search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள்"

    • ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அறிமுகத்தோடு புதிய ஐபோன் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளின் படி ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்குவதற்கான முன்பதிவுகள் குறைவாகவே இருந்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் ப்ரோ சீரிஸ் விற்பனை அதிகளவில் இருக்கும் என்ற கணிப்பில் அதிவேக டெலிவரி மற்றும் அதிக யூனிட்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

     


    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஐபோன 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதிக யூனிட்கள் முன்பதிவாகி உள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் ஒருவார காலத்தில் ஐபோன் 16 வாங்க 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பிளஸ் மாடல்களை வாங்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 16 சதவீதம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.7 சதவீதம் குறைவு ஆகும். 

    • இருவரும் ஆப்பிள் நிறுவனத் தலைவரான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.
    • டிம் குக்குடன் எடுத்த புகைப்படத்தை சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

    வாஷிங்டன்:

    நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருதரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தியில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

    இதற்கிடையே, உலகின் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது நியூ மாடல் ஐ போன் சீரிஸ், வாட்ச் சீரிஸ், ஏர் பாட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கான அறிமுக வெளியீட்டு விழா 'இட்ஸ் க்ளோடைம்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர்கள் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் பங்கேற்று ஆப்பிள் நிறுவனத் தலைவரும், தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.

    இந்நிலையில், டிம் குக்குடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மறக்கமுடியாத மேஜிகல் அனுபவத்தை கொடுத்த டிம் குக்கிற்கு நன்றி. வியப்பூட்டும் வகையில் எங்களைச் சுற்றி புதிய தொழில்நுட்பங்களும், சிறந்த படைப்பாற்றல்களும் இருந்தன. அதனால் எங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது" என பதிவிட்டுள்ளார்.

    • உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது.
    • ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது.

    மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.


    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டைப் போலவே, புதிய தலைமுறை ஐபோன்களில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் உள்ளன.


    ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் சிறப்பு அம்சங்கள்

    * 6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16.

    * 6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 பிளஸ்,

    * ஏ18 ப்ராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது,

    * ஐஓஎஸ் 18 இயங்குதளம்.

    * 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.

    * 12 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது.

    * 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா.

    * டைப்-சி சார்ஜிங் போர்ட்.

    * ஐபோன் 16 (128ஜிபி) ரூ.79,900.

    * ஐபோன் 16 பிளஸ் (128ஜிபி) ரூ.89,900.

    பயனர்கள் சில டாஸ்குகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ஆக்ஷன் பட்டன் இதில் இடம்பெற்றுள்ளது

    அதேபோல கேமரா கன்ட்ரோல் பட்டனும் இதில் இடம்பெற்றுள்ளது.


    ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்

    • ஏ18 புரோ சிப்

    • 6.3 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 புரோ.

    • 6.9 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 புரோ மேக்ஸ்.

    • 48 மெகாபிக்சல் பிரதான கேமரா.

    • 48 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது.

    • 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா.

    • கேமரா கன்ட்ரோல் பட்டன் புரோ மாடல் போன்களிலும் இடம்பெற்றுள்ளது.

    • ஐபோன் 16 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,19,900.

    • ஐபோன் 16 புரோ மேக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.1,44,900.

    வரும் 13-ம் தேதி முதல் புதிய ஐபோன் 16 வரிசை போன்களை முன்பதிவு செய்யலாம். 20-ம் தேதி முதல் பயனர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது.
    • அந்த நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

    மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அன்று குளோடைம் நிகழ்வில் உலகளாவிய சந்தைகளில் ஐபோன் 16 தொடரை ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 வரிசை போன்கள் உள்பட ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

    அதாவது, இந்தியாவில் ஐபோன் 16 128 ஜிபி: விலை ரூ. 79,900

    ஐபோன் 16 256 ஜிபி : விலை ரூ. 89,900,

    ஐபோன் 16 512 ஜிபி 1,09,000 ரூபாய் ஆகும்.

    • ஸ்டிக்கர் விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது அல்ல.
    • பழங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

    சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் தரமானது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதனால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும் அதில் ஊட்டச்சத்துக்களும் கூடுதலாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.

