என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரியானா"
- கர்நாடகாவில் மசூதி அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது வன்முறை வெடித்தது.
- போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகமங்கலா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது.
இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை காவல்துறை வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.
இந்த வன்முறை சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரியானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இந்த வன்முறை சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
குருஷேத்ராவில் உரையாற்றிய மோடி, "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை தடுக்கிறது. இன்று இருப்பது பழைய காங்கிரஸ் கட்சி அல்ல. இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறிவிட்டது. பொய் பேசுவதற்கு காங்கிரஸ் வெட்கப்படாது. இன்று காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் கணபதியைக் கூட சிறையில் அடைக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
- அதில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது என்றார்.
சண்டிகர்:
அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைவதற்குள் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமத்துவமான முறையில் வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் நாட்டில் பொய்யையும், அராஜகத்தையும் பரப்பும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. பொய்களைப் பேசுவதில் அவர்களுக்கு அவமானம் இல்லை.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாசல பிரதேசத்தில் யாரும் இன்று மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில், அங்கு மாநில அரசு பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை நிர்வகிக்க தவறிவிட்டது.
அரியானாவின் முதல் மந்திரி நயாப் சிங் சயினி மாநிலத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முதலீடுகள் மற்றும் வருவாய் அடிப்படையில் அரியானா முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
மத்தியில் 3-வது முறை ஆட்சி செய்வதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினார்கள். அதேபோல் அரியானாவிலும் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
- பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது.
- காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா்.
சண்டிகர்:
அரியானாவில் முதல்- மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று நடவடிக்கை மேற்கொண்டாா்.
அரசமைப்புச் சட்டத்தின் கீழ், மாநில பேரவை கடைசியாக கூடியதில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும்.
அரியானாவில் பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த மாா்ச் 13-ந் தேதி நடைபெற்றது. எனவே, அடுத்த கூட்டத்தை செப்டம்பா் 12-ந் தேதிக்குள் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாநிலத்தில் அக்டோபா் 5-ந் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் சூழலில், பேரவையை கூட்ட வேண்டியதை தவிா்க்க அதை முன்கூட்டியே கலைக்குமாறு கவர்னருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது.
இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 174 (2) (பி) பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேரவையை கவர்னர் நேற்று (வியாழக்கிழமை) கலைத்தாா். அரசமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இனி, காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா். அரியானா பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- அங்கு சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார் சாவித்ரி ஜிண்டால்.
சண்டிகர்:
இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருந்து வருபவர் சாவித்ரி ஜிண்டால்.
ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரசாரம் செய்தார்.
இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரியானாவின் ஹிசார் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார்.
நேற்று பா.ஜ.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் லை பாஜக கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஆனால் அதில் சாவித்ரியின் பெயர் இடம்பெறவில்லை. ஹிசார் தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளவரும், சுகாதார அமைச்சருமான கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியானாவின் ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார்.
பா.ஜ.க.வில் சீட் மறுக்கப்பட்டதால் கோடீஸ்வர பெண்மணி சுயேட்சையாக போட்டியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
- இரண்டு மந்திரிகள், ஒரு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ராஜினாமா.
- விசுவாச தொண்டர்கள் ஓரங்கட்டப்படுவதாக துணைத் தலைவர் குற்றச்சாட்டு.
அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வேலை செய்து வருகிறது. அதேவேளையில் ஆட்சியை பாஜக-விடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த முறை பாஜக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணி தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி வருவது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இரண்டு மந்திரிகள், எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மந்திரி கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அரியானா மாநில பாஜக-வின் துணைத் தலைவர் சந்தோஷ் யாதவ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
கட்சிக்கு விசுவாசமாக உழைத்த தொண்டர்களை விட, உழைக்காதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என சந்தோஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தனது ராஜினாமா கடிதத்தில் "கட்சிக்கான என்னுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சிகள் கொள்கையை பின்பற்றியுள்ளேன். ஆனால் அடிமட்டத்தில் போராடி, பக்தியுடன் உழைத்து, கட்சியை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்களை கட்சி புறக்கணித்து வருகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.
இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு கட்சிக்காகவும் தங்கள் சட்டமன்றத் தொகுதி மக்களுக்காகவும் உழைக்காத நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது கட்சியினர் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் பரப்பி வருகிறது" சந்தோஷ் யாதவ் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ் யாதவ் அட்டெலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், மத்திய மந்திரி ராவ் இந்தரஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவிற்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை முன்னாள் மந்திரி பச்சான் சிங் ஆர்யா பாஜகவில் இருந்து வெளியேறினார். சிஃபிடான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையிலா் ஜனநாயக் ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்த குமார் கவுதமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ராஜினமானா செய்தார்.
தற்போது சந்தோஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதால் இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக இரண்டு மந்திரிகள், ஒரு எம்எல்ஏ பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தனது பெயர் பட்டியலில் இருக்கும் என நம்பியதாக அவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மண் தாஸ் நாபாவும் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் சேர மும்முரம் காட்டி வருகிறார்.
அரியானா, பாஜக, சட்டமன்றத் தேர்தல், பாஜக, வேட்பாளர் பட்டியல், வீடியோ மாநிலத்தில் கடந்த 2014 முதல் பா.ஜ.க. தலைமயிலான அரசு ஆட்சியில் உள்ளது. தற்போது அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. முன்னதாக அக்டோபர் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த தேர்தல் ஆணையம் அதன்பின்னர் தேதியை மாற்றியுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 4 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது பாஜகவுக்குச் சாதகமான செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் தேர்தலுக்கான தனது 67 வேட்பாளர்களின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது . இதில், லத்வா தொகுதியில் முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிடுகிறார். பாஜக வெளியிட்ட பட்டியல் அக்கட்சியில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாக அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் பட்டியல் வெளியான மறுநாளே கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
ரணியா தொகுதிக்குத் தனது பெயர் அறிவிக்கப்படாத அதிருப்தியில் முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனும், மாநில எரிசக்தி மற்றும் சிறைத்துறை அமைச்சருமான ரஞ்சித் சிங் சவுதாலா பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகினார். சீட் கிடைக்காத விரக்தியில் பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மண் தாஸ் நாபாவும் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் சேர மும்முரம் காட்டி வருகிறார்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சஷி ரஞ்சன் பார்மரிடம் அவருக்கு ஏன் சீட் தரவில்லை என்று பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, தனது பெயர் பட்டியலில் இருக்கும் என நம்பியதாக அவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shashi Ranjan Parmar, former BJP candidate from Tosham, broke down in tears after losing his ticket to Shruti Choudhry, Has called a meeting with his supporters on September 6 at Bhiwani. may contest as independent #HaryanaElections2024 #BJP #Tosham #ShashiRanjan #ShrutiChoudhry pic.twitter.com/VgQimmX4Of
— Sushil Manav (@sushilmanav) September 5, 2024
இதுபோல தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் ஓபிசி பிரிவு தலைவரும் முன்னாள் அமைச்சருமான கரண் தேவ் காம்போஜ் கட்சி மீட்டிங்கில் முதலமைச்சர் நயாப் சிங் சைனியுடன் கை குலுக்க மறுத்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இதுபோல சீட் கிடைக்காதவர்கள் வெளிப்படையாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதால் அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது.
"कोई हाथ भी न मिलाएगा जो गले मिलोगे तपाक से ये नए मिज़ाज का शहर है ज़रा फ़ासले से मिला करो।" - बशीर बद्रटिकट न मिलने से नाराज़ हरियाणा ओबीसी मोर्चा के प्रदेश अध्यक्ष करण देव कांबोज को मनाने पहुँचे मुख्यमंत्री नायब सिंह सैनी से हाथ नहीं मिलाया कांबोज ने। pic.twitter.com/sVVSEi2mOh
— Akhilesh Sharma (@akhileshsharma1) September 6, 2024
- வினேஷ் போகத், பஜ்ரங் புனியா நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
- அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று சந்தித்தனர். இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத் மற்றும் பஜ்ர்ங் புனியா சந்திப்பு மூலம் கடந்த வருடம் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது நிரூபணம் ஆகியுள்ளது என மத்திய உள்துறை மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களின்போது நமது விளையாட்டு வீரர்கள் அரசியல் பிரமைக்குள் சிக்கிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். அன்று ஆரம்பித்தது இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவர்கள் (மல்யுத்த வீரர்கள்) காங்கிரஸிடம் சீட்டு கேட்கிறார்கள். இதன் பொருள் ஒரு இணைப்பு உள்ளது என்பதாகும். அப்போது அது தெளிவாக இல்லை என்றால், இப்போது அது முற்றிலும் தெளிவாக உள்ளது.
இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங்கிங்கு எதிராக பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூஷன் இளம் ஜூனர்ய மல்யுத்த வீராங்கனைகளுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது.
- அரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
- தூய்மை பணியாளர் வேலைக்கு 6,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அரியானா மாநில அரசு அலவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு 6,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள், சுமார் 40,000 இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாதம் 15,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் இந்த வேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை ஆளும் மாநில பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் டொயோட்டா பார்ட்சியூனர் கார்களில் பசு கடத்தப்படுவதாக குண்டர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது
- கார் நின்றவுடன் அவர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஆர்யன் மீது மேலும் ஒரு குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
அரியானாவில் காரில் பசுவைக் கடத்தியதாகத் தவறாக நினைத்து 12 வகுப்பு மாணவனை 5 பசு பாதுகாப்பு குண்டர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் டொயோட்டா பார்ட்சியூனர் கார்களில் பசு கடத்தப்படுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து சட்டவிரோதமான துப்பாக்கிகளுடன் கிளம்பிய கிருஷ்ணா,அணில் கௌசிக், வருண்,சவுரப் ஆகிய 5 பசு பாதுகாப்பு குண்டர்கள், படேல் சவுக் சாலையில் வந்த ரெனால்ட் டஸ்ட்டர் டாக்சி காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் டாக்சி டிரைவர் ஹர்ஷித் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த காரை சுமார் 30 கிலோமீட்டர்க்கு தங்களது வாகனத்தில் துரத்திச் சென்ற பசு பாதுகாப்பு குண்டர்கள், காருக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர், இதில் தனது நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ரா மீது குண்டு பட்டு படுகாயமடைந்துள்ளார். கார் நின்றவுடன் அவர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஆர்யன் மார்பில் மேலும் ஒரு குண்டு துளைத்தது.
அதன்பின்னரே தாங்கள் தவறான காரை துரத்தியுள்ளோம் என்று அறிந்த பசு பாதுகாப்பு குண்டர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஆரியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தற்போது பசு பாதுகாலவர்கள் ஐவரையும் கைது செய்துள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தின் பேரில் இந்த கொலை பசு கடத்தல் தொடர்புடையது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
- அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்டது.
அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த சாபிர் மாலிக் என்ற இளைஞன் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது நண்பருடன் சேர்ந்து தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்தாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சாபிரை தாக்கிய பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
பசு பாதுகாப்பு கும்பலின் இந்த வெறிச்செயல் குறித்து பேசிய அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "பசு பாதுகாப்புக்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆதலால் இதனை கும்பல் கொலை என்று கூறுவது சரியல்ல. கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்? இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. இந்த சம்பவங்கள் துரதிஷ்டவசமானது" என்று அவர் தெரிவித்தார்.
- அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
- அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் முதல் மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அரியானாவில் பிஜோனி சமுதாய மக்களின் முக்கிய பண்டிகை தேர்தல் நடைபெறவிருந்த நாளன்று வருவதால் அக்டோபர் 1-ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வந்த பீகாரைச் சேர்ந்த சாபிர் மாலிக் என்ற இளைஞன் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது நண்பருடன் சேர்ந்து தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்தாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
#WATCH :In Badhra of #CharkhiDadri , some youths killed a #migrant worker who sold scrap by #beating him with sticks, accusing him of cooking, eating and selling beef. The youth was identified as #SabirMalik #Umar , 26 years, and was living in a slum in Badhra. The family alleges… pic.twitter.com/r9QTBGQfVf
— Indian Observer (@ag_Journalist) August 31, 2024
இந்நிலையில் சாபிரை தாக்கிய பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்