என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை தாக்குதல் வழக்கு"

    • லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
    • தாக்குதலுக்கு பிறகு ராணாவிடம் ஹெட்லி மும்பைக்கு செல்ல வேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் என்.ஜ.ஏ. காவல் அளித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதையடுத்து அவர் என்.ஐ.ஏ. தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள ராணாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் மும்பை தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தாவூத் கிலானி என்று அழைக்கப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லியின் நம்பிக்கைக்கு உரியவராக ராணா திகழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அன்று தொடங்கிய அவர்கள் நட்பு தொழிலில் பங்குதாரராக ஆகும் அளவுக்கு விரிவடைந்தது. பின்னர் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு முன்பாக துபாயை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை ராணா சந்தித்து சதிதிட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? அவருக்கும், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ராணாவிடம் துருவி துருவி கேள்வி கேட்டனர்.

    அப்போது அவரை பற்றிய பல்வேறு விவரங்களை ராணா கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நபர் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    மும்பை தவிர இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் ராணா தனது மனைவியுடன் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர், ஆக்ரா மற்றும் டெல்லி, கேரள மாநிலம் கொச்சி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் அவர் தனது மனைவியுடன் தங்கிய விவரம் தெரிய வந்துள்ளது.

    அவர் இந்தியாவை வேவு பார்க்க வந்து இருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு ராணாவிடம் ஹெட்லி மும்பைக்கு செல்ல வேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக ராணாவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் முடிவில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். #ImranKhan #bjp
    இஸ்லாமாபாத்:

    பயங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்று பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் தொடர்ச்சியான கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. 

    பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்தியா தரப்பில் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இம்ரான் கான், இந்தியாவில் ஆளும் கட்சியான பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளார். 

    மும்பை தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள இம்ரான் கான், “இவ்வழக்கின் நிலையை ஆய்வு செய்ய அரசை கேட்டுக் கொண்டுள்ளேன். பயங்கரவாதம் தொடர்பானது, இவ்வழக்கை தீர்ப்பதில் நாங்கள் நாட்டம் கொண்டுள்ளோம்,” என குறிப்பிட்டுள்ளார்.  #ImranKhan #bjp
    ×