என் மலர்
நீங்கள் தேடியது "ஈரான்"
- அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது.
- அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
அணுஆயுத உற்பத்தியில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அந்நாடு மறுத்து வருகிறது.
இந்த நிலையில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஈரான் அணு ஆயுதம் தொடர்பான ஐ.நா. சபையின் உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
மேலும் அந்நாட்டின் மீது 2- வது கட்ட வரி விதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
டிரம்பின் இந்த பகிரங்க மிரட்டல் ஈரானை கொதிப்படைய செய்துள்ளது. அவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் பணியவில்லை.
அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கும் மறுத்து விட்டது. மாறாக அமெரிக்காவுக்கு எதிராக அதி நவீன ஆயுதங்களுடன் ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஈரான், நாடு முழுவதும் தனது நிலத்தடி ஏவுகணை ஆயுதக்கிடங்கை தயார் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. கெய்பர், ஹேகான், ஹக் காசெம், செஜ்ஜில், எமாத் உள்ளிட்ட அதி நவீன ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
- ஈரான் தனது அணுசக்தி அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு எச்சரித்திருந்தார்.
- அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் தனது வலிமையை நிரூபிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில் ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது. இந்த 'ஏவுகணை நகரம்' தொடர்பான வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
ஈரான் தனது அணுசக்தி அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு எச்சரித்திருந்தார்.
ஆனால் நேர்மாக ஈரான் அரசு தற்போது தங்கள் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் 85 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.
இன்று தொடங்கி அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கை ஆட்டிப்படைக்க நினைக்கும் மேற்கு நாடுகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
- ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானது. இங்கு ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுஜன கண்காணிப்பை ஈரான் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

ஐ.நா அறிக்கையின்படி, ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் புகாரளிக்க காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது. இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.
மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
செப்டம்பர் 2024 முதல், ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக டிரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அறநெறிப் போலீசாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை மதிப்பிட்டுள்ளது.
- துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் காயமடைந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- துப்பாக்கி சூடு நடத்திய இருவர் கைது, ஒருவன் தப்பியோட்டம்.
தெக்ரான்:
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ந்தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 40வது நாளான நேற்று அந்நாட்டின் இரண்டாவது புனிதத் தலமான ஷா செராக் மசூதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஈரான் நீதித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று, ஈரானிய செய்தி இணையதளம் கூறியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடும் பதிலடியை திரும்ப பெறுவார்கள் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி குறிப்பிட்டுள்ளார்.
- ஹிஜாப் போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது.
- போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல்.
இசே:
ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஈரானில் நடைபெற்று வரும், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின. முன்னதாக நேற்று பிற்பகுதியில் இசே நகரின் பல்வேறு பகுதிகளில் கூறிய ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.காவல்துறையினர் மீது அவர்களை கற்களை வீசினர்.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. முன்னதாக கடந்த மாதம் ஒரு புனித ஸ்தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- தனிநபர்களை கடத்தி விசாரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
- கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
தெக்ரான்:
இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில வழக்கு தொடரப்பட்டிருந்தது. உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
- உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு, ஈரான் உதவி வருகிறது.
- ஈரானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ரஷியா அளிக்கிறது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதை வெளிக்காட்டுவதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஈரான் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க கூறியுள்ளது. இதைடுத்து ஈரானிய நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெள்ளை மாளிகை அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷியா, ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். வான் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஈரானுக்கு மேம்பட்ட ராணுவ உதவியை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷியா அளித்து வருவதாகவும், அடுத்த வருடத்திற்குள் போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து ஈரான் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போர் விமானங்கள் அந்த பிராந்திய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானின் விமானப்படையை கணிசமாக பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
- போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் தலைவர்கள் மரண தண்டனையை பயன்படுத்துவதாக புகார்.
