என் மலர்
நீங்கள் தேடியது "வனக்காப்பாளர்"
- பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் மற்றும் பாக்கம்பாடி இந்த பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் நேற்று இரவு வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கால சமுத்திரம் பகுதியில் இருந்து பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கள்ளத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. உடனே, அவர்களை மடக்கி பிடித்தபோது வேல்முருகனின் காலில் கள்ள துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் இருவரை பிடித்து உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அந்த 2 பேரின் பெயர் செல்லக்கண்ணு, சரவணன் எனவும், இவர்கள் எதற்காக கள்ளத் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்பது போன்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டியை சேர்ந்தவர் மலையன். இவரது வளர்ப்பு நாய் அங்குள்ள மலைப்பகுதியில் ஒரு உடும்பை பிடித்து வந்தது. அதனை மலையன் வீட்டில் சமைத்து வைத்திருந்தார்.
தகவல் அறநித ராசிபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமானூர் வனக்காப்பாளர் சுப்பிரமணி மலையன் வீட்டிற்கு சென்று உடும்பை பிடித்து சமைத்ததற்காக வன விலங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்போவதாக மிரட்டினார்.
மேலும் கைது செய்யாமல் இருக்க ரூ.20 ஆயிரம் கொடுக்குமாறு ம் கூறினார். இதனால் பயந்து போன மலையன் ரூ.1500 கொடுத்தார். அப்போது மேலும் 10 ஆயிரம் ரூபாய் கேட்ட வனக்காப்பாளர் சுப்பிரமணி உடனே ரூ. 2500 தர வேண்டும் என கூறி மிரட்டினார்.
மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மலையன் இந்த சம்பவம் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் படி நேற்று தும்பல்பட்டிக்கு வந்த வனக்காப்பாளர் சுப்பிரமணியனிடம் ரூ.2500 -ஐ மலையன் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேறு நபர்களிடம் இப்படி மிரட்டி பணம் வாங்கினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சுப்பிரமணி விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார் என வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #bribe