என் மலர்
நீங்கள் தேடியது "மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்"
கம்பம்:
கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பகவதி (33). கணேசனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பகவதி தனது கணவர் மீது சுடு நீரை ஊற்றினார். இதனால் அரிவாள் மனையால் தனது மனைவியின் தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் கணசேன் வெட்டினார்.
இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பகவதியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கணேசனும் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.