என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜிவ் காந்தி"

    • இன்னும் எத்தனையோ இளைஞர்கள் சீமான் சொல்லும் கதைகளை நம்புகிறார்கள்.
    • சீமானின் ஆமைக்கறி கதைகள் எல்லாம் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தியுள்ளது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தி, "சம்ஸ்கிருத திணிப்பை விட இந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று சீமான் இன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டர் ஆக முடியும் பட்டம் பெறமுடியும் என்ற நிலையை மாற்றி, சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்று ஒரு கோட்பாடு சொல்லியபோது தமிழ் என்பது தனித்த மொழி என்று அரசியல் களத்தில் பண்பாட்டுக் களத்தில் வென்று காட்டியவர் தந்தை பெரியார்.

    சமஸ்கிருத திணிப்பை விட இந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று சீமான் பேசுவாரே என்றால் அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட ஆபத்தானவர். ஆர்.எஸ்.எஸ்.-இன் கைக்கூலியாக மட்டுமில்லை, இந்திய அரசியலில் தமிழ்நாடு தமிழர் அரசியல், ஈழ விடுதலையில் தேசிய இன உரிமை என அத்தனையையும் காட்டிக்கொடுக்கிற ஆளாக இருக்கிறார்.

    எங்களை போன்ற இளைஞர்களின் அறிவை சுரண்டி, பொருளாதாரத்தை சுரண்டி, உழைப்பை சுரண்டி, இன்னும் எத்தனையோ இளைஞர்கள் சீமான் சொல்லும் கதைகளை நம்புகிறார்கள். சீமானின் ஆமைக்கறி, மான் வேட்டை உள்ளிட்ட கதைகள் எல்லாம் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தியுள்ளது.

    ஒரு போராளியை மாவீரரை ஸ்டார் ஓட்டல் செப் போல காட்டி, இளைஞர்களின் போராட்ட எழுச்சியை, தமிழ், தமிழர் மீதான உரிமையை மட்டுப்படுத்தியுள்ளார். இது ஆபத்தான மனநோய் மட்டுமில்லை, அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் சீமான்" என்று தெரிவித்தார். 

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது. #TNGovt #Release7Innocents
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.

    இதனை அடுத்து, 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×