என் மலர்
நீங்கள் தேடியது "slug 184999"
மத்திய அரசு ஊழியர்களின் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
சேலம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். விலைவாசி உயர்வின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப் படியை 2 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதிக்குள் வெளியாக உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 7 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இது 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஜூலை 1-ந் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். விலைவாசி உயர்வின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப் படியை 2 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதிக்குள் வெளியாக உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 7 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இது 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஜூலை 1-ந் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள்.