search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகாகோ"

    • பாப் நியூஹார்ட் டெட்பான் [Deadpan] எனப்படும் காமடி வகைக்கு பேர் போனவர் ஆவர்
    • 1970 மற்றும் 80 களில் தொலைக்காட்சி சிட்காம்களில் கொடிகட்டிப் பறந்தார் பாப் நியூஹார்ட்.

    அமெரிக்காவைச் சேர்ந்த 94 வயதாகவும் பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் பாப் நியூஹார்ட் உயிரிழந்துள்ளார். சிகாகோவைச் சேர்ந்த பாப் நியூஹார்ட் டெட்பான் [Deadpan] எனப்படும் காமடி வகைக்கு பேர் போனவர் ஆவர். அவரது டெட்பான் வகை நகைச்சுவைகள் அவரை உச்சபட்ச தொலைக்காட்சி நட்சத்திரமாக மாற்றியது.

     

    1929 செப்டம்பர் 5 இல் இல்லினோய்ஸ் புறநகரில் பிறந்த பாப் நியூஹார்ட் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்று அதன்பின் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். கொரிய போரில் பணியாற்றிய அவர் நாடு திரும்பியபின் சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை இடையிலேயே கைவிட்டுவிட்டு அக்கவுன்டன்டாக தனது பணியை தொடங்கிறார்.

    ஆனால் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட பாப் நியூஹார்ட் இடையிடையே காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். அதன்பின் கவனம் பெற்ற அவர், வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காமெடி  ஆல்பங்களை வழங்கத் தொடங்கினார். நியூஹார்ட்டின் "The Button-Down Mind of Bob Newhart" காமெடி ஆல்பம் அவருக்கு பபுகழைத் தேடித் தந்தது.

    1970 மற்றும் 80 களில் தொலைக்காட்சி சிட்காம்களில் கொடிகட்டிப் பறந்தார் பாப் நியூஹார்ட். 90 களில் நடந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு தோற்றங்களில் தோன்றினார். பிரபல சீரிசான பிக் பாங் தியரியிலும்  சிறப்பு தோற்றத்தில் பாப் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது மறைவு அமெரிக்க ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் நடந்த தாக்குதலில் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #MumbaiAttack #DavidHeadley
    மும்பை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 160க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்க நீதிமன்றம் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஹெட்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மன்னிப்பு வழங்கினால், அப்ரூவராக மாறத்தயார் எனவும் கூறினார். 

    இந்தநிலையில், சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை கடந்த 8-ம் தேதி சக கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெட்லி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×