என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈரான்"
- துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது.
- பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த முடியும்
ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.
Iran successfully launched its research satellite, Chamran-1, into orbit.— The satellite was deployed at an altitude of 550 kilometers using the Ghaem-100 rocket, a solid-fueled launch vehicle developed by the Islamic Revolutionary Guard Corps (IRGC).— The Ghaem-100 rocket is… pic.twitter.com/Z2mjhgQmcW
— Clash Report (@clashreport) September 14, 2024
தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள சம்ரான் -1 [Chamran-1] என்று இந்த சாட்டிலைட் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரானின் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு வருங்காலங்களில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் டெக்னலாஜியின் [orbital manoeuvre technology] ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
IRAN SATELLITE LAUNCH 14/09/2024■ #IRGC #Aerospace Force: #Chamran-1 satellite was succesfully placed at 550 km orbit via three-stage Qa`im-100 SLV. It orbits at 7.5 km/s■ #satellite is ca. 60 kg. Primary mission to test hardware & software systems & prove orbital… pic.twitter.com/uAOLXH7eRk
— Shivan Mahendrarajah (@S_Mahendrarajah) September 14, 2024
இந்நிலையில் ஈரான் சாட்டிலைட்டை ராக்கெட் மூலம் ஏவ பயன்படுத்திய யுக்தியை போர் ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தமுடியும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
- ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்.
- முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன.
லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதை நடுவானில் இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் அழித்தது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானில் இருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன. 30 வினாடிகளுக்கு பிறகு 35 ஏவுகணைகள் ஏவப்பட்டன.
பல ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் திறந்தவெளி பகுதிகளில் விழுந்தது. இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தது.
- ஈரான்- இஸ்ரேல் இடையிலான பதற்றம் புதிது அல்ல.
- இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி கலந்து கொண்டார். இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் குறித்து அவரிடம் கேள்வி ஏழுப்பப்பட்டது.
இது தொடர்பாக இராஜ் இலாஹி கூறியதாவது:-
ஈரான்- இஸ்ரேல் இடையிலான பதற்றம் புதிது அல்ல. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் இந்த பதற்றம் ஈரானில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு புதியதாக ஒன்றும் இல்லை. இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் இந்திய நண்பர்களுக்கு உறுதி அளிக்கிறேன். மேலும், ஈரானுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.
ஈரான் எவ்வளவு பாதுகாப்பானது என்று அவர்களாகவே பார்க்க முடியும். ஈரான் அழகான மற்றும் கவரக்கூடியதாகும். டெல்லி- தெஹ்ரான் இடையே இரண்டு நேரடி விமான சேவை உள்ளது. மும்பை- தெஹ்ரான் இடையே விமான சேவை உள்ளது. இன்னும் விமான சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார்.
+2
- அலி ஷாம்கானியின் மகன் ஹொசைன் ஷாம்கானி சத்தமே இல்லாமல் துபாயில் கச்சா எண்ணெய் வியாபார சாமர்ஜ்யத்தையே கட்டி எழுப்பியுள்ளார்
- அந்த நிறுவனத்தை 'ஹெக்டார்' [Hector] என்ற புனைபெயருடன் ஹொசைன் ஷாம்கானி இயக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது
ஈரான் அரசியல் புள்ளி
ஈரான் அரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மதத் தலைவர் அயத்துல்லா காமேனி -இன் ஆலோசகராகவும் இருப்பவர் அலி ஷாம்கானி [Ali Shamkhani]. ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலான Supreme National Security Council (SNSC) இன் தலைவராகவும் சுமார் 10 ஆண்டுகளாக அலி ஷாம்கானி இருந்துள்ளார். தற்போது அயத்துல்லா காமேனியின் ஆலோசகராக ஈரான் அரசியலிலும் ராணுவத்திலும் பலம் கொண்டவராக அலி ஷாம்கானி திகழ்ந்து வருகிறார்.
ஹொசைனின் எண்ணெய் சாம்ராஜ்யம்
இவ்வாறாக அரசியலில் தனது இருப்பை நிலைநாட்டிவரும் அலி ஷாம்கானியின் மகன் ஹொசைன் ஷாம்கானி Hossein Shamkhan சத்தமே இல்லாமல் துபாயில் கச்சா எண்ணெய் வியாபார சாமராஜ்யத்தையே கட்டி எழுப்பியுள்ளார். ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்ததுபோல ஈரான் மீது எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் ஹொசைன் ஷாம்கானி சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பதாக புளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹொசைன் ஷாம்கானியின் இந்த வளர்ச்சி ஈரான் அரசில் அவரது தந்தையின் அரசியல் தொடர்புகளே காரணம் என்கிறது அந்த அறிக்கை.
