என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய நூலக வார விழா"
- நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர்.
- துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர்.
உடுமலை:
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் தேசிய நூலக வார விழா 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது .முதல் நாள் நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி மற்றும் புதிய நூல்கள் அறிமுக விழா, உறுப்பினர் சேர்க்கை, நூலக புரவலர்கள் சேர்க்கைகள் நடைபெற்றன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் மாணவிகள் நூலகத்திற்கு சைக்கிளில் களப்பயணம் வந்தனர்.
நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர். இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,சுபேதார் நடராஜ் ,பொருளாளர் சிவகுமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன், துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர். வரும் 20ந் தேதி வரை நடக்கும் நூலக வார விழாவில் பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. முன்னால் ராணுவ வீரர் நலச் சங்கம் மற்றும் ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் புரவலர்களாக சேர்ந்தனர்.
- 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
- மாணவர்களிடம் தனது நூலக அனுபவங்களை பற்றி எடுத்துரைத்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதில் நூலகர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டியில் கலந்து கொண்ட 25 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் பரிசு பொருட்களை வழங்கி மாணவர்களுக்கு சிறப்புரை யாற்றினார்.
இதில் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் மகேஷ் பேசுகையில் மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தும் பழக்கத்தை சிறுவயதிலிருந்து பின்பற்ற வேண்டும். மேலும் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் நூலகத்தில் உள்ள அரிய நூல்களை படித்து வெற்றி பெற வேண்டும் என மாணவர்களிடம் தனது நூலக அனுபவங்களை பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரி யர்கள், மாணவர்கள், புரவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா, நல்நூலகருக்குப் பாராட்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட நூலக ஆய்வாளர் ஜான்சாமுவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக கிளை நூலகர் மகாலிங்கஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆண்டின் நல்நூலகர் விருது பெற்ற புலிக்கண்மாய் நூலகர் ஜெயஜோதி பாராட்டப்பட்டார். தொடர்ந்து விழாவையொட்டி பட்டிமன்ற பேச்சாளர் வைகை பாரதி, கவிஞர் சுகன்யா, புரவலர்கள் கணபதி, சிவசக்திகுமார், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் நூலகத்தின் பயன்கள் மற்றும் நூலகத்தினால் உயர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் சான்றோர்களைப்பற்றி பேசினர்.
தொடர்ந்து கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் சவுந்தர்யா, சிந்தாமணி, சம்யுக்தா, ஜெயபிரதீபா, யுவஸ்ரீ, தேவயானி ஆகியோருக்குச் சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நூலக உதவியாளர்கள் குணசேகரன், நாராயணன், கலைஞானம், கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் திருக்கோஷ்டியூர் நூலகர் தமிழரசி நன்றி கூறினார்.
சிவகங்கையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா மாவட்ட நூலக அலுவலர் ரமணி புனிதகுமாரி தலைமையில் நடைபெற்றது. நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆகஸ்போர்டு பள்ளி தாளாளர் சியாமளா வெங்கடேசன் நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை, நவுஷாத், அனந்தராமன், தமிழ்கனல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் இரண்டாம் நிலை நூலகர் முத்துக்குமார் நன்றி கூறினார்.