search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உன்னாவ்"

    • 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
    • ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.

    ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

    அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.

    அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

    உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண்ணை கற்பழித்த விவகாரத்தில் பா.ஜ.க எம்எல்ஏ குல்திப் சிங் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
    லக்னோ :

    உத்திரப்பிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், தன்னை கற்பழித்த செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ குல்திப் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீடு முன்பு தனது தந்தையுடன் தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது, சிறுமியின் தந்தை எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை, சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தார்.

    பெரும் விஸ்வரூபம் எடுத்த இந்த விவகாரத்தை, அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. பின்னர், உத்திரப்பிரதேச அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.

    இந்நிலையில், பா.ஜ.க எம்எல்ஏ குல்திப் சிங் மீது சி.பி.ஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
    ×