என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "slug 163535"
- 150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும்.
- காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது.
சென்னை:
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வர வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், வருகையை அதிகரித்தல் போன்ற நோக்கத்திற்காக இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது. காலை உணவாக காய்கறிகள் சேர்த்து ஊட்டச்சத்துடன் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடியும் புதன் கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்படுகிறது.
வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா வினியோகிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது ரவை, கோதுமை ரவை, சேமியா வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சேர்க்க வேண்டும்.
150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது. 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அப்படி தொடங்கியது தான் ஓட்ஸ் மோகம். போலந்து, ஆஸ்திரேலியா, மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் விளைவது தான் ஓட்ஸ். அதை இங்கே இறக்குமதி செய்ய அதன் நன்மைகளை அடுக்கி விட்டனர்.
இதன் விளம்பரங்களை கண்டு நாமும் சமையல் அறையில் அதற்கு ஓர் இடத்தை கொடுத்து விட்டோம்.
ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். இது உடல் ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயம். எடை குறைப்புக்கு ஓட்ஸை உட்கொள்வது நல்லது தான். ஆனால் அது விரைவில் செரிமானம் ஆவதால், பசிக்கு நாம் அதிகம் சாப்பிட வாய்ப்பும் உள்ளதாம். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடுமே!
![](https://img.maalaimalar.com/InlineImage/201810061125365989_1_millet-vs-oats._L_styvpf.jpg)
அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸை விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம்.
அதைவிட கம்பு, சோளம், திணை, வரகு, சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. இவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. விலையும் குறைவு!
100 கிராம் கம்பில், 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது, உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் எளிதில் குறைக்கும். ராகி உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.
வெளிநாட்டில் விளையும் சாதாரண பயிரை நம் சந்தையில் சேர்த்து விட்டார்கள். ஆனால் நாமோ நம் பருவநிலைக் கேற்ற சீரான உணவு விட்டு விட்டோம்.
எது எப்படியோ எப்பவும் வீட்டில் எண்ணெய் இல்லாமல் ஃப்ரெஷாக செய்யபப்டும் இட்லிக்கு இணை எதுவுமில்லை. அவற்றில் கிடைக்கும் சத்துக்கள் வேறு எதுவுமில்லை.