என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப்-இன்ஸ்பெக்டர் கொலை"

    மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மீது மாதா சிலையை உடைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63), ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர். இவர், ஓய்வு பெற்ற பிறகு மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ ஆலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆலயத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சுந்தர்ராஜனை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் கைப்பற்றிவிசாரணை நடத்தியதில் சுந்தர்ராஜை தாக்கியது ஆணையடி மாத்தார் பகுதியைச் சேர்ந்த ரவி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான், மனவருத்தத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மார்த்தாண்டம் ஆலயத்திற்கு சென்றேன். அப்போது காவலாளி சுந்தர்ராஜை தாக்கினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். திருவட்டார் அருகே ஆணையடி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் சொரூபத்தையும் உடைத்தேன் என்றார். போலீசார் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ரவி, நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    திருவட்டார் பகுதியில் ஆணையடி பகுதியில் மாதா சொரூபத்தை உடைத்ததாகவும், திருவட்டார் போலீசார் ரவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர், ஏற்கனவே 10நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (வயது65). ஓய்வுபெற்ற சப்- இன்ஸ்பெக்டர். இவர் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்.

    பின்னர் நிலத்தை பார்வையிட்டு விட்டு அங்குள்ள மோட்டார் கொட்டகைக்கு வந்தார். அங்கு அப்துல் ஜபாரை மர்ம மனிதர்கள் சிலர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    பின்னர் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து கொலைசெய்யப்பட்ட அப்துல் ஜபாரின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது 1 ஜோடி செருப்பு மட்டும் கிடைத்தது. வேறு தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் குற்ற வாளிகளை கண்டு பிடிப்பது போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் குற்றவாளிகளை பிடிக்க உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பிரகாஷ், சிவச்சந்திரன், அகிலன், திருமால் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர் அப்துல்ஜபார் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த 1 ஜோடி செருப்பை வைத்து விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த செருப்பு பெங்களூரில் வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரில் குற்றவாளிகள் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே தனிப்படை போலீசார் பெங்களூர் சென்றனர்.

    இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவர் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (வயது 23) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த செருப்பு திலீப்குமாருடையதுதான் என்று தெரியவந்தது.

    அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திலீப்குமார் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள எடப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் உறவினர் என்பதும் தெரியவந்தது.

    திருவெண்ணை நல்லூரில் உள்ள பெண்ணையாற்றில் மோகன் திருட்டுத்தனமாக லாரிகளில் மணல் ஏற்றி விற்பனை செய்து வந்தார். இதை ஓய்வு பெற்ற சப்- இன்ஸ் பெக்டர் அப்துல் ஜபார் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வந்தார். இதனால் அடிக்கடி மோகனின் மணல் லாரிகளை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மோகன் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ் பெக்டர் அப்துல்ஜபாரை கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் மோகன் மற்றும் அவரது தம்பி ரவி, டிரைவர் செல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டினர். பின்னர் அப்துல்ஜபாரை கொலை செய்வதற்காக பெங்களூரில் உள்ள தனது உறவினர் திலீப்குமாரை திருவெண்ணை நல்லூருக்கு வரவழைத்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து மோட்டார் கொட்டகையில் இருந்த அப்துல் ஜாபரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திலீப்குமாரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திலீப்குமார் கூலிப்படை யை சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் குறிப்பிடதக்கது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மோகன், ரவி, செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    ×