என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ரூபாய் மதிப்பு"

    • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.09 ஆக இருந்தது.

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அவ்வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.84.33-ஆக சரிந்துள்ளது.

    நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.09 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.84.33-ஆக சரிந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் வெற்றி, இந்திய ரூபாய் மதிப்பு மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்தது.
    • மந்தமான பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்கள் குறைப்பு.

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 10) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்த நிலையில் இன்று திங்கள்கிழமை சந்தை தொடக்கத்தில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக உள்ளது. இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது.

    நேற்று [பிப்ரவரி 9] அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை அறிவித்தார்.

    இதன்காரணமாக ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. னைத்து நாடுகளிலிருந்தும் உலோக இறக்குமதிகளுக்கு இந்த வரிகள் பொருந்தும் என்றும் இந்த வார இறுதியில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே மந்தமான இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

    • இந்திய ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக இருந்தது.
    • மதிப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று முயற்சித்தது.

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 11) சற்றே உயர்வை கண்டுள்ளது.

    நேற்று (பிப்ரவரி 10) வாரத்தின் முதல் நாளில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக இருந்தது.

    இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது. எனவே ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று முயற்சித்தது.

    சந்தை திறப்பதற்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி, அரசு நடத்தும் வங்கிகள் வழியாக டாலர்களை விற்றது. சந்தை திறந்த பிறகும் இது நீடித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். சுமார் 2 முதல் 3 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்தது.

    எனவே இன்று (பிப்ரவரி 11) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. நேற்றைவிட விட 61 பைசாக்கள் குறைந்து இன்றைய ருபாய் மதிப்பு 86.63 ஆகி உயர்ந்துள்ளது. கடந்த 2 வருடத்தில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசியாக நவம்பர் 2022  க்கு பிறகு ரூபாய் மதிப்பு 1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. 

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.73.77 ஆக சரிந்தது. #IndianRupee #Dollar
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டது.

    கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

    மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாறு காணாத வகையில் ரூ.73.34 ஆக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ73.77 ஆக வீழ்ச்சி ஏற்பட்டது.

    நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையாலும், மூலதனம் வெளியேற்றத்தாலும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. #IndianRupee #Dollar
    டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் உள்பட ஆசியா நாடுகளின் அனைத்து நாணயங்களின் மதிப்பும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. #RupeeRecordLow #IndianRupeeValue
    புதுடெல்லி :

    கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

    இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இன்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.77 ரூபாயாக சரிந்தது.

    தென்கொரிய வோன்  0.84%, இந்தோனேசியா ரூபியா 0.54%, தைவான் டாலர் 0.37%, சீனா ஆஃப்ஷோர் 0.21%, மலேசிய ரிங்கட் 0.21%, பிலிப்பைன்ஸ் பெஸோ 0.17%, சிங்கப்பூர் டாலர் 0.08%.  சரிவடைந்து உள்ளன.

    எனினும் சீனாவின் ரென்மின்பி 0.31%, ஜப்பான் யென் 0.18%  ஆகியவை மட்டும் சரிவை சந்திக்காமல் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #RupeeRecordLow #IndianRupeeValue
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.34 எனும் நிலையை எட்டி வரலாறு காணாத வகையில் இன்று வீழ்ச்சியடைந்து உள்ளது. #RupeeRecordLow #IndianRupeeValue
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

    மேலும், ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதம் 4-ம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியது. இதனால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. கடந்த திங்கள் அன்று வர்த்தக நேர முடிவின் போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 72.91 ஆக இருந்தது. அதன்பின்னர் இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 43 காசுகள் சரிந்து 73.34 எனும் நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். #RupeeRecordLow #IndianRupeeValue
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மேலும் 22 காசுகள் சரிந்து, வரலாற்றில் இல்லாத அளவிற்கு 72.91 என்ற நிலைக்கு சென்றது. #IndianRupee #RupeeValue
    மும்பை:

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
    வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 72.74 என்ற அளவில் சரிந்தது.  அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72.69 என்ற நிலையில் இருந்தது.

    இந்நிலையில், ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 22 காசுகள் சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது. இதன்மூலம் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது.



    கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தின்போது 2 சதவீதம் அதிகரித்த நிலையில், இன்று 0.35 சதவீதம் குறைந்தது. அதேசமயம் இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 133.29 புள்ளிகள் உயர்ந்து, 37546.42 புள்ளிகளாக இருந்தது. #IndianRupee #RupeeValue

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. #Rupee #Rupeeversusdollar #USdollar
    சென்னை:

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி வர்த்தக நேர இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.71.73 ஆக இருந்தது.

    இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 45 காசுகள் சரிந்து ரூ.72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் 3 காசுகள் சரிந்து ரூ.72.18 ஆனது.

    இது வரலாறு காணாத சரிவாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 6-ந்தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.11 என்ற அளவில் இருந்தது. அதுவே உச்சபட்ச சரிவாக இருந்தது.


    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக எண்ணை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அமெரிக்க டாலரை அதிகம் வாங்குகின்றனர். டாலரின் தேவை அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

    மற்றநாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலரை ஆதரித்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் தீவிரம் அடைந்தால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். #Rupee #Rupeeversusdollar  #USdollar
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், சாமானிய பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பதை பார்க்கலாம். #RupeeInICU #IndianRupee
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

    இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

    ஜூன் 19-ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. அதன்பின்னர் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது. 

    ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. 

    இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டது.

    இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69.10 என்ற நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். 

    இந்த நிலை மேலும் மோசமடையலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் 70 ரூபாயை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் சாமானியர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது, இறக்குமதி பொருட்களின் மீதான வரியை உயர்த்தும் நடவடிக்கையை நோக்கி அரசை தள்ளும். மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,460 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டில், இதே மாதத்தில் இருந்ததை விட 5.6 சதவீதம் அதிகம். 



    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதனால் பெட்ரோல்,  டீசலின் விலை அதிகரிக்கும். இது சாமானியர்களை வெகுவாக பாதிக்கும். 

    ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்வால் கடும் சுமையை தாங்கிக்கொண்டிருக்கும் மக்களின் தலையில் மேலும் இடியாக இது இருக்கும். விலையை குறைத்தால் கடும் நிதிசுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால், பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வாய்ப்புகள் குறைவு. 

    எரிபொருள் விலை உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணியாக அமையும். இதனால், ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்படும். இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாகவும் இருக்கும். பணவீக்கம் அதிகரித்ததால் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.

    மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூபாய் மதிப்பை உயர்த்தும் வழிகளை செய்தால்தான், பொதுமக்கள் தீவிர சுமைக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
    ×