என் மலர்
நீங்கள் தேடியது "லஷ்கர்-இ-தொய்பா"
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
- இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி ராணுவ தளபதிகளுடனும், பா.ஜ.க. மூத்த தலைவர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்கு ஊடுருவி சென்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த 9 நாட்களாக பதட்டம் நீடித்தப்படி உள்ளது.
இதற்கிடையே இந்திய போர் விமானங்கள் அரபிக் கடலில் போர் பயிற்சி செய்தன. அதுபோல பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இதை அறிந்த பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்களை குவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா எல்லையில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து உள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் பல நவீன முகாம்களும் வைத்துள்ளனர்.
அந்த முகாம்கள் மூலம் எல்லையில் ஆயுத பயிற்சிகள் பெற்று தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அந்த முகாம்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் கண்காணிப்பு வளையத் துக்குள் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக அந்த பயிற்சி முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் எந்த நேரத்திலும் துல்லிய தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற பீதி பயங்கரவாதிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
பெரும்பாலான பயங்கரவாத முகாம்கள் பயத்தில் மூடப்பட்டுள்ளன. பதுங்கு குழிகளையும் கைவிட்டு விட்டு பயங்கரவாதிகள் ஓட் டம் பிடித்து வருகிறார்கள். இந்த தகவல்களையும் இந்திய உளவுத்துறை சேகரித்து பயங்கரவாதிகளின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே ஜம்மு டிவிசன் பகுதியில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் அமைத்து இருந் னர். அந்த முகாம்களில் 120-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்தனர். அந்த முகாம்களை மூடி விட்டு பயங்கரவாதிகள் கூட்டம் கூட்டமாக சென்றதை இந்திய ராணுவம் படம் பிடித்துள்ளது.
- டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள்.
- காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது.
டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவரும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட வருமான ஹபீஸ் சயீத் மற்றும் துணை தலைவர் சைபுல்லா ஆகியோரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பஹல்காம் தாக்குதலில் ஹபீஸ் சயீத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள். எப்போதுமே ஒரு தாக்குதலை நடத்திவிட்டு காட்டுக்குள் சென்று பதுங்கு குழியில் இருப்பார்கள். பாகிஸ்தானில் இருந்து புதிய தாக்குதலுக்கு உத்தரவுகள் வரும் வரை அடர்ந்த காட்டு மறைவிடங்களில் ஒளிந்து கொள்வார்கள். மேலும் டி.ஆர்.எப். அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை ஆகியவை உதவிகள் செய்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பில் பெரும்பாலான வெளி நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோனமார்க், பூனமார்க் மற்றும் காண்டர்பால் உள்பட காஷ்மீர் முழுவதும் பல தாக்குதல்களுக்குப் பின்னணியில் டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
- கோழைத் தனமான தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது.
- பல்வேறு நாட்டு தலைவர்கள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு.
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கோழைத் தனமான தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரதமர் மோடியை போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டு அறிந்தனர்.
இதன் காரணமாக காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே பஹல்காம் சுற்றுலா தலத்தில் தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் படையான "தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்" என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள தற்கொலைப் படை தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.
அந்த தீவிரவாதிகளில் 6 பேர் 8 பேர் வரை பஹல்காம் சுற்றுலா தலத்துக்கு வந்ததாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 2 பேர் அடையாளம் தெரிய வந்துள்ளது. ஒருவன் பெயர் ஆசீப். மற்றொருவன் பெயர் கவ்ரி.
இவர்கள் இருவரும் பஹல்காம் பகுதியில் பதிவான கண்காணிப்பு காமிரா காட்சிகளில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பிடிபட்டால் பஹல்காம் தாக்குதல் பின்னணி முழு விவரமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் சைபுல்லா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவன் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மூத்த கமாண்டர்களில் ஒருவன் ஆவான்.
இந்தியாவால் தேடப்படும் கொடூரமான தீவிரவாதியான ஹபீஸ்சையத்தின் வலதுகரமாக இவன் செயல்பட்டு வருகிறான். இவன்தான் பஹல்காம் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டி கொடுத்தவன் என்று தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பு படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா நேரடியாக தொடர்பில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் காஷ்மீர் ரத்த களறி ஆனதின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.
