என் மலர்
நீங்கள் தேடியது "சாம்சங்"
- சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 63 வயதான ஹான் ஹாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்ததாக சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இணை தலைமை செயல் அதிகாரி உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவியை ஏற்க இருப்பது யார் என்பது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஹான் சாம்சங் நிறுவனந்தின் நுகர்வோர் மின்சாதனங்கள் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவுக்கு தலைமை வகித்து வந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தில் டிஸ்ப்ளே பிரிவில் பணியில் சேர்ந்த ஹான் ஜாங் ஹீ கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இணை தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார் என்று கூறப்படுகிறது.
தொலைகாட்சி பிரிவில் சாம்சங் நிறுவனம் முன்னணி இடத்தை அடைய ஹான் பெரும் பங்கு வகித்தார் என்று கூறப்படுகிறது. இவர் வீட்டு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் பங்குதாரர்களிடையே உரையாற்றிய ஹான்,"2025 ஆண்டு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும், எனினும் நிறுவனங்களுடன் இணைதல் மற்றும் அவற்றை கைப்பற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொண்டு வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்," என்று தெரிவித்து இருந்தார்.
- சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புது ஸ்மார்ட்போன் விவரங்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M23 5ஜி ஸ்மார்ட்போன் சமீபத்தில் தான் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருந்தது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி A04e மாடலும் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
டிப்ஸ்டரான சுதான்ஷூ அம்போர் SM-M236B/DS, SM-A045F/DS மற்றும் SM-A042F/DS மாடல் நம்பர் கொண்ட மாடல்கள் சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்து இருக்கிறார். இந்த மாடல் நம்பர்கள் கேலக்ஸி M23 5ஜி, கேலக்ஸி A04 மற்றும் கேலக்ஸி A04e பெயர்களில் விற்பனைக்கு வரலாம். மூன்று மாடல்களில் இரு ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M23 5ஜி மாடலில் 6.6 இன்ச் LCD FHD+ 120Hz ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
கேலக்ஸி A04e மாடலில் 6.5 இன்ச் PLS LCD ஸ்கிரீன், HD+ ரெசல்யூஷன், 5MP செல்பி கேமரா, ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், ஒன் யுஐ கோர் 4.1, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்ப்ளே, 5MP செல்பி கேமரா, ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1, 5000 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.
- இவர் 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.
- சாம்சங் மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
சியோல் :
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தை சேர்ந்த 3-ம் தலைமுறை நபராவார். 54 வயதான லீ ஜே யோங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார். ஜே ஒய் லீ என்றும் அழைக்கப்படும் லீ ஜே யோங் ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தென்கொரியா அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
- சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது கேலக்ஸி S23 சீரிஸ் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் SM-S911B/DS எனும் மாடல் நம்பர், கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன் SM-S916B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மாடல் நம்பர்கள் தவிர இரு ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, கேலக்ஸி S23 பிளஸ் மாடலில் 6.6 இன்ச் AMOLED ஸ்கிரீன், பிளாட் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட் அவுட் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இதில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அல்லது எக்சைனோஸ் 2300 பிராசஸர் வழங்கப்படலாம். இவற்றில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 ஒஎஸ் வழங்கப்படலாம்.
பேட்டரியை பொருத்தவரை கேலக்ஸி S23 மாடலில் முந்தைய S22 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்ட 3700 எம்ஏஹெச் பேட்டரியை விட பெரிய பேட்டரி வழங்கப்படலாம். இத்துடன் இரு மாடல்களிலும் 25 வாட் ரேபிட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Photo Courtesy: OnLeaks x Digit.in
- இந்திய சந்தையில் பண்டிகை கால விற்பனை குறித்து சாம்சங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
- பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பண்டிகை காலத்தை ஒட்டி அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தன.
சாம்சங் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இடைவெளியில் மட்டும் ரூ. 14 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 2022 ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் 99 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
வருடாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, ஜனவரி முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சாம்சங் நிறுவன 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை 178 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விற்பனை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.

