என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை மழை"
- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
- காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று பலமாக வீசவதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இருப்பினும், காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இது வெயிலை தணித்து இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பொது மக்கள் உற்சாகமாக உள்ளனர். மேலும், பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மயைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
- ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
சென்னை:
கோடை வெயில் தாக்கம் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகமாக இருந்தது. வெப்பம் படிப்படியாக அதிகரித்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென்று கோடை மழை பெய்தது.
சென்னையில் இன்று காலை வெயில் அடித்தப்படி இருந்தது. சுமார் காலை 9 மணியளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் சென்னையின் சில இடங்களில் மழை பெய்தது. பின்னர் படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. அதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மதுரவாயல், பூந்தமல்லி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. அதே போல் காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாட்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தின் போது இருக்கும் சூழல் இன்று நிலவியது.
திடீர் மழை காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நிலவரப்படி சென்னை மேடவாக்கத்தில் 13 செ.மீ. மழை பெய்து உள்ளது. வளசரவாக்கத்தில் 11 செ.மீ., சாலி கிராமம், நெற்குன்றத்தில் தலா 10 செ.மீ., மணலியில் 9 செ.மீ., பாரிமுனையில் 8 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், ராஜாஅண்ணாமலைபுரத்தில் தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 6 செ.மீ., அடையாறில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
- மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும்.
- நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 22-ந்தேதி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
* மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும்.
* நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.
* தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மும்பை-ஐதராபாத், பெங்களூரு-சென்னை, திருச்சி-சென்னை விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்று, கனமழையின் காரணமாக ஒவ்வொரு விமானமும் தரையிறங்குவதில் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் தரையிறங்க வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடித்து வருகிறது.
- சென்னையில் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது
- காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், சென்னையில் அடுத்த 1 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
- பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. குறிப்பாக பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் வரும் 5-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழைக்கு வாயப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.
இதற்கிடையே, மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- சென்னை புளியந்தோப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
- புளியந்தோப்பு டிமெல்லர்ஸ் சாலையில் கே.பி. பூங்கா அருகே இன்று காலையிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கிடந்தது.
சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது.
7 மணி அளவில் தூறிக் கொண்டிருந்த மழை இரவு 10 மணிக்கு பிறகு பலத்த மழையாக மாறியது. சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் இரவில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், சைதாப்பேட்டை, வேப்பேரி, பூக்கடை, புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், மதுரவாயல், போரூர், கே.கே.நகர், கிண்டி உள்ளிட்ட சென்னையின் அனைத்து பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய மழை பெய்தது.
இரவில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கினாலும் சில இடங்களில் மழைநீர் உடனடியாக வடிந்தது. ஆனால் சென்னையில் சில இடங்களில் இன்று காலையிலும் வெள்ளம் வடியாமல் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை புளியந்தோப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. புளியந்தோப்பு டிமெல்லர்ஸ் சாலையில் கே.பி. பூங்கா அருகே இன்று காலையிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கிடந்தது.
இதனால் இன்று காலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புளியந்தோப்பு, பெரம்பூர், அயனாவரம், சென்ட்ரல், பாரிமுனை, வேப்பேரி போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் இந்த சாலையையே பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
இன்று காலையில் தண்ணீர் சற்று வடியத் தொடங்கியது. அங்கு மோட்டார் பம்பு மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. பட்டாளம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் இந்த வழியாக சென்ற வாகனங்கள் பழுதானது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றனர்.
ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு நேற்று இரவு பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீர் உடனே அகற்றப்பட்டது. ராயப்பேட்டை ஜி.பி. சாலையிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை பகுதியிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.
ராயபுரம் ராஜகோபால் தெரு, லோட்டஸ் ராமசாமி தெரு, புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர், திருவள்ளூர் குடியிருப்பு, இளையதெரு ஆகிய இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
பழைய வண்ணாரப்பேட்டை சி.பி.சாலை ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வ.உ.சி.நகர் 28-வது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கீழ் தளத்தில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் இருக்கும் மழைநீரை வாளிகள் மூலம் பொதுமக்கள் எடுத்து வெளியே ஊற்றி வருகின்றனர்.
அதேபோல் பெரம்பூர் சுரங்கப்பாதையிலும் இன்று காலையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலத்தில் நேற்று இரவு மழை பெய்தபோது தண்ணீர் தேங்கியது. இன்று காலையில் வடிந்தது.
சென்னை மந்தவெளி சி.ஐ.டி. காவலர் குடியிருப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு மோட்டார் பம்பு மூலம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் மழைநீர் வடிகால்வாய் வழியாக அப்புறப்படுத்தப்படுகிறது.
