என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை"

    • குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
    • நாகர்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 7.15 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியிட உள்ளனர்

    தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

    படத்தின் அடுத்த அப்டேட்டான நாகர்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 7.15 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து நாகர்ஜூனாவும் பேசி வீடியோவை அவரது எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ளார். படத்தில் எவ்வித கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.  

    • இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார்.
    • தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் பாராட்டினார்கள்.

    பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் 51- வது படம் 'குபேரா'. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஐதராபாத் , திருப்பதி உள்பட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது.




    தனுஷின் முதல் தோற்றம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதில் அவர் யாசகனை போல காட்சியளித்தார்.

    மேலும் சில நாட்களுக்கு முன் நாகர்ஜுனாவின் தோற்றம் வெளியானது. அதில் மழையில் அவர் குடை பிடித்தபடி நடந்து வர, பின்னால் கட்டு கட்டாக பணம் இருப்பது போல காணப்பட்டது.

    இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார். இதில் அவர் 10 மணி நேரம் முககவசம் எதுவும் அணியாமல் நடித்துள்ளார்.




    மேலும் உண்மையான உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அவர் முகக்கவசம் அணியாமல் அங்குள்ள துர்நாற்றத்தை சகித்து நடித்ததாக படக்குழு தெரிவித்தது.தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் வியந்து பாராட்டினார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டு.
    • ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுருதிஹாசன் தற்போது மும்பையில் தங்கி இருக்கிறார். அங்கு ஒரு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சுருதிஹாசன் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.

     காரில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இதையடுத்து காரை ஒதுக்கி நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார். ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    சுருதிஹாசன் ஆட்டோவில் சென்றது புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டினர். குறிப்பாக மும்பையில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதில் காரை விட ஆட்டோவில் போவதே சிறந்தது என்கின்றனர்.

    அமிதாப்பச்சனும் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலால் காரை ஒதுக்கி விட்டு ஆட்டோவில் பயணித்த சம்பவம் நடந்தது. இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமன்றி சுற்றுச்சுழலுக்கும் சிறந்தது. நடிகர்களுக்கு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்லவும் உதவுகிறது என்கின்றனர்.

    • புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது
    • மும்பை நகரில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இதனால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு. 

    இதுவரை விபத்தில் சிக்கிய 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளனர்.

    • விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
    • இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    மும்பையில் நேற்று (மே 13) வீசிய பலத்த காற்றால் ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 74 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பெட்ரோல் நிலையம் அருகே சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒதுங்கியிருந்தன. அந்த சமயத்தில் அருகில் நிறுவப்பட்டிருந்த ஈகோ மீடியா என்ற நிறுவனத்தின் 250 டன் எடை கொண்ட விளம்பரப் பலகை விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

     

    விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஈகோ நிறுவனத்தின் இயக்குனர் பாவேஷ் தலைமறைவாகி உள்ளார். இந்தநிலையில், அந்த விளம்பரப் பலகையை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்றே குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

    ஆனால் அந்த புகார் மனு தொடர்பாக ஒரு வருட காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையே அரசின் அலட்சியத்தாலேயே 14 உயிர்கள் பலியாகி உள்ளதாக பலரும் கண்டனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார்.

    மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிர அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தது.

    உரிய அனுமதியின்றி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஈகோ டிஜிட்டல் நிறுவனம் விளம்பரப் பலகையை நிறுவியதால்தான் 14 உயிர்கள் பலியானது என்று கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று அந்த ராட்சத பலகையை ஈகோ நிறுவனம் விளம்பரப் படுத்தியிருந்தது.

    இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை காவல்துறை தீவிரமாக தேடிவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாவேஷ் ஷிண்டேவை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பாவேஷ் ஷிண்டே மீது ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார்.
    • ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார். அப்போது அவர் கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தார்.

    அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் பதறினார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என்று தவிப்போடு கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

    ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

    தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த வெடி விபத்தால் அருகில் இருந்த கார் ஷோ ரூம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலி பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பாய்லர் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெருமளவிலான கரும்புகை உருவாகி அதிலிருந்து சாம்பல்கள் மழைச்சாரல் போல கீழே விழுந்ததாகவும் 3 முறை வெடி சத்தம் கேட்டதாகவும் சுமார் 3-4 கிமீ வரை அதிர்வு உணரப்பட்டதாகவும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    இந்த வெடி விபத்தால் அருகில் இருந்த கார் ஷோ ரூம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொழிற்சாலைக்குள் இன்னும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்கிற விபரம் இன்னும் தெரியவில்லை

    இந்த தீ விபத்து தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த தீ விபத்து தொடர்பாக 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. . நான் மாவட்ட ஆட்சியருடன் பேசியுள்ளேன். மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

    • மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
    • அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    மும்பை:

    சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் குண்டு வெடிக்கும் என்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் 174 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் பதட்டமின்றி பத்திரமாக மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதன்படி மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் இண்டிகோ விமானம் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது விமானத்தின் கழிவறையில் 30 நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கிலத்தில் டஸ்யூ பேப்பர் ஒன்றில் எழுதப்பட்ட எச்சரிக்கை குறிப்பு ஒன்று கிடந்தது. அதையும் பறி முதல் செய்துள்ள போலீசார் இதனை எழுதிப் போட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இண்டிகோ விமானத்துக்கு ஒரே வாரத் துக்குள் கிடைத்த 2-வது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். கடந்த 28-ந் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
    • போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது

    ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

     

    அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.  

    பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது

    மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் மோதியதில் பெண் ஒருவர் பெண் ஒருவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாடியிருந்தனர். சம்பவத்தின்போது ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தினார்.

    இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் காயமடைந்த பெண் தனது மூக்கில் இருந்து ரத்தம் வருவதை காட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைததளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

    இந்நிலையில் சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ககர் போலீஸார், ரவீனா போதையில் இல்லை என்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தெரிவித்துள்ளனர்.

    பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பங்குசந்தை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
    • பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பங்குசந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப் பட்டிருந்தது. அதேபோல இன்று காலை வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு நடந்த பிரி மார்க்கெட் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

    இதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடங்கி பின் கணிசமாகச் சரிந்தாலும் 2000 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

    இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2106 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 67 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 663 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 193 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு, நிப்டி குறியீடு வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.

    தேர்தல் எதிரொலியால் கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவிலான சரிவையும், தடுமாற்றத்தையும் சந்தித் தன. கருத்துக்கணிப்பில் தேர்தல் முடிவு பா.ஜனதா வெற்றிக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டதால் இன்று சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவுகிறது.

    வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×