என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் காவலரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சில்மி‌ஷம்"

    திருச்சி அருகே பெண் ஏட்டுவுடன் போலீஸ் நிலையத்தில் அத்துமீறி நடந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது, மிரட்டி பாலியலில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #womanpolicemolestation
    திருச்சி

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 51). இவர் கடந்த 10-ந்தேதி இரவுப்பணியில் இருந்த போது அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் 32 வயதுள்ள பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தகவல் வந்தது. இந்த சம்பவம் நடந்த போது நேரில் பார்த்த உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் இதனை நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் ஏட்டும் போலீசில் புகார் செய்தார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக், எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பி ரமணியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். சம்பவம் நடந்தபோது இருவரும் பணியில் இருந்ததால் துறை ரீதிகயாவும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் உள்ள அந்த வீடியோவில் எஸ்.எஸ்.ஐ. காவல் நிலையத்திற்கு வந்தததும் பெண் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுபோல் பதிவாகியிருந்தது.

    ஆனால் பெண் ஏட்டு தன் இருக்கையை விட்டு எழும்பாமல் அமர்ந்தபடியே இருந்திருந்தார். இதனால் அவரின் சம்மதத்துடனேயே இது நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். புகார் அளித்த பெண் ஏட்டு மருத்துவ விடுப்பு பெற்றுக் கொண்டு விடுமுறையில் சென்று விட்டார்.

    டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் ஏட்டுவின் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறிய தகவல்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்கப்பட்டது.
    பெண் ஏட்டு அளித்த தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. பாலசுப் பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல் என்ற 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் தன் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? அவரின் சம்மதத்துடன் தான் முத்தம் கொடுத்தேன் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் எதிராக புகார் ஏதும் செய்யாததால் பெண் போலீசின் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #womanpolicemolestation
    போலீஸ் நிலையத்தில் பெண் ஏட்டை கட்டிப்பிடித்து முத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டரின் ‘லீலை’ வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில போலீசார் மீதும் நடவடிக்கை பாய்கிறது.

    திருச்சி:

    திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு ஒருவரை அதே போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன் (வயது 53) என்பவர் இரவுப்பணியின் போது கட்டிப்பிடித்து முத்தமிட்ட சம்பவம் நடந்தது.

    அப்போது திடீரென அங்கு வந்த உளவுப்பிரிவு ஏட்டு இதைபார்த்து திடுக்கிட்டார். உடனே அந்த பெண் போலீஸ் ஏட்டு, தன்னை சப்-இன்ஸ்பெக்டர் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறினார்.

    இது குறித்து பெண் போலீஸ் ஏட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டிடம் அந்த பெண் போலீஸ் ஏட்டு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் திடீரென கட்டிப் பிடித்ததை எதிர்பார்க்காததால் ஆத்திரத்தில் அவரை தான் அணிந்திருந்த காலணியால் அடித்ததாகவும் கூறினார்.

    இந்த நிலையில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் ஏட்டு சம்மதத்துடனேயே லீலை நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ஒரு தகவல் வந்தது.

    உடனே போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைப்பார்த்த போது அதில் இரவு 10 மணிக்கு வெளியில் ரோந்து பணிக்கு செல்ல வேண்டிய பாலசுப்பிரமணியன் 10.29 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வருகிறார்.

    அப்போது கம்ப்யூட்டர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் பெண் போலீஸ் ஏட்டு அருகில் சென்று பேசுகிறார். பிறகு அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார். பிறகு உதட்டுடன் உதடு வைத்து முத்தமிடுகிறார்.

    இந்த காட்சி 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடுகிறது. இதை பார்த்த உயர் அதிகாரிகள் பெண் போலீஸ் ஏட்டு சம்மதத்துடனேயே இது நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண் போலீஸ் ஏட்டு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் காம லீலை நடத்திய சிறப்பு சப்-இன்பெக்டர் பாலசுப்பிரமணியன் மீதும் பெண் போலீஸ் ஏட்டு மீதும் அடுக்கடுக்கான புகார்கள் குவிகின்றன. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் ஏற்கனவே திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து சர்ச்சையில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது.

    அதேபோன்று சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு வந்தது முதல் சக போலீசாருடன் கருத்து வேறுபாட்டிலேயே இருந்துள்ளார். இரவு ரோந்து பணி கொடுக்கப்பட்டாலும் அவர் ரோந்து செல்லாமல் போலீஸ் நிலையத்திற்கு வந்து விடுவார்.

    இதற்கிடையே பெண் போலீஸ் ஏட்டு வேறு போலீசாருடனும் பழக்கத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட போட்டியில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் பொறி வைத்து சிக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை தொடர்ந்து மேலும் சிலர் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அங்குள்ள காமிராவில் பதிவான காட்சிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் நடந்தது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முதலில் பெண் போலீஸ் ஏட்டு புகார் தெரிவிக்க மறுத்துள்ளார். புகார் கொடுத்தால் அனைத்தும் அம்பலமாகி விடும் என நினைத்து பயந்துள்ளார்.

    ஆனால் அவரை மட்டும் காப்பாற்றி விடலாம் என நினைத்து அவரை அழைத்து சென்று புகார் கொடுத்ததால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு இன்று அனைத்து குட்டுகளும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனால் அந்த பெண் போலீஸ் ஏட்டு கலக்கத்தில் உள்ளார்.

    இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் மற்ற போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர். அதே போல் போலீஸ் நிலையத்தில் பதிவான வீடியோக காட்சிகள் வெளியே கசிந்தது எப்படி என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. 

    ×