என் மலர்
நீங்கள் தேடியது "இஸ்லாமாபாத்"
- அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.
- வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் விழிப்புடன் செயல்படவும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நகரம் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலம் முழுவதும் அங்கு அத்தியாவசியமற்ற மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தின் அமைதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகர துணை கமிஷனர் இர்பான் நவாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.
- சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றச்சாட்டு.
- பெண் தொண்டர்களை கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் சில வழக்குகளில் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே அவரது கட்சி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றம் சாட்டியது. இதனால் இம்ரான்கான் கட்சியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இம்ரான்கான் கட்சியின் தலைமையகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். தலைநகர் இஸ்லாமா பாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்குள் போலீஸ் படை நுழைந்தது.
அங்கு பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். பின்னர் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹசன் உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் பெண் தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கை பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இம்ரான்கான் கட்சியை தடை செய்ய அரசு முயற்சி செய்து வரும் சூழலில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மொத்த வழக்குள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்தது.
- இங்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள் உள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட மொத்த வழக்குள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக இம்ரான் கான் மீது புதிதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இஸ்லாமாபாத் காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி நவம்பர் 24 ஆம் தேதி போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் இஸ்லாமாபாத்தின் டி-சௌக் பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டது. இங்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள் உள்ளன.
போராட்டத்தின் அங்கமாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் நவம்பர் 26 அன்று இரவு டி-சௌக் அருகே வந்தபோது வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டனர்.
இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவரான நொரீன் நியாசி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இம்ரான் கான் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்த தேசிய பாகிஸ்தான் ஊழல் எதிர்ப்பு நிறுவனம் (NAB) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு விவரங்களை சமர்பித்தது.
