என் மலர்
நீங்கள் தேடியது "தெலுங்கு தேசம் எம்பி"
- இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
- முஸ்லிம் மற்றும் சிறுபான்மை நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவைப் பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசினார். இந்த திருத்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அக்கட்சியை சேர்ந்த எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி இன்று பாராளுமன்ற விவாதத்தின்போது பேசியதாவது, "இந்த மசோதாவை வடிவமைப்பதில் தெலுங்கு தேசம் கட்சியின் பங்கு, முஸ்லிம்களமற்றும் சிறுபான்மையினரின் நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
எங்கள் கட்சி உருவானதிலிருந்து சிறுபான்மையினரின் நலனை உறுதி செய்வது எப்போதும் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது" என்று மசோதாவை ஆதரித்துப் பேசினார்.
நகரி:
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி நானி என்ற சீனிவாஸ் கொண்டுவந்தார்.
இதனால் அவர் பிரதமர் மோடி பதில் உரை நிகழ்த்திய பின்பு தீர்மானத்தை கொண்டு வந்தவர் என்ற முறையில் தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி சீனிவாஸ் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி அவர்களே தெலுங்கு தாயை தாயாக கூப்பிட்டீர்கள். இப்போது அந்த தாயை கொல்வதற்கு தயாராகி விட்டீர்கள். 2014 தேர்தலுக்கு முன்பு எத்தனையோ முறை ஆந்திராவுக்கு பிரசாரத்துக்கு வந்து வாக்குறுதிகளை அளித்தீர்கள். ஆந்திரா மக்களை மோசம் செய்து விட்டீர்கள். கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டீர்கள்.

இப்போது பிரதமர் மோடி அற்புதமாக பிரசங்கம் செய்தார். அவரது 1½ மணிநேர பிரசங்கத்தை கேட்டேன். நீங்கள் சிறந்த நடிகர். ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சி விட்டீர்கள். அதிரடி சினிமா படம் பார்ப்பதுபோல் இருந்தது.
ஆந்திரா பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்களும் தான் காரணம். ஆந்திரா பிரிவினை தீர்மானம் மேல்-சபையில் நிறைவேற பா.ஜனதாவும் ஒத்துழைப்பு அளித்தது.
உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ராமாயணத்தில் இருந்து சரித்திரத்தை எடுத்துக் கூறினார். ஆந்திரா பிரிவினை சாஸ்திரிய முறைப்படி நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Parliament #PMModi

இதில், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக நாளை விவாதம் நடத்தப்படுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா உத்தரவிட்டார்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. திவாகர் ரெட்டி, நாளை நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விவாதத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கூட்டத் தொடரிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கொறடா உத்தரவிடுவது வழக்கமான நடைமுறைதான். எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி கவிழப்போவதில்லை. என்னாலும் விவாதத்தின்போது ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேச முடியாது. எனவே நான் சபையில் இருக்கிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை’ என்றார்.
இவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அவரை தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தொடர்பு கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MonsoonSession #Parliament #TDPMP