search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர்"

    • நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப் உரையாற்றினார்
    • இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு அளிக்க உள்ள பதிவை குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும், புதிதாக கமிஷன் ஒன்றை அமைத்து பெடரல் அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவரின் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து 6 ஏ மாதங்களில் அவற்றில் நடந்துள்ள மோசடிகள் கண்டறியப்படும். 2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் நேர்மையாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரியாக செலுத்த நேர்ந்தது.

    எனவே நான் பதிவிற்கு வந்ததும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமிப்பேன். தலைவர் பதவியை ஏற்க அவரும் [எலான் மஸ்க்கும்] ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.

    முன்னதாக 2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

    அதிபர் தேர்தல் 

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

    பிரச்சாரக் களம்

    டிரம்ப் இன் பிரச்சாரம் ஜனநாயக கட்சியின் மாநாடு என அமெரிக்காவின் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி சிகாகோ மாகாணத்தின் இல்லினாய்ஸ் நகரத்தில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கிய நிலையில் அன்றைய தினம் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

    அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் ஹிலாரி கிளின்டன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்சல் ஒபாமா ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்து பேசினர். இந்நிலையில் மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

     புதிய பாதை 

    கட்சி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றைத் தாண்டி ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் நாம் முன்னோக்கிச் செல்லும் காலம் உருவாகும். அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக நான் இருப்பேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

     

    டிரம்பும் பைடனும் 

    டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அதிபராக இருந்தபோது கிடைத்த எல்லைகளற்ற அதிகாரத்தை தனது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தினார். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்று எச்சரித்தார். ஆனால் ஜோ பைடனின் பண்பு உத்வேகம் அளிக்கக்கூடியது. அமெரிக்காவுக்கு அவர் செய்த பங்ங்களிப்பை வரலாறு என்றும் நினைவு கூறும். அவருக்கு என்றும் தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    தாய் சியாமளா 

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது தாய் சியாமளா கோபாலன் குறித்து உருக்கமாக பேசிய காமலா ஹாரிஸ், 19 வயதில் பெரிய கனவுகளுடன் தனது தாய் எப்படி கடல் கடல்கடந்து வந்தார் என்று தெரிவித்தார். மேலும் அவரை ஒவ்வொரு நாளும் தான் மிஸ் செய்வதாகவும் குறிப்பாக  இந்த சமயத்தில் அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் கமலா கூறினார். தனது தாய் கடிமனா தைரியமான பெண் என்றும் தற்போது வானத்தில் இருந்து தன்னைப் பார்த்து புன்னைகைப்பார் என்றும் கமலா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    காசா போர் 

    காசாவில் நடந்து வரும் போர் குறித்து பேசிய கமலா, இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அமரிக்கா உடன் நிற்கும். ஆனால் காசாவில் நடந்து வரும் அழிவுகள் மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்தார்  

    • இந்த விழாவில் இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்
    • ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரசி கடந்த மே 17 ஆம் தேதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். எனவே அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.

    இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.

     

    பாலஸ்தீன போர், ஹெஸ்புல்லா -இஸ்ரேல் போர் பதற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கு மத்தியில் மசூத் பெசஸ்கியானின் இந்த பதவியேற்பு விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விழாவில் இந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

     

    இந்த பதவியேற்பு விழாவில் காசாவில் இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பேசுகையில், அவையில் இருந்த 'பலர், இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்' [Death to Israel, Death to America] என்று முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கங்களுக்கு மத்தியில் மசூத், அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

     பதவியேற்பின்போது 'புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பதுகள்வளனாக இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்' என்று மசூத் தெரிவித்தார்.

     

    இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் சமீபத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விவாதமாக லெபனான் தலைநகர் பெய்ருட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பிருந்தே, லெபனானை இஸ்ரேல் தகுமானால் தீவிரமான போரில் ஈரான் இறங்கும் என்று மசூத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • கமலா ஹாரிஸ் குறித்த பிரபலமான மீம் [MEME] ஒன்று தற்போது மீண்டும் டிரண்டாகத் தொடங்கியுள்ளது.
    • கமலா ஹாரிஸ் கொகநட் மர மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பளராகி உள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸ் குறித்த பிரபலமான மீம் [MEME] ஒன்று தற்போது மீண்டும் டிரண்டாகத் தொடங்கியுள்ளது.

