என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரமராஜா ஆலோசனை"

    • ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை.

    புதுக்கோட்டை:

    வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்கட்டண உயர்வு, சொத்து வரி, தொழில் வரி, கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது

    ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.

    தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் வடநாட்டு தொழிலாளர்களை நம்பி தான் வணிகர்கள் உள்ளனர். அவர்கள் வரும்போது பான் மசாலா, குட்கா ஆகியவற்றோடு தான் வருகிறார்கள். இதனை தமிழகத்திற்குள் வரும் போதே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஆன்லைன் வர்த்தகம் இனியும் தொடருமானால் 10 கோடி வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். விரைவில் பிரதமரை சந்திக்க உள்ளோம்

    இதேபோல் தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வு சொத்து வரி கட்டிட வரைபட கட்டண உயர்வு தொழில் வரி ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்து உள்ளோம்.

    வணிக வரித்துறை, உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகளால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில தவறான அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு லஞ்சம் பெறுவதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆவடி மற்றும் புதூரில் வணிகர்களுடன் விக்கிரமராஜா ஆலோசனை நடத்தினார். 23-ந்தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #vikramaraja #gst

    சென்னை:

    சில்லறை வணிகத்தில் அந்திய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், ஜி.எஸ்.டி., பிளாஸ்டிக் தடை சட்டம் ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 23-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இது தொடர்பாக வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பு சங்கங்களின் தொகுதி கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் ஆவடியிலும், புதூரிலும் நடந்தது.

    மாவட்டத் தலைவர் என்.ஜெயபால், மாவட்டச் செயலாளர் அம்பத்தூர் ஹாஜி கே.முகம்மது, மாநில துணைத் தலைவர் அய்யார் பவன் அய்யாத்துரை, ஆவடி கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.எம். துரைராசன், ஆர்.வேலுச்சாமி, தங்கதுரை, மனோகரன், குருசாமி, திருமாறன், மாறன், முகமது ஷெரீப், மகாலிங்கம், பொன் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    உண்ணா விரதத்தில் மேற்கு மாவட்ட அடையாளமாக மஞ்சள் துண்டு அணிந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமையில் மாவட்ட செயலாளர் ஹாஜி முகம்மது சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார். #vikramaraja #gst

    ×