என் மலர்
நீங்கள் தேடியது "வேலூரில் வெயில் கொளுத்தியது"
- வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில் மழை.
- வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
வேலூரில் 105.1 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, திருத்தணியில் 102 டிகிரி, சென்னையில் 101 டிகிரி, கரூர், மதுரை, தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்துள்ளது.
வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
வேலூர் மாநகரில் சத்துவாச்சாரி, வள்ளலார், காட்பாடி, திருவலம், கொணவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
கோடைகாலத்தில் வேலூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தும். இதனால் பொதுமக்கள் கோடைகாலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். இந்த வருடம் கோடைகாலம் முடிந்தும் வேலூரில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும், அதற்கு இணையாக வெயிலும் கொளுத்துகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 100 டிகிரியும், நேற்று 101.7 டிகிரியும் வெயில் பதிவானது.
இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இரவில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.