இந்த கோழை தீவிரவாதிகளை வேட்டையாட பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- ஈட்டியெறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
- ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.
இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐநாவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஹாரிஸ் தாருடன் அர்ஷத் நதீம் இருக்கும் வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
மார்கசி முஸ்லீம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஷ் கயூம் மற்றும் அவர்களின் இளைஞர் பிரிவு தலைவர் முகமது ஹாரிஸ் தார் ஆகியோர் அர்ஷத் நதீமை அவரது இல்லத்தில் சந்தித்தனர். முகமது ஹாரிஸ் லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்பவர் என்று சொல்லப்படுகிறது.
- லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-இ-முகமது அமைப்புக்கு இந்தியா தடை.
- இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து புதிய பயங்கரவாத முகாமை அமைத்துள்ளதாக ரகசிய தகவல்.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருநாட்டு எல்லை வழியாக பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பங்கரவாதிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியாவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. நேற்றிரவு பாரமுல்லாவில் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பின்லேடன் வகித்து வந்த அபோதாபாத்தில் பயங்கரவாத மையம் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்திய அரசு லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புக்கு தடைவிதித்துள்ளது.
இந்த அமைப்புகள் இணைந்து அபோதாபாத்தில், பாகிஸ்தான் ராணுவம் கேம்பஸ் பகுதிக்குள் பயிற்சி முகாமை உருவாக்கியுள்ளதாக புலனாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த முகாம் பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ முகாமின் கதவு உள்ளதால், வெளியில் இருந்து பயங்கரவாத பயிற்சி மையத்தை ராணுவத்தின் அனுமதி இல்லாமல் எளிதில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் புலானாய்வுத்துறையான ஐ.எஸ்.ஐ.-யின் அதிகாரி ஒருவர் அந்த முகாமின் மேற்பார்வையாளராக உள்ளார் என நம்பப்படுகிறது, இந்த முகாமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கையாள்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிகிறது.
அபோதாபாத்தில் பின்லேடன் பாதுகாப்பான ஒரு வீட்டை வளாகத்திற்குள் அமைத்து செயல்பட்டு வந்தார். அமெரிக்க ராணுவம் அவரை தேடிவந்த நிலையில், 2011-ம் ஆண்டு சுட்டுக்கொலை செய்தது. பாகிஸ்தான் அந்த இடத்தை 2012-ல் இடித்தது.
பயிற்சி முகாம் பின்லேடன் பாதுகாப்பாக வாழ்ந்து வந்த வீட்டின் இடிபாட்டிற்கு மேல் கட்டப்பட்டதா? எனத் தெளிவாக தெரியவில்லை. இந்த முகாம் ஹபீஸ் சயீத் (லஷ்கர்), சயத் சலாஹுதீன் (ஹிஸ்புல்), மசூத் அசார் (ஜெய்ஷ்) ஆகியோரால் மிகப்பெரிய அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

சயத் சலாஹுதீன்
இந்த மூன்று பேரும் இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு அமைப்பான என்.ஐ.ஏ.-வின் மிகவும் தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர்.
இந்த முகாமின் முக்கிய நோக்கம் மூன்று அமைக்களுக்கும் ஆட்களை சேர்ப்பதுதான். கடந்த சில தினங்களாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முகாம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத குழுவான தெரீக் லபைக் யா முஸ்லிம் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சோதகை்குப்பிறகு கலைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்துள்ளார்.
அந்த வாலிபரின் பெயர் இஷ்பக் வாணி. 26 வயதான அவர் தெற்கு காஷ்மீர் பகுதி புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த வாலிபருக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் ‘அபுதுராப்’ என்ற குறியீடு பெயர் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இஷ்பக் வாணி ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இஷ்பக் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கடந்த 22-ந்தேதி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் பி.எச்.டி. மாணவர் பஷீர்வாணி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தார். கடந்த 6 மாதத்தில் மட்டும் 100 இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #LashkareTaiba