     

    கடந்த 2023 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் வைத்து நடந்த ஹிஸ்பானிக் அமரிக்கர்களின் முன்னேற்றம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், 'எனது தாய் சில நேரங்களில் சொல்வதுண்டு, இந்த இளைய தலைமுறை பிள்ளைகளிடம் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் எல்லோரும் எதோ தென்னை மரத்தில் இருந்து நேராக பூமியில் விழுந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவர் கேட்பதுண்டு' என்று சொல்லிவிட்டு சிரித்தார் கமலா ஹாரிஸ்.

    அவர் பேசியது அப்போது டிரண்ட் ஆன நிலையில் கமலா ஹாரிஸ் கொகநட் மர மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின. தற்போது கமலா அதிபர்  வேட்பாளராகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இந்த மீமீக்களை பிரச்சார ஆயுதமாகியுள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல.
    • வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.

    முன்னாள் அமெரிக்க அதிபரும் தற்போதைய  அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டொனால்டு டிரம்ப் உயிர்தப்பியுள்ளார்.

    அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொள்ளப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.

     

    ஆபிரகாம் லிங்கன் 

    1865 இல் அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

     

    வில்லியம் மெக்கின்லே

    1901 ஆம் ஆண்டில் அப்போதய அமெரிக்க அதிபர் மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

     

    தியோடர் ரூஸ்வெல்ட்

    1912 ஆம் ஆண்டு முன்னாள் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அவரது நெஞ்சை நோக்கி சுடப்பட்டு, அவரது பையில் 50 பக்கங்கள் கொண்ட பேசுவதற்காக எடுத்துவைத்த குறிப்புக்கள் அடங்கிய காகிதக் கட்டின்மீதும், இரும்பினால் ஆன கண் கண்ணாடி மீதும் பட்டு குண்டு வலுவிழந்ததால் அவர் உயிர்பிழைந்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் அவர் தனது உரையை தொடர்ந்தார்.

     

    பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்

    1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழக்க நேரிட்டது.

     

    ஜான் எப்.கென்னடி

    1963 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கென்னடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். வியட்நாம் போர் பதற்றம் மற்றும் சமூக உரிமைப் போராட்டங்கள் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவை சூழ்ந்திருந்த சமயத்தில் கென்னடியின் படுகொலை அமெரிக்காவின் மிகவும் வன்முறையான காலகட்டமாக பார்க்கப்படுகிறது

     

    ராபர்ட் எப்.கென்னடி

    ஜான் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டபின் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்து அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க சமூக உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட அடுத்த இரண்டே மாதத்தில் ராபர்ட் கென்னடியின் கொலை அரங்கேறியது அப்போதய அமெரிக்க அரசியலில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியது.

     

    ஜார்ஜ் வாலஸ்

    1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வால்ஸ்  தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார்.

     

    ஜார்ஜ் போர்ட்

    1975 இல் அதிபராக இருந்த போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை பெண்கள் இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் போர்ட் காயங்களின்றி உயிர்தப்பினார்.

     

    ரொனால்டு ரீகன்

    1981 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார்.

    • 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும் தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
    • நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

    அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதய அதிபர் ஜோ பைடனின் செயல்கலும் பேச்சும் சமீப காலமாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. மீண்டும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்கும் 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும்  தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    சமீபத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்புடன் நேருக்கு நேர் நடந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடனின் உரையில் அதிக இடத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. சில நொடிகளுக்கு எந்த அசைவும் இன்றி ஜோ பைடன் உறைந்து நின்ற சம்பவமும் நடந்தது. அதைத்தொடர்ந்து ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்க வேண்டுமா என அவரது கட்சிக்குள்ளேயே கூச்சல் குழப்பங்கள் எழுந்துள்ளன. தான் ஒருபோதும் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று பைடன் உறுதியாக நிற்கிறார்.