    அதனால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளப்பான ஆப்பிளை தேர்ந்தெடுத்து வாங்குவதற்கும் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். உண்மையில் அந்த ஸ்டிக்கர் விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது அல்ல. ஆரோக்கியத்துடன்தான் நேரடி தொடர்புடையது.

    சில ஆப்பிள் பழங்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் 4 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணமாக 4026, 4987, 4139 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

    அந்த ஆப்பிள்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவை என்பதை விளக்கும் குறியீடுதான் அது.


    அந்த ஆப்பிள் பழங்கள் விளையும்போது பூச்சிகள், நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தடுக்க பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அந்த ஆப்பிள் பழங்களில் அவற்றின் வீரியம் இருக்கக்கூடும். அதனை நன்கு கழுவி சாப்பிடுவது அவசியமானது.

    சில பழங்களின் ஸ்டிக்கரில் 5 இலக்க எண்கள் இருக்கும். அவை 84139, 86532 போன்ற எண் வரிசையை கொண்டிருக்கும். அந்த பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. அதனால் அவற்றை இயற்கையான பழ இனங்களாக கருத முடியாது.

    மரபணு மாற்றம் மூலம் ஏராளமான காய்கறி, பழ இனங்கள் உருவாக்கப்படுவதால் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும் முடியாது. என்றாலும் இந்த ஆப்பிள் பழங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து விளைவிக்கப்பட்ட மற்ற பழங்களை விட சற்று விலை அதிகமாக இருக்கும்.


    9 என்ற எண்ணில் தொடங்கும் 5 இலக்க எண்களுடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்களும் இருக்கின்றன. அதாவது, 94750.

    இந்த பழங்கள் இயற்கை முறையில் விளைந்தவை. அதாவது இந்த பழங்களின் விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லிகளோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தப்படவில்லை என்று அர்த்தம். அதனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


    ஆப்பிள் பழங்கள் மட்டுமல்ல ஆரஞ்சு போன்ற பழங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. சிலர் போலி ஸ்டிக்கர்களை தயாரித்து பழங்களின் மீது ஒட்டுவதும் நடக்கிறது.

    அந்த பழங்கள் உயர்ந்த தரம் கொண்டவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகின்றன என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கவும் செய்வார்கள்.

    எனவே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

    • ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.
    • ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.

    அதன்படி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களில், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன் சீரிசில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

    புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்துள்ளார். இந்த சீரிசில் அதிகபட்சம் ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்கள், மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். இந்த சீரிசில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் SE4 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றில் அனைத்து மாடல்களிலும் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படும். இத்துடன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்தார்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • அப்போது ஐ-போன் 16, புதிய ஏர்பாட்ஸ் மாடல்கள் உள்ளி புதிய தயாரிப்புகளை வெளியிடும்.

    ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் பெரிய நிகழ்ச்சி நடத்தி அதில் தனது புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடும். அதுபோன்ற இந்த ஆண்டு நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஐ-போன் 16, புதிய ஏர்பாட்ஸ் மாடல்கள் மற்றும் பல புதிய தயாரிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு முறையும் புதிய மாடல்களை வெளியிடும்போது, பழைய மாடல்களின் தயாரிப்புகளை நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் ப்ரோமேக்ஸ் டைட்டானியம் பீச்சர் கொண்ட முதல் ஆப்பிள் ஐ-போன் ஆகும். இதன் டிஸ்பிளே 6.1 இன்ச் ஆகும். விரைவில் வெளியாக இருக்கும் ஐ-போன் 16 சீரிஸ் போன்களின் டிஸ்பிளே 6.7 இன்ச் ஆக இருக்க வாய்ப்புள்ளது.

    அதேபோல் ஐ-போன் 14 பிளஸ் தயாரிப்பையும் நிறுத்தலாம் எனத் தெரிகிறது. சீரிஸ் 9, அல்ட்ரா 2, எஸ்.இ. 2 வாட்ச்களின் தயாரிப்புகளையும் நிறுத்தலாம். ஏர்பாட்ஸ் 2 மற்றும் 3, ஐ-பேடு மினி 6 மற்றும் ஐ-பேடு 10 ஆகியவற்றின் தயாரிப்புகளையும் நிறுத்தலாம் எனத் தெரிகிறது.

    • டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்கியது.
    • ஐபோன் தயாரிப்பதற்கான 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம்.

    டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன் இணைந்து இந்தியாவில் ஐபோன் தயாரிக்க இருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம். தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் தொழிற்சாலை தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து செல்போன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஐபோன் உருவாக்கப்படும் (Assembly). இதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
    • ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும்.

    ஆப்பிள் அடுத்த மாதம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை அறிமுகப்படுத்த உள்ளது. இவை டிஸ்ப்ளே, செயல்திறன் மற்றும் கேமரா அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 சீரிசின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

    புது ஐபோன் மாடல்கள் ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் சீரிஸ் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைக் கொண்டுவரும் என்று தெரிகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மாடல் அளவில் பெரிய மற்றும் பிரகாசமான ஸ்கிரீன், சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று பெரிய OLED டிஸ்ப்ளேக்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் 6.7 இன்ச் திரையில் இருந்து அதிகரித்துள்ளது. கூடுதலாக, இரண்டு மாடல்களும் மெலிதான பெசல்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் உள்ளது.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும். இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட A17 ப்ரோ சிப்பை விட கணிசமான செயல்திறன் மேம்பாடுகளை உறுதியளிக்கும்.

    கூடுதலாக, ஆப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கேமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் சமீபத்திய வைபை 7 தரநிலையை ஆதரிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இது வேகமான மற்றும் நம்பகமான இணைய இணைப்புகளை வழங்குகிறது.

    விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைய வெர்ஷன்களைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது
    • Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது

    ஐ-போன்கள், ஐ-பாட்கள் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆப்பிள் சாதனங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது, Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது, ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் bypass செய்து தகர்க்கப்பட வாய்ப்புள்ளது, சேவை மறுப்பு எனப்படும் Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும், பாதுகாப்பைக் தகர்க்கும் spoofing தாக்குதல் மூலமும் ஆப்பிள் சாதனங்கள் எளிதில் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஆப்பிள் மென்பொருள்களான, 17.6 and 16.7.9 க்கு முந்தைய iOS and iPadOS வெர்ஷன்கள்,13.6.8 க்கு முந்திய macOS Ventura வெர்ஷன்கள்,12.7.6 க்கு முந்திய macOS Monterey வெர்ஷன்கள், 10.6 க்கு முந்திய watchOS வெர்ஷன்கள்,17.6 க்கு முந்திய tvOS வெர்ஷன்கள், 1.3 க்கு முந்தைய visionOS வெர்ஷன்கள், 17.6 க்கு முந்தைய Safari வெர்ஷன்கள் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும் சாதனங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த எச்சரிக்கை குறித்து ஆப்பிள் நிறுவனத்தில் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக கடந்தவாரம்தான் ஆப்பிள் சாதனங்களில் செக்கியூரிட்டி அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது குறிபிடத்தக்கது. 

    • கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன.
    • முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு.

    ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புது விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்தை சேர்ந்த பலர் இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.

    பத்து நிமிடங்கள் ஓடும் புது விளம்பர வீடியோ கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது "Apple at Work – The Underdogs" சீரிசின் கீழ் வெளியாகி இருக்கும் ஐந்தாவது வீடியோ ஆகும்.

     


    வீடியோவில் நான்கு கதாபாத்திரங்கள் "அன்டர்டாக்ஸ்" என்று காட்டப்படுகின்றன. இவை பணியாற்றும் இடங்களில் ஆப்பிள் சாதனங்கள் மற்றும் மென்பொருள் மூலம் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சமீபத்திய வீடியோவில், கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன. இது தொடர்பாக காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் ரெயில் மற்றும் டக்டக் வண்டிகளில் பயணம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இவை தாய்லாந்தின் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த வீடியோவில், தாய்லாந்தின் தொழில்நுட்ப வளர்ச்சி, இன்றைய கால சூழல் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இதற்கு தாய்லாந்தை சேர்ந்த பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    • மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
    • அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.

    பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

    அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    ×