search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 156814"

    ஈபிஎஸ் - ஓபிஎஸ் பக்கம் போகமாட்டோம் என்று பூந்தமல்லி ஏழுமலை மற்றும் திருப்போரூர் கோதண்டபாணி ஆகியோர் கூறியுள்ளனர். #EdappadiPalaniswami #OPanneerselvam

    திருவள்ளூர்:

    தகுதி நீக்கம் செய்யப்பட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பூந்தமல்லி ஏழுமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    18 எம்,எல். ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட சதி. நாங்கள் ஆட்சியை கலைத்து விடுவோம் என்ற பயத்தில் தான் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

    முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றும், அம்மாவின் திட்டங்களை மக்களிடம் முதல்வர் கொண்டு சேர்ப்பதில்லை என்றும், முதல்வருக்கு நிர்வாக திறமை இல்லை என்று தான் தெரிவித்தோம்.

    மக்கள் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் முதல் அனைவரும் பணம் சம்பாதிக்கும் மன நிலையில் உள்ளனர்.

    சபாநாயகர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். எனவே தான் நீதிமன்றம் சென்றோம். மீண்டும் சபாநாயகர் சொன்ன தீர்ப்பு சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வருந்தத்தக்கதாக உள்ளது.

    எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். மக்களுக்காக நல்ல திட்டங்கள் அனைத்தும் சென்று சேர நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும்.

    உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் தேர்தல் அறிவித்தால் நிச்சயம் அ.ம.மு.க. கட்சி போட்டியிடும். 18 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    தேர்தலின் போது முதல்-அமைச்சர், உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் தொகுதிக்குள் சென்று பிரச்சாரம் செய்யக் கூடாது. எந்த தலைவரும் தொகுதிக்குள் செல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு தேர்தலை சந்தித்தால் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி-ஓ.பி.எஸ். பக்கம் செல்லமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றொருவரான கோதண்டபாணி (திருப்போரூர் தொகுதி) நிருபரிடம் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் என் மனதளவில் வருத்தம் தான். ஏன் என்றால் ஒன்றரை ஆண்டுகளாக என் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அது மீண்டும் தொடர்கிறதே என்ற வருத்தம் இருக்கிறது.

    எடப்பாடி அரசு பசுமாட்டை அறுத்து பாலை கறக்கிறது. அந்த வலி பசு மாட்டுக்குத்தான் தெரியும். நாங்கள் பசுவாக பலமுறை பாதிக்கப்பட்டு விட்டோம். நானும் உணர்ந்து விட்டேன்.

    இவ்வளவு வலியை வைத்து விட்டு எப்போதும் எடப்பாடி-ஓ.பி.எஸ். பக்கம் போகமாட்டேன். தலைவர் தினகரன் என்ன சொல்கிறாரோ அதன்படி செயல்படுவேன். மறு தேர்தல் வைத்தாலும் மீண்டும் இதே தொகுதியில் நின்று நான் பட்ட கஷ்டங்களை கூறி வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #OPanneerselvam

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளனர்.#ADMK #EdappadiPalanisamy #OPanneerselvam
    சென்னை:

    டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

    இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    அ.தி.மு.க. ஆயிரம் காலத்து பயிர்.  தமிழர்களுக்கு நிம்மதி எனும் நிழல் தரும் ஆலமரம்.  நாம் ஒன்றுபட்டு உழைத்தால் அ.தி.மு.க. எனும் பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் பெற்ற இயக்கம் ஆக உருவெடுக்கும்.

    உயர் நீதிமன்ற தீர்ப்பு தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தினைத் தந்துள்ளது.  அ.தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும் புத்துணர்வினைத் தந்துள்ளது.



    ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் இயக்கம் ஆக விஸ்வரூபம் எடுத்து அரசியல் எதிரிகளை அழிக்கும்.  அதனால், கட்சியில் இருந்து சில தவறான வழிநடத்துதலால் பிரிந்து சென்றவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும்.

    சிறு சிறு மனக்கசப்புகளால் மாற்று பாதையில் பயணிக்க சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்.  எண்ண வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு உழைக்கும் இயக்கத்திற்கு திரும்ப வேண்டும்.