"சாம்சங் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு பண்டிகை காலம் சிறப்பாக அமைந்து இருக்கிறது. செப்டம்பர் 1 துவங்கிய 60 நாட்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 14 ஆயிரத்து 400 கோடி வருவாய் கிடைத்துள்ளது," என சாம்சங் இந்திய மூத்த இயக்குனர் மற்றும் விளம்பர பிரிவு தலைவர் ஆதித்யா பாபர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் பெருமளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் சேவை காரணமாக இந்த அளவுக்கு விற்பனை நடைபெற்று இருக்கிறது என்றும், பண்டிகை காலத்தில் மட்டும் இந்த தளத்தில் பரிவர்த்தனைகள் 10 லட்சத்தை கடந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"கேலக்ஸி S22 மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களால் இந்திய சந்தையில் வேகமாக வளரும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை சாம்சங் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ரூ. 30 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை 99 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது," என்று பாபர் தெரிவித்து இருக்கிறார்.
- சாம்சங் நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- கேலக்ஸி S23 சீரிசில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் என கூறப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வை தொடர்ந்து பிப்ரவரி 17 ஆம் தேதி கேலக்ஸி S23 சீரிஸ் விற்பனை துவங்கும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை சர்வதேச சந்தையில் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய கேலக்ஸி S23 பிளாக்ஷிப் சீரிஸ் மாடல்களின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் ஏற்கனவே இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அதன்படி கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் முந்தைய கேலக்ஸி S22 சீரிசில் வழங்கப்பட்டதை விட பெரிய பேட்டரி வழங்கப்படலாம். கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பெசல்கள், 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். தற்போது ஸ்மா்ர்ட்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, சாம்சங் மெமரி கார்டு வியாபாரத்தில் ஏற்பட்ட தொய்வு உள்ளிட்ட காரணங்களால் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு வழக்கத்தை விட முன்கூட்டியே நடைபெறும் என தெரிகிறது.
தற்போதுள்ள மாடல்களை விட புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனையை பெருமளவு அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது. கேலக்ஸி S23 மாடலில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP கேமரா, 10MP கேமரா மற்றும் 10MP செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன், 3900 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
Photo Courtesy: Onleaks X Digit.in
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புது சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஜிட்டல் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3C தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சாம்சங்கின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக புதிய கேலக்ஸி A54 5ஜி மாடலின் டிஜிட்டல் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவற்றை 91 மொபைல்ஸ் ஆன்லீக்ஸ் உடன் இணைந்து வெளியிட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A53 5ஜி மாடலுக்கு மாற்றாக புதிய கேலக்ஸி A54 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை புதிய கேலக்ஸி A54 5ஜி மாடல் 158.3x76.7x8.2mm அளவில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இது தற்போதைய கேலக்ஸி A53 5ஜி மாடலை விட அளவில் சற்று சிறியதாகவும், அகலமாகவும் இருக்கிறது.

எனினும், கேலக்ஸி A54 5ஜி மாடலின் பின்புறம் முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஃபிளாட் பேக் பேனல், மூன்று கேமரா சென்சார்கள் வட்ட வடிவம் கொண்டுள்ளன. இத்துடன் எட்ஜ்கள் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது வளைந்து காணப்படுகின்றன. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கின்றன. மைக்ரோபோன், ஸ்பீக்கர் கிரில், யுஎஸ்பி டைப் சி கீழ்புறத்திலும், சிம் டிரே, இரண்டாவது மைக்ரோபோன் மேல்புறத்தில் உள்ளன.
