என் மலர்
நீங்கள் தேடியது "ஏபிவிபி"
- ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் சார்பில் போட்டியிட்ட தனஞ்ஜெய் 2598 வாக்குகள் பெற்றார்.
- ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்றார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த இடதுசாரி குழு, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ABVP) ஆகிய இரண்டு அணிகள் போட்டியிட்ட ஒருங்கிணைந்த இடதுசாரி குழு ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் (AISA) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த அணி சார்பில் தனஞ்ஜெய் போட்டியிட்டார். ஏபிவிபி சார்பில் உமேஷ் சி அஜ்மீரா போட்டியிட்டார்.
இதில் தனஞ்ஜெயா 2598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தனஞ்ஜெயா பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1996-97-ல் பட்டி லால் பைர்வா என்பவர் மாணவர்கள் சங்கம் தேர்தல் வெற்றி பெற்றிருந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தார். அதன்பின் சுமார் 27 வருடங்கள் கழித்து தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஜேஎன்யு மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற தனஞ்ஜெய் கூறுகையில் "இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் வெறுப்பு அரசியல், வன்முறையை நிராகரித்துள்ளனர். மாணவர்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் மாணவர்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.
- டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது
- தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ABVP பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர். வாக்கு எண்ணிக்கையின் போதும் அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில் ABVP இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது.
இதுதான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் "பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்" என நிர்பந்தத்தால் மிகை படுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. அதில், ஏ.பி.வி.பி வேட்பாளரான உமேஷ் சி அஜ்மீராவை வீழ்த்தி, ஆல் இந்தியா மாணவர்கள் சங்க வேட்பாளர் தனஞ்ஜெயா வெற்றி பெற்றார்.
- மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அசைவம் சமைக்க கூடாது என்றும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் ஏபிவிபி அமைப்பினர் கூறியுள்ளனர்.
- அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர்.
நேற்று (புதன்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் செயல்பட்டு வரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் (SAU) அசைவம் சாப்பிட்டது தொடர்பாக இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி மாணவர் அமைப்பான SFI (இந்திய மாணவர் கூட்டமைப்பு) மற்றும் வலதுசாரி மாணவர் அமைப்பான ABVP (பாரதிய வித்யார்த்தி பரிஷத்) உறுப்பினர்கள் இடையே மொதலானது ஏற்பட்டது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அசைவம் சமைக்க கூடாது என்றும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் ஏபிவிபி அமைப்பினர் கூறியுள்ளனர். மீறி நேற்று அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்ளை ஏபிவிபியின் அடித்ததாக SFI அமைப்பு தெரிவித்தது. இதை எதிர்த்த எஸ்எப்ஐயினருடன் ஏபிவிபியினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக SFI வெளியிடுள்ள அறிக்கையில், ஏபிவிபி குண்டர்கள் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களைத் தாக்கினர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, தெற்காசிய பல்கலைக்கழகத்திலிருந்து பிற்பகல் 3.45 மணியளவில் மைதான்கரி காவல் நிலையத்திற்கு மோதல் தொடர்பான அழைப்பு வந்தது. நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, இரண்டு குழுக்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.
மோதல் தொடர்பாக SAU நிர்வாகம் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், பல்கலைக்கழகத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முறையான புகார் எதுவும் வரவில்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தால் உள் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், மன்சாவுர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக வகுப்பறைக்கு வெளியில் கோஷங்களை எழுப்பி கூச்சலிட்டனர்.
அப்போது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பேராசிரியர் தினேஷ் குப்தா என்பவர் மாணவர்கள் கோஷங்கள் எழுப்புவதை கண்டித்து கலைந்து செல்லுமாறு கூறினார். இதனால், ஆத்திரம் அடைந்த ஏ.பி.வி.பி மாணவர்கள் பேராசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினர். அவ்வாறு புகார் அளிக்காமல் இருக்க வேண்டுமானால் பேராசிரியர் தினேஷ் குப்தா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிரட்டலுக்கு பணிந்த பேராசிரியர் மாணவர்களின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டார், அதை வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் பரவிட்டதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவர்களின் இந்த செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் மன்னிப்பு கேட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’ஆளும் பாஜக ஆதரவு மாணவர்கள் ஆசிரியரை அவமதித்துள்ளனர். ஆசிரியர்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில், மாணவர்கள் ஆசிரியரை மிரட்டுவதிலும், ஆசிரியர் மாணவர்களின் காலை தொடுவதிலும் இருந்து எவ்வகையான மதிப்பு வெளிப்படுகிறது ?, அறிவுடையவர்கள் செய்யும் செயலா இது ?’ என ராகுல் காந்தி மாணவர்களை கண்டித்துள்ளார். #ABVP #RahulGandhi
मंदसौर में सत्ताधारी पार्टी के छात्र नेताओं द्वारा एक गुरु का अपमान।
— Rahul Gandhi (@RahulGandhi) September 29, 2018
गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर मानने वाले देश में यह कौन सा ‘संस्कार’ है कि छात्र धमकी दें और गुरु उनके पाँव छुए। ज्ञान के साथ यह कैसा सलूक है? pic.twitter.com/XmT3VAkJ6E