என் மலர்
நீங்கள் தேடியது "பழவந்தாங்கல்"
- ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை.
- பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதே பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன. பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது என்றால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.
பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில் தான் வரும் என்பதாவது இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா?
பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுக்க தலை தூக்கி உள்ள ஆயுதக் கலாச்சாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தெற்கு ரயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில், பழவந்தாங்கல் ரெயில்நிலையத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மேலும், ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான தடுப்புச் சுவர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில், பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த பரங்கிமலை விபத்து உண்டான அந்த தடுப்புச் சுவர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த பக்கவாட்டு தடுப்புச் சுவரும் நீக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் நேரு காலனி, 21-வது தெருவில் வசித்து வருபவர் பாலவேலாயுதம். ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி.
இவர் வீட்டின் ஒரு பகுதியை இடித்து புதிதாக கட்டி வந்தார். இதையடுத்து பாலவேலாயுதம் அதே பகுதி பி.வி. நகரில் உள்ள மகள் வீட்டில் இரவில் குடும்பத்துடன் தங்குவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை அவர் கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது முதல் மாடியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 100 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் தங்காததை அறிந்து மர்ம கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக கட்டுமான தொழிலாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews