என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து டெஸ்ட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக்கொண்டார் என்று கருத இடமிருக்கிறது
    • ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிமையாக இருக்காது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. மோசமான பார்ம் காரணமாக இதன் கடைசி போட்டியில் ரோகித் தானாக விலகிய நிலையில், பும்ரா கேப்டன் ஆனார்.

    முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய அதற்கடுத்த 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் ஆனது. ரோகித் சர்மா சுமாராக விளையாடியதுதான் அதற்கு முக்கிய காரணமாக என்று கூறப்படுகிறது. எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக்கொண்டார் என்று கருத இடமிருக்கிறது

    மேலும் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்ற யூகங்களும் எழுந்தன. ஆனால், கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்றும் இப்போதைக்கு ஓய்வை பெறப்போவதில்லை என்றும் ரோகித் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சைமன் கேட்டிச் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

    அதாவது, ரோகித் சர்மா இன்னும் ரன்கள் எடுக்கும் பசியுடன்தான் விளையாடப் போகிறாரா? என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிமையாக இருக்காது.

     

    இங்கிலாந்து அணியிலும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துள்ளனர். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ்ஆகியோர் சிறப்பாக பந்து வீசுபவர்கள்.

    எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் அது நிச்சயம் அவரது கெரியரிலேயே கடினமான தொடராக அது அமையலாம்.

    என்னைக் கேட்டால், ரோகித் சர்மா பேசுவதை வைத்து பார்க்கும்போது அவர் ஓய்வுபெற்ற பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் என்று அட்வைஸ் செய்துள்ளார்

    ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்த கே. எல் ராகுல், தற்போது மீண்டும் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvIND #OvalTest #KLRahul

    இந்தியா இங்கிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில், கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே 7 கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் கே. எல் ராகுல், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 

    இந்தியாவிற்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடரில் 10 கேட்ச்களை பிடித்திருந்த அஜித் வடேகர், ராகுல் டிராவிட், ரஹானே ஆகியோரின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார் கே.எல் ராகுல். தற்போது, ஓவலில் நடந்து வரும் 5-வது போட்டியிலும் கே.எல் ராகுல் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    பொதுவாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களில் 13 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட் தான் முதலிடத்தில் உள்ளார். 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 13 கேட்ச்களை பிடித்துள்ளார். 

    ஓவல் டெஸ்ட் போட்டியில் நேற்று ஜடேஜா பந்தில் பிராட் ராகுலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன் மூலம், இந்த தொடரில் ராகுல் 13 கேட்ச் பிடித்து டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் மீதம் உள்ளதால், அதில் கே.எல் ராகுல் இன்னும் ஒரு கேட்ச் பிடித்தால் புதிய சாதனையை படைப்பார். 
    ×