    ஆனால் பைடனின் பேச்சில் உள்ள தடுமாற்றம் குறைந்தபாடில்லை. நேற்று அமெரிக்காவில் வைத்து  நடந்த நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இன்று நடந்த பிக் பாய் கருத்தரங்கத்தில் துணை அதிபர் காமலா ஹாரிஸ் என்று சொல்வதற்கு பதிலாக 'துணை அதிபர் டிரம்ப்' என்று பைடன்  குறிப்பிட்டுள்ள வீடியோவும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

    இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி  பைடனின் தடுமாற்றம் குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். டிரம்ப் விமர்சனத்தைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், 'அவர் [டிரம்ப்] சொல்வதைக் கேளுங்கள்' என்று தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு பைடன் தன்னையே கறுப்பின துணை அதிபருடன் அதிபராக பணியாற்றும் அமரிக்காவின் முதல் கறுப்பினப்  பெண் தான்தான் என்று பைடன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தன்மீதான சந்தேகங்களை நீக்க மருத்துவர்கள் பரிமதுரையின்பேரில் நரம்பியல் பரிசோதனைக்கும் தான் தயார் என்று பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர்.
    • உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பில் மோடியை புதில் காட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார். நேற்றைய தினம் அதிபர் புதினுடன் தேநீர் விருந்தில் அவரது இல்லத்தில் வைத்து மோடி உரையாடினார். பின்னர் மோடிக்கு முக்கிய பகுதிகளை புதின் சுற்றிக் காட்டினார்.

     

    சிறிது நேரம் கோல்ப் வண்டியில் இருவரும் பயணித்தனர். அதனபின் புதின் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் அவருடன் மோடி உணவருந்தினார். அதைத்தொடர்ந்து இன்று நடக்கும் மாநாட்டில் மோடி கலந்துகொள்கிறார். இந்நிலையில் மோடி ரஷியா சென்றுள்ளது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர். உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீதும் ரஷியா நேற்றைய தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதளுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்று தெரிவித்தார்.

     

     

    இதற்கிடையில், மோடியின் ரஷிய பயணம் குறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், 'இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளது அமைதிக்கான முயற்சிகள் மீது விழுந்த பெருத்த அடியாக உள்ளது' என்று தெரிவிட்டுள்ளார். கடந்த மாதம் இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டில் மோடியும்  ஜெலன்ஸ்கியும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    • இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்

    ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள சீர்திருத்தவாத கட்சி வேட்பாளர் மசூத் பெசெஸ்கியன் இஸ்ரேல் - காசா போரை முன்னிறுத்தி முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் அருகாமையில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹெஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவுக்கு ஈரானின் அரசு ஊடகமான IRNA மூலம் உறுதி தெரிவித்துள்ளார்.

     

    மேலும் ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ள அவர், பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களை நிறுத்த ஹெஸ்புல்லா போன்ற எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்பதில் தான் உறுதியாக உள்ளதாக மசூத் தெரிவித்துள்ளார்.

     

    1984 இல் லேபனான் உள்நாட்டுப் போரின் போது அந்நாட்டின்மீது இஸ்ரேல் படையெடுத்து கைப்பற்ற முயன்றது. இஸ்ரேல் படையெடுப்பை எதிர்க்க உருவான இயக்கமே ஹிஸ்புல்லா ஆகும். ஹிஸ்புல்லா என்ற சொல்லுக்கு கடவுளின் ஆட்சி என்று பொருள். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஹாசன் நஸ்ரல்லா தலைமையில் லெபனானை மையமாக கொண்டு ஹிஸ்புல்லா இயங்கி வருகிறது.

    ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கடந்த 8 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா நடந்திய ஏவுகணைத் தாக்குதல் லெபனானில் இஸ்ரேல் போர் தொடுத்துவரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.
    • கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.

    ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசெஸ்கியன் பெற்றுள்ள வெற்றி வரும் காலங்களில் அந்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1954 செப்டம்பர் 29 ஆம் தேதி மேற்கு அஜர்பைஜானை ஒட்டியுள்ள மஹாபத் நகரில் அசர்பைஜானிய தந்தைக்கும் குர்து இனக்குழுவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் மசூத் பெசெஸ்கியன்.

    வரலாறு நெடுகிலும் இன்னலைகளை சந்தித்த ஈரானில் சிறுபான்மையாக உள்ள குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.

     

    1980 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் ஈர்க்க - ஈரான் போரில் ராணுவ சேவை ஆற்றிய மசூத், தொழில்முறையாக இதய அறுவை சிகிச்சை நிமுபாரகாவும்தாபிர்ஸ் பல்கலைக்கழகக்த்தின் மருத்துவ படிப்புகள் பிரிவின் தலைவராகாவும் பணியாற்றியவர் ஆவார்.