திருவொற்றியூர் மேற்கு பகுதி ஆதிதிராவிடர் காலனியில் மழை வெள்ளம் இடுப்பு அளவு தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
திருவொற்றியூர் ராஜா சண்முகபுரம், ராஜா சண்முகம் நகர் பகுதிகளில் மழைநீர் நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனுக்குடன் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மணலியில் கண்ணபிரான் தெரு, வேலு தெருக்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
சென்னையில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்துவதற்காக மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்குவது பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனுக்குடன் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மழை காரணமாக மரம் விழுந்தாலும், கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டாலும், மின்வெட்டு, மின் கசிவு ஏற்பட்டாலும் அதை சரி செய்யவும், சீரமைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்தது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் இன்று காலை 8 மணி அளவில் மழை பெய்தது.
இதேபோல் மீனம்பாக்கம், ஆலந்தூர், போரூர், நந்தம்பாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் ஆகிய இடங்களிலும் இன்று காலையில் மீண்டும் மழை பெய்தது.
இதனால் இன்று காலையில் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை செங்குன்றத்தில் 12.7 செ.மீ, நுங்கப்பாக்கத்தில் 7 செ.மீ, மீனம்பாக்கத்தில் 3 செ.மீ, நாகர்கோவிலில் 2 செ.மீ மழை பெய்துள்ளது.
4 நாட்கள் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது
- 400 மோட்டர்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- சென்னையில் இதுவரை 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. 75 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மரம் அகற்றுவது, மின்கம்பம் அகற்றுவது, மெட்ரோ ரெயில் பணிகள் போன்ற காரணங்களால் சில இடங்களில் இந்த பணிகள் தாமதமானது.
கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் இந்த ஆண்டு சுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை செய்துள்ளது. 75 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளையும் நிறைவு செய்ய ஆயத்தமாகியுள்ளோம். சென்னையில் 400 மோட்டர்கள் வைத்து தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் பெய்து வரும் கனமழையையொட்டி அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் பகுதியில் இன்று காலை மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 220 கி.மீ. தூர அளவுக்கு ரூ.710 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. 157 கி.மீ. தூர அளவுக்கு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.
இதுபோன்று பணிகள் முடிவடைந்த பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதற்கு முன்னர் 700 இடங்கள் வரையில் தண்ணீர் தேங்கி காணப்படும். தற்போது 40 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் 9 இடத்தில் மட்டுமே மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் செம்மஞ்சேரி பகுதிகளும் பாதிப்பை சந்தித்து வந்தது. இந்த பாதிப்புகளை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக செம்மஞ்சேரி பகுதியில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. கல்லுக்குட்டை, புழுதிவாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.
ஓரிரு இடங்களில் தேங்கும் மழைநீரும் ½ மணி நேரத்தில் வடிந்து விடுகிறது. கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பணிகள் நடைபெற்றதால் அங்கு இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இங்கு தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஆனால் தற்போது 2 இஞ்ச் அளவுக்கு அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலை மற்றும் பி.டி.ராஜன் சாலை பகுதியில் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டார். இதனால் கால்வாய் ஆக்கிரமிப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 155 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களின் போது மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த முறை மழை பெய்ய தொடங்கிய உடனேயே சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கி இருந்ததை காண முடிந்தது. இதனால் பல சுரங்க பாதைகள் மூடியே கிடந்தன. ஆனால் தற்போது கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டுமே வாகன போக்கு வரத்து தடைபட்டுள்ளது. மற்ற 15 சுரங்க பாதைகளும் எப்போதும் போல செயல்படுகின்றன. மழை பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- சில இடங்களில் மிதமானதாகவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, நவ.2-
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. ஓரளவு தண்ணீர் தேங்கி னாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.
ஆனால் உட்புற சாலை கள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மோட்டார் கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள் ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.
சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.
சென்னையை பொறுத்த வரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1-ந் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் மிதமானதா கவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள வானிலை முன்னறி விப்பில் கூறி இருப்பதா வது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறப் பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சுநிற அலர்ட் கொடுக் கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் வருமாறு:-
சென்னை, செங்கல் பட்டு, காஞ்சீபுரம், ராணிப் பேட்டை, வேலூர், திருவண் ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட் டங்களில் இன்று 2-வது நாளாக பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை விடப் பட்டு உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் வசிப் பவர்கள் கவனமாக இருக் கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்கள்.
சென்னை மாநகர பகுதி யில் 19,500 ஊழியர்கள் வெள்ள நிவாரண பணி களில் ஈடுபட்டுள்ளார்கள் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குதல், தேங் கிய தண்ணீரை மோட்டார் கள் மூலம் அகற்றும் பணி களை செய்து வருகிறார்கள்.
கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
நுங்கம்பாக்கத்தில் நேற்று காலை வரை 8 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை அதை விட அதிகமாக பெய்துள் ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 12.9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் மீனம் பாக்கத்தில் 10.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.