ஹெக்டார் என்கிற ஹொசைன் ஷாம்கானி
அந்த அறிக்கைப்படி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் உள்ள கார்ப்பரேட் டவரில் மிலாவோஸ் Milavous Group Ltd, என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.ஆரம்பித்து சில மாதங்களிலேயே சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை அந்நிறுவனம் பிடித்துள்ளது. ப்ளூம்பெர்கிற்கு கிடைத்துள்ள தகவலின்படி வியாபார வட்டாரங்களில் அந்த நிறுவனத்தை 'ஹெக்டார்' [Hector] என்ற புனைபெயருடன் ஹொசைன் ஷாம்கானி இயக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஈரான், ரஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பில்லியன் கணக்கில் இந்த நிறுவனத்தின் வருவாய் எட்டியுள்ளது.
நெட்வொர்க்
ஹொசைன் ஷாம்கானியின் வர்த்தக தொடர்பு நெட்வொர்க் ஆனது ஈரான் நாட்டை சேர்ந்த எண்ணெய் வர்த்தக நெட்வொர்க்களிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தடைகளை சட்டப்பூர்வமாக உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, மற்ற நிறுவனங்களுடனான பார்ட்னர்ஷிப் மூலமும் , ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் செயல்பாடு இல்லாத நிறுவனங்களை உருவாக்கியும் தனது சர்வதேச வர்த்தக ஆதிக்கத்தை ஹொசைன் ஷாம்கானி நிறுவியுள்ளார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஹொசைன் ஷாம்கானி மீதும் அவரது வர்த்தக நகர்வுகள் மீதும் அமெரிக்கா ஒரு கண் வைத்திருந்தாலும், 60 க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொண்டு பெரிய அளவில் இயங்கி வரும் அவரது நெட்வொர்க்கை முழுதாக செயலிழக்க செய்ய முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது
அமெரிக்காவின் தேள்
ஹெக்டார் அதாவது ஹொசைன் ஷாம்கானியின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் மிலாவோஸ் நிறுவனம் சீனாவின் சினோபெக், செவ்ரான்,BP உள்ளிட்ட பெரு வணிக கொள்முதல் நிறுவனங்களுக்கு எண்ணெய் சப்ளை செய்து வருகிறது. ஆனால் இது அனைத்தும் சட்டபூர்வமாக நடப்பதால் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 35 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இருப்பதால், ஹொசைன் ஷாம்கானியின் வர்த்தகத்தில் கை வைப்பது சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலையை உயர்த்தும். அது அமெரிக்காவில் வர இருக்கும் அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அமெரிக்கா தேள் கொட்டினாலும் பரவா இல்லை என்று மவுனமாக இருந்து வருகிறது.
- இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
- எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார்
ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் போர் மூலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என இஸ்ரேலின் பாலஸ்தீன தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரானின் புதிய அதிபராகத் தேர்வான சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசஸ்க்கியானின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஈரான் வந்த இஸ்மாயில் ஹனியே அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது. நேரடித் தாக்குதலுக்கு அதிபர் மசூத் மற்றும் ஈரான் புரட்சிகர படையினர் இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேலை பாதுகாக்க நீர்மூழ்கிகளையும், ஏர்கிராப்ட்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் அமெரிக்காவுடன் சேர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய மேற்கு நாடுகள் இணைந்து ஈரானை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கை, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், பிராந்தியங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் மேற்கூறிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டும், தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசியும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் பேசஸ்கியான் உறுதிபட தெரிவித்துள்ளார்.
- இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரை.
- இஸ்ரேல் தலைநகர் மீது வான்தாக்குதல் நடத்த ஈரான் அதிபர் யோசிப்பதாக தகவல்.
இஸ்ரேலுடனான நேரடி போரைத் ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் விரும்பவில்லை எனவும், இதனால் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிப் படைக்கும் (Islamic Revolutionary Guard Corps (IRGC)) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தி டெய்லி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் என ஈரான் குற்றம்சாட்டியது. அத்துடன் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும என ஈரான் உயர் அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா காமேனி சூளுரைத்தார்.
தற்போது இஸ்ரேல் மீது எந்தவகையான தாக்குதலை நடத்துவது என்பதில் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் அண்டை நாடுகளில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை (மொசாட்) தளங்களை தாக்குவதற்கு அதிபர் மசூத் பெசெஸ்கியன் முன்மொழிந்துள்ளதாக "தி டெய்லி டெலிகிராப்" நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
அதே நேரத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர்கள் டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் ஹிஸ்புல்லா மற்றும் மற்றவர்களின் ஆதரவுடன் வான்தாக்குதல் நடத்தலாம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இஸ்ரேலுடன் நேரடி போரில் ஈடுபட்டால் ஈரான் அதிக விளைவுகளை சந்திக்கும் என அதிபர் யோசிக்கிறார். இதுதான் முக்கிய காரணமாக அதிபர் தரப்பில் பார்க்கப்படுகிறது.