ஸ்மார்ட்போனின் முகப்பில் பன்ச் ஹோல் ரக கட்-அவுட், 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கேலக்ஸி A53 5ஜி மாடலில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. டிசைனை பொருத்தவரை கேலக்ஸி A54 5ஜி மாடல் தோற்றத்தில் கிட்டத்தட்ட கேலக்ஸி S23 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் உற்பத்தி தரம் கேலக்ஸி S23 மாடலை விட அதிகளவு வேறுபடும்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி A54 5ஜி மாடலில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மூன்று கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 வழங்கப்படும் என தெரிகிறது. புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: 91mobiles
- சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புதிய சாம்சங் டேப்லெட் ஸ்டைலஸ் சப்போர்ட் மற்றும் LCD டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
செப்டம்பர் மாத வாக்கில் சாம்சங் நிறுவனத்தின் SM-X506B மாடல் நம்பர் கொண்ட டேப்லெட் விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த டேப்லெட் மாடல் FE பிராண்டிங் கொண்டிருக்கும் என டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் S8 FE மாடலில் LCD டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இது அதன் முந்தைய மாடலில் இருந்ததை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி டேப் S8, S8 பிளஸ் மற்றும் S8 அல்ட்ரா மாடல்களில் சாம்சங் நிறுவனம் AMOELD டிஸ்ப்ளே வழங்கி இருக்கிறது. மேலும் டேப் S8 FE மாடலில் ஸ்லைடஸ் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் மீடியாடெக் 900டி பிராசஸர், மாலி G68 MC-4 GPU வழங்கப்படுகிறது. இது டிமென்சிட்டி 900 பிராசஸருக்கு இணையான ஒன்று ஆகும். மேலும் இத்துடன் 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி இந்த டேப்லெட் கேலக்ஸி டேப் S8 FE மாடலின் 5ஜி வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் வைபை வெர்ஷன் மட்டுமே இடம்பெற்று இருக்கும் என்றும் இது SM-X500 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி டேப் S8 FE மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், ஒன் யுஐ 5, 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி டேப் S7 FE மாடலின் பேஸ் வேரியண்டிலும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. FE மாடல் என்பதால் இதன் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
- சாம்சங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கும் சிறப்பு விற்பனையை நடத்துகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, மாணிட்டர் என ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் இந்தியா நிறுவனம் "Black Friday" சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி துவங்குகிறது. சாம்சங் Black Friday விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, மாணிட்டர், குளிர்சாதன பெட்டி என ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
சலுகைகளை முழுமையாக அறிவிக்கும் முன் அவற்றின் டீசரை சாம்சங் வெளியிட்டு உள்ளது. அதன்படி கேலக்ஸி Z ஃபோல்டு 4, கேலக்ஸி Z ஃப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களுக்கு அதிகளவு தள்ளுபடி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

சாம்சங் Black Friday சலுகை விவரங்கள்:
சாம்சங் நடத்தும் சிறப்பு Black Friday சலுகைகள் நவம்பர் 24 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் கேலக்ஸி S22 சீரிஸ் விலை ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே போன்று கேலக்ஸி Z ஃபோல்டு 4, Z ஃப்ளிப் 3 மாடல்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் விலை ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும்.
கேலக்ஸி S21 FE மாடல் விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும். மேலும் கேலக்ஸி S21 FE 5ஜி மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்பட இருக்கிறது. சாம்சங் கடைசியாக அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடல்களின் விலையும் குறைக்கப்பட இருக்கிறது. இத்துடன் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ விலையும் குறைகிறது.
இவைதவிர கேலக்ஸி A சீரிஸ் மற்றும் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி லேப்டாப், மாணிட்டர், அக்சஸரீக்கள், டிவி, சவுண்ட் பார், வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி, டேப்லெட், ஏசி மற்றும் சமையலறை சாதனங்களுக்கும் அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
- ஐபோன் மாடல்களுக்கு தேவையான பாகங்களை பல்வேறு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.
சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் OLED சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் சாம்சங்கின் OLED பேனல்களை தனது ஐபோன்களில் பயன்படுத்தி வருகிறது. OLED மட்டுமின்றி ஐபோனில் உள்ள மேலும் சில பாகங்கள் சாம்சங் போன்று மூன்றாம் தரப்பு நிறுவனங்களே உற்பத்தி செய்து கொடுக்கின்றன.
