என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » slug 140018
நீங்கள் தேடியது "slug 140018"
குட்கா ஊழல் வழக்கில் புகார் கூறப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் அதிரடி விசாரணை தொடங்கியது. 30 போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். #Gutkascam
சென்னை:
ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதலில் இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.
பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் கையில் எடுத்தனர். கையில் எடுத்தவுடன் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீசின் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் ‘டி.ஜி.பி.’ டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து குட்கா வியாபாரியும் தொழில் அதிபருமான மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக அவர்கள் 6 பேர் மீதும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து விட்டனர்.
மேலும் 2-வது கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை மையமாக வைத்து சி.பி.ஐ. அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்து ஜனவரி மாதம் முதல் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812280522114161_1_nm1906gs._L_styvpf.jpg)
விசாரணைக்கு வந்த 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியிடவில்லை.
குட்கா வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், குட்கா ஊழல் நடந்த போது சென்னை போலீசில் பணியாற்றிய 30 பேரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சென்னை நகரின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் இடம் பெற்றிருந்த 30 பேரின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை களத்தில் தற்போது இறங்கி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரிடம் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkascam
ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதலில் இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.
பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் கையில் எடுத்தனர். கையில் எடுத்தவுடன் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீசின் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் ‘டி.ஜி.பி.’ டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து குட்கா வியாபாரியும் தொழில் அதிபருமான மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக அவர்கள் 6 பேர் மீதும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து விட்டனர்.
மேலும் 2-வது கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை மையமாக வைத்து சி.பி.ஐ. அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்து ஜனவரி மாதம் முதல் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் ஜனவரி வரை காத்திருக்காமல், போலீஸ் அதிகாரிகளிடம் நேற்று விசாரணை தொடங்கிவிட்டது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் நேற்றைய விசாரணைக்கு ஆஜரானதாக தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு வந்தவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு பின்பக்க வாசல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812280522114161_1_nm1906gs._L_styvpf.jpg)
விசாரணைக்கு வந்த 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியிடவில்லை.
குட்கா வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், குட்கா ஊழல் நடந்த போது சென்னை போலீசில் பணியாற்றிய 30 பேரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சென்னை நகரின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் இடம் பெற்றிருந்த 30 பேரின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை களத்தில் தற்போது இறங்கி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரிடம் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkascam
சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். #CBIVsCBI #CBIExtortionClaim
புதுடெல்லி:
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மொயின் குரேஷி மீதான வழக்கை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அவ்வழக்கில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா மீது சந்தேகம் எழுந்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810240810534632_1_CBI-Nageswara-Rao2._L_styvpf.jpg)
அவரை வழக்கில் இருந்து விடுவிக்க அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக மந்திரிசபை செயலாளருக்கு ராகேஷ் அஸ்தானா கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி கடிதம் எழுதினார். அந்த கடிதம், ஊழல் கண்காணிப்பு ஆணையரின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. சதீஷ் சனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் மோசடி செய்ததாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல், சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்று சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது. #CBI #NageswaraRao #CBIVsCBI #CBIExtortionClaim #CBIvsAlokVerma
×
X