search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலிஜியம்"

    மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. #Collegium #TahilRamani #IndiraBanerjee #ChennaiHighCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. தனது பரிந்துரையை கொலிஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. 

    இதேபோல், குஜராத் ஐகோர்ட் நீதிபதியாக உள்ள எம் ஆர் ஷா பாட்னா ஐகோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.

    கவுகாத்தி ஐகோர்ட் நீதிபதியாக உள்ள ரிஷிகேஷ் ராய், கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமனம் செய்யவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. 

    மேலும், உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் பெயரையும் இரண்டாவது முறையாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே, கே.எம்.ஜோசப் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்கலாம் என கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    தஹில் ரமணி மும்பை ஐகோர்ட்டில் இருந்து பதவி உயர்வுடன் சென்னைக்கு மாற்றப்படலாம். தற்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதை தொடர்ந்து இவரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. #Collegium #Tahilramani #ChennaiHighCourt #IndiraBanerjee
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. #Collegium #IndiraBanerjee #KMJoseph
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. தனது பரிந்துரையை கொலிஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. 

    மேலும், உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் பெயரையும் இரண்டாவது முறையாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

    ஏற்கனவே, கே.எம்.ஜோசப் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. #Collegium #IndiraBanerjee #KMJoseph
    வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை நீதிபதியாக்கும் விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. #CollegiumJudges #SupremeCourt
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை அந்த கோர்ட்டின் நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது. ஆனால் அவர்கள் இருவர் மீதும் புகார்கள் இருப்பதாக கூறி அந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கனவே திருப்பி அனுப்பியது.

    எனினும் அந்த புகார்கள் அனைத்தும் அற்பமானவையே எனக்கூறி மீண்டும் அவர்களது பெயரை கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை 2½ ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு, தற்போது மீண்டும் நிராகரித்து உள்ளது. இதுதொடர்பாக மறு ஆய்வு செய்யுமாறு கூறி, கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது.

    கொலிஜியத்தில் உறுப்பினராக இருந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடந்த வாரம் ஓய்வு பெற்ற நிலையில், புதிய உறுப்பினரை நியமித்த பின்னரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

    இதற்கிடையே காஷ்மீர் ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கக்கோரி அனுப்பி வைக்கப்பட்ட வக்கீல் நஜிர் அகமது பெய்க்கின் பெயரையும் திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
    நீதிபதி ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. #Collegium #JusticeJosephElevation
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    இது சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரகாண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட  ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கொலிஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

    இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மீண்டும் கொலிஜியம் கூடியது. இக்கூட்டத்தில் நீதிபதி ஜோசப் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.

    இதையடுத்து கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் கொலிஜியம் கூட்டம் இன்று மதியம் 1 மணியளவில் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில்  நீதிபதி ஜோசப் விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கொலிஜியம் குழுவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீதிபதி செலமேஸ்வர் வரும் ஜூன் 22-ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதால் அதற்கு முன்பு கொலிஜியம் கூட்டம் நடைபெற வேண்டும் என்று அவர் விரும்புவதாகத் தெரிகிறது. #Collegium #JusticeJosephElevation
    ×