அதிபரின் முன்மொழிவை புறக்கணித்து இஸ்ரேலை தாக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தயாராகி வருவதாகவும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் உத்தரவை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கண்டிப்பாக நிறைவேற்றும் என்றும் நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரானின் தன்னிச்சை அதிகாரம் படைத்த செல்வாக்குமிக்கதாக புரட்சிகர காவல்படை இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
- புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கத்தாரில் இருந்து வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
2 மாதங்களுக்கு முன்பே அவரது வீட்டில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் ரிமோட் மூலம் குண்டை வெடிக்கச் செய்ததில் ஹனியேவும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தான் இதற்குக் காரணம் என்று ஈரான் கடுங் கோபத்தில் உள்ள நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் மூலம் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில் ஹமாஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள யாஹ்யா சின்வார் அழித்தொழிக்கப்படவேண்டியவர் என்றும் ஹமாஸ் அமைப்பு உலகத்தில் இருந்தே துடைத்தெறியப்படும் என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது
- ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நேதன்யாகு தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா அமைப்புகள் இணைந்து இஸ்ரேல் மீது கொடிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜி7 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இஸ்ரேலை சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுக்கும் நோக்கில் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி நேதன்யாகு கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் கல்லாட் கலந்து கொண்டனர்.
மேலும் பாதுகாப்பு படை தலைவர் ஹெர்ஸி ஹலேவி மற்றும் இஸ்ரேலின் முன்னணி உளவு அமைப்புகளான மொசாத் மற்றும் ஷின் பெட் ஆகியவற்றின் தலைவர்களான டேவிட் பர்னி மற்றும் ரோனென் பார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 30 ஆம் தேதி ஹிஜ்புல்லா மூத்த தலைவர் ஃபௌத் சகரை (Faud Shukr) இஸ்ரேல் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஈரான், ஹிஜ்புல்லா இடையே பதற்ற சூழலை உருவாக்கி இருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல், ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா தாக்குதல் நடத்த தீவிரம் காட்டுவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
- இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
- 50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன.
டெல்அவிவ்:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் இஸ்ரேல் மீது ஈரான், ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளன. இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதன்படி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவிட்டார்.
இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உள்ளது. மேலும் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் தங்களது தளபதி கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். வடக்கு இஸ்ரேல் பகுதியான பெய்ட் ஹில்லெல்லை குறிவைத்து சுமார் 25 நிமிடங்கள் வரை இடைவிடாமல் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை ஏவினர்.
50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன. அந்த ஏவுகணைகளை நடுவானிலேயே இடை மறித்து இஸ்ரேல் அழித்தது. இஸ்ரேல் படையினர் வான்வெளி தாக்குதலை தடுக்கும் டோம் அமைப்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை தடுத்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இத்தாக்குதல் தொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வீரம் மிக்க மற்றும் மரியாதைக்குரிய எதிர்ப்பிற்கு ஆதரவாகவும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. கத்யுஷா ராக்கெட்டுகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது.
ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் குறித்து ஈரான் கருத்து கூறும்போது, ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் இன்னும் ஆழமாக சென்று தாக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஹிஸ்புல்லா இன்னும் அதிக இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தாக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இத்தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் நாட்டின் கேபர் கிளா மற்றும் டெய்ர் சிரியனி உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல்-லெபனான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் ஈரான் தாக்குதல் நடத்தினால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அவர் தங்கி இருந்த அறை மீது குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை வீசப்பட்டதாகவும், இதில் இஸ்மாயில் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஏவுகணையில் 7 கிலோ வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது என்றும், இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே இருந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் படுகொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.
- இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
- மேற்குலக நாடுகளில் உள்ள 2-வது பெரிய உளவு அமைப்பு மொஸாட் ஆகும்.
ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார்.
அந்த சமயத்தில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்து அவரை படுகொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகளை நிரப்ப இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் ஈரானின் செக்யூரிட்டி ஏஜெண்டுகளை நியமித்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் மரணமடைந்த ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் தெக்ரான் நகரத்திற்கு வந்திருந்தார். அப்போதே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் அதீத கூட்டம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள 3 அறைகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு அவரை கொலை செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் பட்ஜெட் மற்றும் 7,000 பணியாளர்களுடன் இயங்கும் மொசாட் அமெரிக்காவின் CIA க்கு அடுத்தபடியாக மேற்குலக நாடுகளில் உள்ள இரண்டாவது பெரிய உளவு அமைப்புஎன்பது குறிப்பிடத்தக்கது.
- தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச்சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர்
- ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த செவ்வாய்க்கிழமை [ஜூலை 30] அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பளித்து வந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை(IRGC) வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச்சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர் என்று தெரிக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது. ஆனால் இஸ்ரேல் இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில் அமெரிக்கா இந்த தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்த கூற்றுப்படி, இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் கத்தார் நாட்டில் நடந்த அரசியல் சந்திப்பை முடித்துக்கொண்டு, ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த இஸ்மாயில் அந்த வீட்டில் இருப்பதை உறுதி செய்தபிறகு, மர்ம நபர்கள் அங்கு புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்துள்ளனர் என்று நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது. இதற்கிடையில் ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்