திர அகர்வால், ''இந்த தகவலை அவருக்கு தெரிவிக்கிறேன்'' என்றார்.

    முன்னதாக,

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு மக்களவையில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார்.

    குறிப்பாக நேற்றுமுன்தினம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • மசோதாவை முறியடிக்க பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், கட்சி தலைவர்களையும் சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு திரட்டினார்.
    • 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. எனவே, இந்த அவசர சட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.

    அப்போது யூனியன் பிரதேசங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றும், டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால், விதிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமித் ஷா கூறினார்.

    மேலும் இந்த மசோதாவைக் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தையும் அமித் ஷா முன்வைத்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சிதறிவிடும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படவில்லை, கூட்டணியை காப்பாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் என சாடினார்.

    அமித் ஷா பதிலுரை வழங்கிய பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

    • மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசும்போது ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.

    அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் பேசினர்.

    டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பா.ஜ.க. பேசிவந்த நிலையில் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசிக் கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர்.

    இதனால் கோபமடைந்த அவர், வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத் துறை வரும் என எச்சரித்தார்.

    பாராளுமன்றத்தில் எம்.பி.க்களை மிரட்டும் அவரது இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.
    • இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    மக்களவையில் மீண்டும் என்னை நியமித்ததிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    முன்பு, பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியை மையமாக வைத்து பேசினேன்.

    அதானி குறித்து நான் தெரிவித்த கருத்து சில மூத்த உறுப்பினர்களுக்கு கஷ்டமாக இருந்தது. இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றேன். எனது யாத்திரை இன்னும் முடியவில்லை.

    கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியபோது நாட்டையும், மக்களவையும் பார்க்க விரும்பினேன்.

    யாத்திரையின் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.

    யாத்திரையின்போது நிறைய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.

    யாத்திரை செல்ல செல்ல சாமானிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    பயிர் காப்பீடு குறித்து விவசாயி பகிர்ந்த வலி என்னையும் தொற்றிக் கொண்டது.

    நாட்டு மக்களின் வலியை உணர வேண்டும். மக்களின் துக்கமே எனது துக்கம். அவர்களின் வலியே எனது வலி.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை.
    • மணிப்பூரை இன்று நீங்கள் இரண்டாக பிரித்துவிட்டீர்கள்.

    மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி தனது உரையை தொடங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவையில் மீண்டும் என்னை நியமித்ததிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    முன்பு, பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியை மையமாக வைத்து பேசினேன்.

    அதானி குறித்து நான் தெரிவித்த கருத்து சில மூத்த உறுப்பினர்களுக்கு கஷ்டமாக இருந்தது. இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றேன். எனது யாத்திரை இன்னும் முடியவில்லை.

    கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியபோது நாட்டையும், மக்களவையும் பார்க்க விரும்பினேன்.

    யாத்திரையின் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.

    யாத்திரையின்போது நிறைய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.

    யாத்திரை செல்ல செல்ல சாமானிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    பயிர் காப்பீடு குறித்து விவசாயி பகிர்ந்த வலி என்னையும் தொற்றிக் கொண்டது.

    நாட்டு மக்களின் வலியை உணர வேண்டும். மக்களின் துக்கமே எனது துக்கம். அவர்களின் வலியே எனது வலி.

    மணிப்பூரை இன்று நீங்கள் இரண்டாக பிரித்துவிட்டீர்கள். சில நாட்களுக்கு முன்பாக நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை. மணிப்பூரில் பிரதமர் செய்யாததை தான் செய்தேன்.

    மணிப்பூரில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினேன். தனது கண் முன்னே தனது ஒரே மகனை சுட்டுக் கொன்றுவிட்டதாக மணிப்பூர் பெண் ஒருவர் சொன்னார்.

    மகனை இழந்த பெண் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறியதாக கூறினார். ஒரு புகைப்படத்தை காட்டி இதுவே என்னிடம் இருக்கும் மிச்சம் என அந்த பெண் சொன்னார்.

    மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை.