டெஹ்ரான்:
ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 23 வயதான மொஹ்சென் ஷெகாரி மற்றும் மஜித்ரேசா ரஹ்னாவார்ட் ஆகியோருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும் போராட்ட வழக்கில் சிக்கிய ஒரு மருத்துவர், ராப் இசை கலைஞர் மற்றும் ஒரு கால்பந்து வீரர் உட்பட இருபது பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்பவும், நாடு தழுவிய போராட்டங்களை கட்டுப்படுத்தவும் ஈரான் தலைவர்கள் மரண தண்டனையை பயன்படுத்துவதாக ஈரான் மனித உரிமை குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி குற்றம் சாட்டியுள்ளார்.
- போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
- கடந்த செவ்வாயன்று குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
டெஹ்ரான்:
ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது, துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த போராட்டத்தின்போது துணை ராணுவ வீரர் ருஹோல்லா அஜாமியன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகமது மஹ்தி கராமி மற்றும் செய்யத் முகமது ஹொசைனி ஆகியோர் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை செய்தி ஏஜென்சி உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் டிசம்பர் மாதம் குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. கடந்த செவ்வாயன்று உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
- வீடியோ வைரலான நிலையில், இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
- இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி உள்ளது. அத்துடன் அந்த பெண் இஸ்லாமிய பெண்கள் அணியவேண்டிய முக்காடு அணியவில்லை.
அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில், அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர்களாக அறியப்படும் இந்த இளம் ஜோடி மீது, ஊழல் மற்றும் விபச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இத்தகவலை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை மர்ம நபர்கள் சிலர் விரும்பவில்லை.
- பெண்கள் பயிலும் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என சிலர் விரும்புவது கண்டறியப்பட்டுள்ளது.
டெஹ்ரான்:
ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தலைநகர் டெஹ்ரான் அருகே கோம் என்ற நகரம் உள்ளது. பழமை வாய்ந்த நகரமான இந்நகரம் மதகுருமார்களின் தாயகமாகும். இந்நகரில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை மர்ம நபர்கள் சிலர் விரும்பவில்லை. இதனை தடுக்கும் நோக்கத்தில் விஷம் வைத்துள்ளனர்.
பெண்கள் பயிலும் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என சிலர் விரும்புவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் பிற்பகுதியில் இருந்து 100க்கணக்கான பள்ளி மாணவிகளிடையே சுவாச நச்சு வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட சில சிறுமிகளுக்கு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விஷம் வைக்கப்பட்ட சம்பவம் வேண்டும் என்றே செய்யப்பட்டவை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அரசு செய்தி தொடர்பாளர் அலி பஹதோரி ஜஹ்ரோமி, உளவுத்துறை மற்றும் கல்வி அமைச்சகங்கள் விஷத்தன்மைக்கான காரணத்தை கண்டறிய முயற்சி செய்து வருவதாக கூறினார்.
- கோம் நகரில் அதிகளவில் சிறுமிகளுக்கு சிலர் விஷம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
- தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட நகரங்களில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெக்ரான்:
ஈரானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோம் நகரில் அதிகளவில் சிறுமிகளுக்கு சிலர் விஷம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இச்சம்பவத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பெண்கள் கல்வி கற்பதை தடுப்பதற்காக சிலர் இது போன்று செய்து வருகிறார்கள் என்றும் பெண்களுக்கான பள்ளிகளை மூட வலியுறுத்தி சிலர் செயல்படுவதாகவும் தெரிவித்தது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட நகரங்களில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஹமேடன், ஜான்ஜன், மேற்கு அஜர்பை ஜான், பார்ஸ், அல்போர்ஸ் மாகாணங்களில் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரசனைகளால் ஏராளமான மாணவிகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் பள்ளிகள் மீது ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஈரானில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானில் 10 மாகாணங்களில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவிகள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை பல நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையேதான் பெண்கள் பள்ளிகள் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறும்போது, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம் இதுவாகும். இதன் மூலம் நமது அதிகாரிகள், பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்.