    நீர் அடித்து நீர் விலகாது என்பது முதுபெரும் தமிழ் பழமொழி அல்லவா?  உயர் நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தினை புரிந்து மாற்று பாதையில் சென்றோர் கட்சிக்கு திரும்புங்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalanisamy #OPanneerselvam
    ஆட்சியை காப்பாற்ற ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அமைதியாக இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Kushboo #ADMK

    சென்னை:

    பெப்சி அலுவலகத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து ஒரு ஆண்டு முடிவடைந்தது பற்றி?

    பதில்:- வரி கட்டினால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் ஜி.எஸ்.டி. வி‌ஷயத்தில் அருண் ஜெட்லி, அமித்ஷாவுக்கு தெளிவு இல்லை. தவறுதலாக பல வி‌ஷயங்களை செயல்படுத்தி விட்டார்கள். மன்மோகன் சிங் ஜி.எஸ்.டி.யால் ஜி.டி.பி. குறையும் என்று முன்பே கூறினார். அப்போது அவரை பா.ஜ.க.வினர் திட்டினார்கள். இப்போது அதுதானே நடக்கிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது. ஜிஎஸ்டியால் ஏகப்பட்ட பொருளாதார பிரச்சினைகள்.

    கே:- பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது பற்றி?

    ப:- தாமசன்ராய்ட்டர் என்ற நிறுவனம் கூறியிருக்கிறது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவில் பெண்கள் பெரிய அளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 2015- 2016 காலகட்டத்தில் இது தொடர்பாக 39 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    2013 -ல் இதே நிறுவனம் இதே வி‌ஷயத்தில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக சொன்னபோது மோடி ஒரு பெண் தலைவியாக இருக்கும் நாட்டில் இப்படியா? என்று சோனியா காந்தியை பார்த்து கேள்வி கேட்டார். இப்போது நாங்கள் கேள்வி கேட்கிறோம். அவர்கள் மழுப்பலாக பதில் சொல்கிறார்கள்.

    கே:- சேலம் சென்னை 8 வழி சாலை பற்றி?

     


    ப:- நாட்டுக்கு வளர்ச்சி தேவை. ஆனால் விவசாயம் பாதிக்க கூடாது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான பதில் இல்லை. ஸ்டெர்லைட் வி‌ஷயத்திலும் மாநில அரசிடம் சரியான பதில் இல்லை.

    கே:- சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடித்ததற்காக பா.ம.க. எதிர்ப்பு தெரிவிக்கிறதே?

    ப:- எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக்கொண்டே இருந்தால் நம் வேலையை நாம் செய்ய முடியாது.

    கே:- தமிழகத்தில் கவர்னர் ஆய்வு தொடர்கிறதே?

    ப:- ராமர்-லட்சுமணர் போல இருக்கும் முதல்வரும் துணை முதல்வரும் எங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்? என்று கேட்கட்டுமே... தம்பி நீங்க இப்ப பேசக்கூடாது என்று டெல்லியில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். தங்கள் ஆட்சியை 3 ஆண்டுகள் காப்பாற்றுவதற்காக இருவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

    கே:- தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்று கூறினீர்களே?

    ப:- அதுபற்றி பேச வேண்டாம். அது முடிந்து போன வி‌ஷயம். மீண்டும் மீண்டும் அரைத்தால் புளித்துவிடும். மாற்றுவார்களா என பார்ப்போம்.

    கே:- தமிழக மகிளா காங்கிரசில் இருந்து நடிகை நக்மா நீக்கப்பட்டு இருக்கிறாரே?

    ப:- எனக்கும் மகிளா காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. அது மேலிடம் எடுத்த முடிவு.

    கே:- கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு காவிரி வி‌ஷயத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்போகிறதே?

    ப:- இது குறித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் தான் பதில் கூற வேண்டும்.

    கே:- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    ப:- இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. என்ன நடக்கும் என்று தெரியாது. எனக்கு சீட் கிடைக்கா விட்டால் எனக்கும் தலைமைக்கும் பிரச்சினை என்பார்கள். கிடைத்து விட்டால் அந்த தைரியத்தில் பேசுகிறார் என்பார்கள். நான் வீடு செல்வதற்குள் என்னவெல்லாமோ நடந்து விடும். அதெல்லாம் வரும் போது பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #ADMK

    ×