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 14 சீரிசில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டிஸ்ப்ளே பேனல்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சாம்சங் உற்பத்தி செய்தவை என தெரியவந்துள்ளது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களில் வழக்கமான பேனல்களும், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் LTPO டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது முதன்மை சீரிசில் 120 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சுமார் 80 மில்லியன் யூனிட்களில் சாம்சங் பேனல், 20 மில்லியனுக்கும் மேற்பட்ட யூனிட்களில் LG டிஸ்ப்ளே வழங்கும் ஸ்கிரீன்கள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர BOE பேனல்கள் 6 மில்லியன் யூனிட்களில் வழங்கப்பட இருக்கிறது.
மீதமுள்ள யூனிட்களுக்கு யார் டிஸ்ப்ளே பேனல்களை வழங்குவது என்ற முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் சாம்சங் மற்றும் எல்ஜி டிஸ்ப்ளே ஐபோன் 14 சீரிசின் நான்கு வேரியண்ட்களுக்கும் டிஸ்ப்ளே பேனல்களை வழங்குகின்றன. BOE வழங்கும் பேனல்கள் ஐபோன் 14 மாடலில் உள்ள 6.1 இன்ச் LTPS OLED-க்கள் ஆகும்.
- சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
- முதல் முறையாக சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் கேலக்ஸி S23 வெளியீடு பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டை 2023 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டின் முதல் அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வு கொரோனா பெருந்தொற்றுக்கு பின் முதல் முறையாக பொது மக்கள் முன்னிலையில் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் இதன் வெளியீடு நடைபெறும்.

முன்னதாக இதே போன்று வெளியான மற்ற தகவல்களில் சாம்சங் தனது கேலக்ஸி S23 சீரிஸ் பற்றிய அறிவிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் நடைபெற இருக்கும் 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன (CES) நிகழ்வில் வெளியிடலாம் என்றும் கூறப்பட்டது. எனினும், சாம்சங் தனது S சீரிஸ் மாடல்களை இவ்வாறு அறிமுகம் செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்சங்களை பொருத்தவரை சர்வதேச சந்தையில் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய கேலக்ஸி S23 பிளாக்ஷிப் சீரிஸ் மாடல்களின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் ஏற்கனவே இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அதன்படி கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் முந்தைய கேலக்ஸி S22 சீரிசில் வழங்கப்பட்டதை விட பெரிய பேட்டரி வழங்கப்படலாம். கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பெசல்கள், 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP கேமரா, 10MP கேமரா மற்றும் 10MP செல்பி கேமரா வழங்கப்படலாம்.
Photo Courtesy: Onleaks X Digit.in
- சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- புது ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் நவம்பர் மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 ஸ்டேபில் அப்டேட்-ஐ வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெற்று இருக்கும் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி M42 5ஜி மாடல் உள்ளது. இந்தியாவில் இந்த அப்டேட் SM-M426B எனும் மாடல் கோட் பெற்று இருக்கிறது. இதன் ஃபர்ம்வேர் வெர்ஷன் M426BXXU3CVK5 ஆகும்.
புது அப்டேட் ஒன் யுஐ 5.0 நன்மைகளுடன், நவம்பர் 2022 மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி பேட்ச் உள்ளிட்டவைகளையும் பெற்று இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோர் இந்த அபேடேட்டை இதுவரை பெறவில்லை எனில், ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் மெனு சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.

அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M42 5ஜி மாடலில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED, இன்ஃபினிட்டி யு-கட் டிஸ்ப்ளே, HD+ 720x1600 பிக்சல் ரெசல்யூஷன், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP டெப்த் கேமரா, 5MP லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், நாக்ஸ் செக்யுரிட்டி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, வைபை, ஜிபிஎஸ், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், ஆன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிசம் டாட் பிளாக் மற்றும் ப்ரிசம் டாட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.