search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " சிவசேனா"

    • ராகுல்காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது.
    • சஞ்சய் கெய்க்வாட் பேசிய சர்ச்சை கருத்துக்கள் அடங்கிய வீடியோ வைரல் ஆனது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு பேசிய அவர், "இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை" என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து, ராகுல்காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சஞ்சய் கெய்க்வாட் பேசிய சர்ச்சை கருத்துக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, சஞ்சய் கெய்க்வாட் மீது புல்தானா நகர காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    இந்து தேசம் அமைப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கருத்தைத் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசிதரூர் பிரதிபலித்துள்ளார் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. #ShivSena #ShashiTharoor #RSS
    மும்பை:

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறி இருந்தார்.

    இது அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. சசிதரூரின் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

    இந்த நிலையில் இந்து தேசம் அமைப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கருத்தைத் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசிதரூர் பிரதிபலித்துள்ளார் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சி தனது பத்திரிகையான ‘சாம்னாவில்’ கூறி இருப்பதாவது:-

    அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுமானால் இந்தியா இந்து பாகிஸ்தான் நாடாக மாறி விடும் என்று சசிதரூர் கூறி இருக்கிறார். இதை சுருக்கமாக பார்த்தோம் எனில் மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா இந்து தேசம் என்று அறிவிக்கப்படும் என பொருள் கொள்ளலாம்.



    இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துதான். அதையே காங்கிரசில் இருந்து கொண்டு சசிதரூர் வெளிப்படுத்தி இருக்கிறார். பா.ஜனதாவின் மொழியில் தான் அவர் பேசி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதற்காக ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.

    ராமரே வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர நாராயணன்சிங் பேசியுள்ளார். இது இந்துக்களை புண்படுத்தும் கருத்தாகும். இதற்காக அக்கட்சி தலைவர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டாமா?

    இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க 2019 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மோடி அதை இப்போதே செய்யலாம். அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ShivSena #ShashiTharoor #RSS #BJP
    ×