    இந்திய தேசத்தை மணிப்பூர் சம்பவத்தின் மூலம் கொன்றுவிட்டது. பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டுமல்ல நாட்டையே மணிப்பூரில் கொன்றுவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் மாநில மக்களின் குரசை நசுக்கிவிட்டீர்கள்.
    • நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. தேச துரோகிகள்.

    மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது, மணிப்பூர் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்தார்.

    இந்நிலையில், மணிப்பூர் சம்பவம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

    ஆளுங்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:-

    மணிப்பூர் மாநில மக்களின் குரலை நசுக்கிவிட்டீர்கள்.

    மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரத தாயை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்.

    நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. தேச துரோகிகள்.

    இந்திய ராணுவத்தால் மணிப்பூர் கலவரத்தை ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் அதை செய்யவில்லை.

    நாட்டு மக்களின் குரலை கேட்காமல் யாரின் குரலை பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார் ?

    ராவணன் மேகலா, கும்பகர்ணன் ஆகிய இரண்டு பேரின் பேச்சை மட்டுமே கேட்டார். ராவணனை போல் பிரதமர் மோடியும் அமித்ஷா, அதானி ஆகிய இரண்டு பேரின் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இலங்கையை எரித்தது அனுமான் இல்லை. ராவணனின் ஆணவம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் அன்பை பெற்ற பிரதமராக மோடி உள்ளார்.
    • அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் காங்கிரஸின் உண்மையான நோக்கம்.

    ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை.

    மக்கள் அரசின் மீது அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளனர்.

    அறதிப் பெரும்பான்மையுடன் பாஜக அரசு 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த 9 ஆண்டுகளில் 50 வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

    இதே நாளில்தான் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவங்கினார்.

    மக்களின் அன்பை பெற்ற பிரதமராக மோடி உள்ளார்.

    ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பிரதமர் மோடி ஓய்விவன்றி உழைக்கிறார்.

    மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசுக்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை அம்பலத்படுத்தும்.

    அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் காங்கிரஸின் உண்மையான நோக்கம்.

    வெற்றி முழக்கங்களை முன்வைத்து ஏழைகளின் வாக்குகளை பெற்ற காங்கிரஸ்.

    பிரதமர் மோடி ஏறத்தாழ 9 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளார்.

    2 டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து கொரோனா வைரஸில் இருந்து 130 கோடி இந்தியர்களை மோடி அரசு காப்பாற்றியது.

    பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பாடுபட்டு வருகிறார்.

    11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை பிரதமர் நேரடியாக வழங்கியுள்ளார்.

    விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக அவர்கள் கடனே வாங்க வேண்டியதில்லை என்ற நிலையை கொண்டு வர எங்கள் அரசு செயல்படுகிறது.

    அரசியல் உள்நோக்கத்துடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு நாம் கொடுப்பது இலவசம் அல்ல.

    விவசாயிகளிடம் காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இலவச திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது எங்களின் நோக்கம் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும்.
    • வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை.

    மக்களவையில் இன்று மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

    அவர் பேசுகையில், " மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்.

    மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பு மக்களிடையே பேசியுள்ளேன். மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் உண்மையிலேயே எதிர்க்கட்சிகளை விட, எங்களுக்குத்தான் வலி அதிகம். எனினும், அந்த சம்பவம் அவமானமானது என்றால், எதிர்க்கட்சிகள் அதனை அரசியாக்குவது மேலும் அவமானமானது

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிக வன்முறைகள் நடைபெற்றுள்ளன. வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை.

    மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவதற்கு முதல் நாளில் இருந்தே தயாராக இருந்தோம். மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் கூடி எழுதியுள்ளேன்.

    ஒரு முதலமைச்சர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் மாற்றலாம். மணிப்பூர் முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் முழுவதும் ஒத்துழைக்கிறார்" என்றார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விக்கு உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.
    • நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை மக்களவையில் பதில் உரை வழங்குவார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. மேலும் , பாராளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

    மேற்கண்ட கோரிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

    இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்து காட்டமாகப் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி உரையாற்றினார்.

    இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.

    மேலும், மணிப்பூரில் அனைத்துப் பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நாளை பதில் அளிப்பார். குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நிச்சயம் பதிலடி கொடுப்பார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×