search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்"

    கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சென்னை:

    கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    16.11.2018 அன்று ‘கஜா’ புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே கரையைக் கடந்தபோது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.



    எனினும், புயலின் தாக்கத்தினால், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

    ‘கஜா’ புயல் கரையை கடப்பதற்கு முன்பும், கடந்த பின்னரும், எனது தலைமையில் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பல்வேறு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி, மண்எண்ணெய் மற்றும் பருவ மழையிலிருந்து வீடுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கூரை மேல் போடுவதற்கு தார்பாய்கள் போன்றவை உடனடியாக வழங்க உத்தரவிட்டிருந்தேன்.



    எனது உத்தரவின் பேரில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு பிற மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் அனுப்பப்பட்டு, நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் இரவு-பகல் பாராது, பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலேயே தங்கி, சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றி வரும் அனைத்து துறை பணியாளர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

    இந்தநிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த, திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில், ஓட்டுனராக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியனின் மகன் பி.நாகராஜ் 25-ந் தேதியன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

    கஜா புயலின் தாக்கத்தினால் வீடுகள் சேதமடைந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த நாகராஜின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவரது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். நாகராஜின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GajaCyclone #EdappadiPalanisamy
    ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி செவிலியர்களுக்கு மதிப்பூதியத்தை உயர்த்தி பிரதமர் மோடி அறிவித்தார். #Modi #Incentives #Asha #Anganwadi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள மத்திய சுகாதார பணியாளர்களான ஆஷா, அங்கன்வாடி, ஏ.எம்.என். (துணை செவிலியர்கள்) ஊழியர்கள் ஒரு லட்சம் பேருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    ஆஷா பணியாளர்களின் வழக்கமான ஊக்கத்தொகை உயர்த்தப்படும். அதோடு ஆஷா பணியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பிரதமரின் இலவச காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதேபோல அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அதிகரிக்கப்படும்.

    அதன்படி இதுவரை மாதம் ரூ.3 ஆயிரம் பெற்றுவந்தவர்களுக்கு இனி ரூ.4,500 கிடைக் கும். அதேபோல மாதம் ரூ.2,200 பெற்றவர்களுக்கு இனி ரூ.3,500 கிடைக்கும். அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக உயர்த்தப்படும். இந்த உயர்வுகள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும்.

    அதுமட்டுமின்றி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களில் ஐ.சி.டி.எஸ். அப்ளிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.250 முதல் ரூ.500 வரை அவர்களது செயல்திறனுக்கு ஏற்ப வழங்கப்படும்.

    ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பயனாளிகள் தான் தேசத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலமில்லாத அஸ்திவாரத்தின் மீது வலுவான கட்டிடத்தை கட்டமுடியாது. அதேபோல தான் நாட்டின் குழந்தைகள் பலமில்லாதவர்களாக இருந்தால் நாட்டின் முன்னேற்றமும் குறையும்.

    3 கோடி குழந்தைகள் மற்றும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தரமான, சுகாதாரமான மகப்பேறு மற்றும் போதுமான ஊட்டச்சத்து ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    ஒவ்வொரு மகப்பேறுக்கு பின்னரும் ஆஷா பணியாளர்கள் அந்த குழந்தைகளை 42 நாட்களில் 6 முறை நேரில் பார்த்துவந்தனர். இனி 15 மாதங்களில் 11 முறை அவர்கள் குழந்தைகளை நேரில் சென்று கவனிப்பார்கள். குழந்தைகளின் வாழ்க்கையில் முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியம். உங்கள் அர்ப்பணிப்பு சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #Modi #Incentives #Asha #Anganwadi 
    துபாயில் இருந்து வந்த பயணிக்காக ரூ. 31 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய விமானப் பணியாளருடன் அதை பெற காத்திருந்தவரையும் டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். #Airlinestafferheld #IGI #goldbiscuitssmuggling
    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் தங்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கவரி அதிகமாக உள்ளதால் கள்ளத்தனமாக பல்வேறு வழிகளின் மூலம் தங்கம் கடத்தி வருபவர்களின் என்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில், துபாயில் இருந்து இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை இன்று சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, சந்தேகப்படும் வகையில் மூன்றாவது வாசல் வழியாக வெளியேற முயன்ற ஒருவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கழிப்பறையில் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். தனியார் விமான நிறுவன பணியாளரான அந்நபர் ஒரு கிலோ எடையுள்ள 9 தங்க பிஸ்கட்களை மறைத்து கடத்தி வந்தது இந்த சோதனையில் தெரியவந்தது.

    இதையடுத்து, பயணிகள் உதவியாளராக பணியாற்றும் முஹம்மது ஜாவெத் என்னும் அந்நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் துபாயில் இருந்து இன்று வந்த விமானத்தில் ஒரு பயணி அந்த தங்க பிஸ்கட்களை தந்து டெல்லி விமான நிலையத்தில் காத்திருக்கும் நபரிடம் ஒப்படைக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

    அவர் அளித்த தகவலின்படி, துபாய் விமானத்தில் வந்த நபரை பிடிக்க முடியவில்லை. எனினும், கடத்தல் தங்கத்தை பெற்றுசெல்ல மூன்றாவது முனையம் வாசலில் காத்திருந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இன்று பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் 31 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. #Airlinestafferheld #IGI  #goldbiscuitssmuggling  #tamilnews
    ×