    கடந்த 1994 ஆம்ஆண்டு நடந்த கார் விபத்தில் தனது மனைவி மற்றும் மகளை இழந்த மசூத், அதன்பின் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். அதிபர் முகமது கதாமியின் ஆட்சியில் 2001 முதல் 2005 வரை சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார் மசூத். அதன்பின் பாராளுமன்ற எம்.பியாக தேர்வான மசூத், கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.

    அதிபர் முகமது ரைசி ஹெலிகாப்ட்டர் விபத்தில் இறந்ததால் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கிய மசூத் முக்கிய போட்டியாளரான தீவிர வலதுசாரி கொள்கைகள் உடைய சயீத் ஜலீலிக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

    முந்தைய அரசுகளை போல் அல்லாமல் மேற்கு நாடுகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்த விழைபவராக மசூத் உள்ளார். மேலும் ஈரானில் இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து கடந்த 1079 முதல் பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியதற்கு எதிராக மசூத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

     

    கடந்த 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்குள்ளும, மருத்துவமனைகளுக்குள்ளும் ஹிஜாப் அணியாத பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாததற்காக மாஷா ஆமினி என்ற இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மசூத் ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்துக்காக பெண்ணை கைது செய்து உயிறற்ற உடலாக அவரை குடும்பத்திடம் திருப்பியளிப்பது என்பத , இஸ்லாமியக் குடியரசில் ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தற்போது ஈரான் அதிபராக உள்ள மசூத் பெசெஸ்கியன் கட்டாய ஹிஜாப் கொள்கைகளை தளர்த்துளார் என்றும், முற்போக்கான சீர்த்திருத்தங்களை கொண்டு வருவார் என்றும் எதிர்பாக்கப்படுகிறது. 

    • மாலத்தீவில்இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்
    • அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

    இந்தியப் பெருங்கடலில் அமைத்துள்ள தீவு நாடான மாலத்தீவில், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபாராக பதவியேற்பட்டார். மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முய்சு சீன ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

     

    முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியாவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் முய்சு சமீபத்தில் இந்திய பிராமராக மோடி பதிவேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
    • ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .

     மெக்சிகோவில் புதிய அதிபர் பதியேற்ற ஒரு நாளுக்குள் பெண் மேயர் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக மெக்சிகோவில் தேர்வாகியுள்ளார்.

     

    இந்நிலையில் இடதுசாரி அரசியல்வாதியும் முன்னாள் மேயருமான கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ அதிபாராக தேர்வான 24 மணி நேரத்துக்குள் கோட்டிஜா நகர பெண் மேயரான யோலாண்டோ சான்செஸ்  ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .

     

    கடந்த 2021 மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்செஸ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். 3 நாட்கள் கழித்து அவர் மீட்கப்பட்டதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 4) அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாக அரசு தரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டார்.
    • முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது.

    வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டார். முந்தைய ஜனாதிபதி வோ வான் துவோங் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி விலகினார்.

    முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது.

    ஊழல் தடுப்பு குழுவின் துணைத் தலைவராக தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள டோ லாம் இருந்த நிலையில் தனது அரசியல் போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக இந்த ஊழல் விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.

     

    இன்று தனது பதவியேற்பின்போது உரையாற்றிய டோ லாம் கூறுகையில் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்குத் தான் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 66 வயதான டோ லாம், 2016 ஆம் ஆண்டு முதல் பொது பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார், மேலும் வியட்நாம் மனித உரிமை இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார்.

    கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில், வியட்நாம் நான்கு நபர்களைக் கொண்ட தலைமைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, அதில் அதிபர், பிரதம மந்திரி மற்றும் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் ஆகியோர் அடங்குவர். அதிபரை அரசுப் பிரதிநிதிகளின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுகின்றனர்.

    முன்னதாக முந்தைய அதிபர் வோ வான் துவோங் அதிபராகி ஒரு வருடமே பதவியிலிருந்த நிலையில் ஊழலுக்காகத் தனது அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் வலுவாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து தேசிய சட்டமன்றத் தலைவரும் கடந்த மாதம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

     

    ×