search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஸ்டன்"

    • தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார் ஹெலன்
    • ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

     வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்த பலரின் உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.

     

    அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன் தற்போதுவரை ஓய்வு ஒழிச்சலின்றி சுறுசுறுப்பான தேனியைப் போல் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

    இவரின் சக ஊழியர் கின்னஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணபித்ததை அடுத்து உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளார் ஹெலன். தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஹெலன் பேசுகையில், இந்த ஆரவாரம் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. எனவே கொஞ்சம் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். இப்போதைக்கு பணி ஓய்வு பெறும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    பெயர் குழப்பம் காரணமாக 3400 ரூபாய்க்கு பதில் சுமார் 7.5 கோடி ரூபாயை பெண் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு பின்னர், திரும்ப எடுத்து கொண்டதால் சில நிமிட கோடீஸ்வரி என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    அமெரிக்காவின் பாஸ்டன் மாகாணத்தை சேர்ந்த எல்லென் பிளம்மிங் என்ற பெண் தனியார் நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளார். வெறும் 3400 ரூபாய் இருந்த தனது கணக்கை சமீபத்தில் எல்லன் பரிசோதிக்கும் போது ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

    3400 ரூபாய்க்கு பதிலாக சுமார் 7.5 கோடி ரூபாய் அவரது கணக்கில் இருந்துள்ளது. உடனே, தனது வேலையை விட முடிவு செய்த எல்லென், தனது குழந்தைகளின் கல்வி கடனை அடைத்து விடலாம் என கனவுலகில் வாழத் தொடங்கியுள்ளார். எனினும், சந்தேகம் ஏற்பட்டு நிதி நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்ட போது கனவு கலைந்து சோகம் வந்து குடியேறியது.

    புளோரிடாவில் எல்லென் பெயரில் வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு செல்ல வேண்டிய தொகையை தவறுதலாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்த நிறுவனம், 7.5 கோடியையும் திரும்ப பெற்றுக்கொண்டது. சோகத்தில் இருந்தாலும், இறந்த பின்னர் சில நிமிட கோடீஸ்வரி என என்னை யாரேனும் குறிப்பிடுவார்கள் என எல்லென் கூறியுள்ளார். 

    ×