என் மலர்
நீங்கள் தேடியது "மாஜிஸ்திரேட் விசாரணை"
- தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசை கைது செய்தனர்.
- பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர்:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 நபர்களை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடினர். அப்போது கொள்ளை கும்பல் தலைவனான புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன்நகரை சேர்ந்த கோபி மகன் விஜய் என்ற மொட்டை விஜய் (19) எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருந்ததை பிடிக்க சென்றபோது போலீஸ்காரர்கள் கோபி, கணபதி ஆகியோரை விஜய் அரிவாளால் வெட்டியதால் இன்ஸ்பெக்டர் சந்திரன், தனது தற்காப்புக்காகவும், சக போலீசாரை காப்பாற்றுவதற்காகவும் விஜயை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றார்.
இதனை தொடர்ந்து விஜயின் கூட்டாளிகளான புதுச்சேரி உழவக்கரையை சேர்ந்த அறிவாசகம் மகன் ரேவந்த்குமார் (21), அண்ணாதுரை மகன் அன்பரசு (20), திருபுவனத்தை சேர்ந்த முசுபூர் ரகுமான் மகன் ரியாஸ் அகமது (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசையும் (20) கைது செய்தனர். இதற்கிடையே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விஜயின் உடலை நேற்று மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் முன்னிலையில் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
அவரது உடலை வாங்க, புதுச்சேரியில் இருந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்ததால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விஜயின் உடலை அடக்கம் செய்ய புதுச்சேரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த2 நாட்களாக என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். என்கவுண்ட்டர் நடந்த எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பை மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முந்திரி தோப்பில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள், அரிவாள் மற்றும் போலீசார் சுட்டபோது வெளியான தோட்டா பாகங்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் என்கவுண்ட்டர் நடந்த சம்பம் குறித்து போலீசார் மாஜிஸ்திரேட் பிரவீன் குமாரிடம் தெரிவித்தனர். அதனை முழுமையாக கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பெரம்பூர்:
வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (28). பிரபல ரவுடியான இவர்மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவருடைய நண்பரான ரவுடி பழனி 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய நினைவு தினத்தில் கார்த்திக்கும் அவருடைய நண்பர்களும் பழனி பேனருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலாபிஷேகம் செய்து கலாட்டாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ரவுடித்தனமும் செய்து வந்தனர். வழிபறியிலும் ஈடுபட்டனர்.வருகிற 29-ந்தேதி பழனி நினைவு நாளில் இவர்கள் கலாட்டாவில் ஈடுபடலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அண்ணாநகரில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கார்த்திக் அவருடைய நண்பர்கள் அன்வர் பாட்சா, ராஜ்குமார், அருண் பாண்டியன் ஆகியோரை நேற்று முன்தினம் எம்.கே.பி. நகர் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அனைவரும் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குடிபோதையில் இருந்த கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கார்த்திக் நேற்று மதியம் மயங்கி விழுந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருடைய உடல்நிலை மோசமானதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவலை அறிந்ததும், பக்தவத்சலம் காலனியில் உள்ள கார்த்திக் உறவினர்கள், நேற்று இரவு வியாசர்பாடி அம்பேக்தர் கல்லூரி அருகே மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு சென்று அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
இறந்த ரவுடி கார்த்திக் குடியிருந்த வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு பதட்டம் நிலவியது. இன்றும் கார்த்திக் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கார்த்திக் நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மாஜிஸ்ரேட்டு நேரில் விசாரணை நடத்துகிறார். இதனால் அங்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரவுடிகளை மடக்கி பிடித்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்கள் இந்த பகுதியில் அடிக்கடி ரவுடி தனத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடந்த வழப்பறியிலும் இவர்களுக்கு தொடர்பு உண்டு. எனவே, அனைவரையும் தேடி வந்தோம். தப்பி ஓடிய அவர்களை செல்போன் மூலம் கண்டுபிடித்தோம். அதிக போதை காரணமாக கார்த்திக் இறந்திருக்கலாம். மாஜிஸ்திரேட் விசாரணை நடை பெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சந்தோஷ்குமார் ஸ்டான்லி மருத்துவமனை சென்று கார்த்திக் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
உடல் பரிசோதனைக்கு பிறகு கார்த்திக் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதையொட்டி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.