என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பந்தையம்"
- மாடு, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா எட்டியத்தளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம்.
நேற்று நடைபெற்ற மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தையத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 ஜோடி மாடுகள் மற்றும் 36 குதிரைகள் கலந்து கொண்டன.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற எல்கை பந்தையத்தில் நடுமாடு பிரிவில் 16 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகளும், நடு குதிரை பிரிவில் 36 குதிரைகளும் பந்தையத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. பந்தையத்தைக்கான அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்