என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினோத் காம்ளி"

    • நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் ஏற்கனவே கூறியிருந்தார்.
    • வினோத் காம்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தொடக்க வீரராக இருந்தவர் வினோத் காம்ளி. சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது நண்பராக இருந்த வினோத் காம்ளி இந்திய அணிக்காக 104 சர்வதேச ஒருநாள் போட்டிகளும், 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

    திறமை வாய்ந்த வீரராக உருவெடுத்த வினோத் காம்ளி, போதை பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். இதன் காரணமாக வினோத் காம்ளிக்கு உடல் நலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தமக்கு உதவி தேவைப்படுவதாக வினோத் காம்ளி வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்த சூழலில் வினோத் காம்ப்ளியின் நிலையைப் பார்த்த கவாஸ்கர் உங்களுக்கு உதவி செய்ய தான் தயாராக இருப்பதாகவும், எனினும் அதற்கு முதலில் நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    தற்போது வினோத் காம்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார். இதனையடுத்து சுனில் கவாஸ்கர் நடத்தி வரும் சேம்ப்ஸ் என்ற அறக்கட்டளையிலிருந்து மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வினோத் காம்ளிக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறார். இதேபோன்று வினோத் காம்ளியின் மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் தரவும் கவாஸ்கர் அறிவித்திருக்கிறார்.

    அவர் வினோத் காம்ளிக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் கோடி கோடியாக சம்பளம் பெறும் சச்சின், கோலி போன்ற வீரர்கள் யாரும் வினோத் காம்ளிக்கு உதவ முன் வரவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிரபல பாடகரின் தந்தையை அறைந்த விவகாரத்தில் கிரிக்கெட் விரர் வினோத் காம்ளி மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை :
     
    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ளி, அவரது மனைவி ஆன்ரியா ஹேவித் மற்றும் குழந்தைகள் சகிதமாக மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு நேற்று சென்றிருந்தனர். அங்கு, பிரபல இந்தி பாடகர் அன்கித் திவாரியின் தந்தை, ஆன்ரியா ஹேவித்தை கடந்து செல்கையில் திடீர் என அவரை ஆன்ரியா கன்னத்தில் அறைந்தார்.

    இதைத்தொடந்து, இருதரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி அன்கித் திவாரியின் தந்தை மற்றும் சகோதரர்களிடம் வினோத் காம்ளி கைக்கலப்பில் ஈடுபட்டார்.

    இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினோத் காம்ளி மற்றும் ஆன்ரியா ஹேவித் மீது அன்கித் திவாரியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காம்ளி மற்றும் ஆன்ரியா மீது மும்பை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும், தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதோடு அல்லாமல் அருவறுக்கத்தக்க வார்த்தையில் பேசியதால் அன்கித் திவாரியின் தந்தையை தாக்கினேன். அவரை நான் தாக்கியது சரியான நடவடிக்கை, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுளது என ஆன்ரியா தெரிவித்துள்ளார்.

    சிசிடிவி காட்சியில் அன்கித் திவாரியின் தந்தை ஆன்ரியாவின் அருகே மிக சாதாரணமாக கடந்து சென்றது போன்றே தெரிகிறது. ஆனாலும், திடீரென ஆன்ரியா அவரை தாக்கினார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×