என் மலர்
நீங்கள் தேடியது "நாசிக்"
- பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
- சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் ஆலயத்தில் சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோவில் இதுமட்டும் தான்.
ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வெகுண்டெழுந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையை கொய்தார். இந்த செயலால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவது அலைந்து திரிந்தார்.
ஒருநாள் சோமேஸ்வரர் என்ற இடத்திற்கு சிவபெருமான் வந்தபோது பசு ஒன்று தன் கன்றுடன் பேசுவதைக் கண்டார். பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளான கன்றுக்கு தாய் பசு பரிகாரம் சொல்லிக்கொண்டு இருந்தது.
பஞ்சவதி அருகே வந்ததும், கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்மஹத்தி பாவத்தில் இருந்து விடுபட்டு பழைய நிலைக்கு திரும்பியது. அதேஇடத்தில் சிவபெருமானும் நீராடி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். பின்னர் அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடிகொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவபெருமான் ஒப்புக்கொள்ளவில்லை.
தன்னை பிரம்மஹத்தில் பாவத்தில் இருந்து விடுவித்ததால் நீ எனக்கு குருவுக்கு சமமானவர் என்றும் அதனால் என் முன்னால் அமரவேண்டாம் என்றும் நந்தியை கேட்டுக்கொண்டார் சிவபெருமான். ஆனால் நந்தியோ சிவபெருமான் மீது கொண்ட அளவுகடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெறியேற மறுத்து தன்னை அனுமதிக்குமாறு சிவபெருமானிடம் மன்றாடியது. இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொன்னதால் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது நந்தி என்று புராணவரலாறு கூறுகிறது. எனவே பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் கோவிலில் நீங்கள் நந்தி இல்லாத சிவபெருமானை தான் தரிசிக்க முடியும்.
- விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- சிறிது நேரத்திலேயே மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது
மகாராஷ்டிராவில் நீதிமன்றத்துக்கு வெளியே மாமியாரும் மருமகளும் சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவில், மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் உதைத்தும், குத்தியும் தாக்கிக் கொள்கிறார்கள். தலைமுடியை பிடித்து இழுப்பதும் உடைகளை கிழிப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
சிறிது நேரத்திலேயே மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
சம்பவ இடத்தில் இருந்த சில பெண் போலீசும் வழக்கறிஞர்களும் ஆரம்பத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்து நின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு வேறு சிலர் நிலைமை மோசமடைவதை கவனித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சந்த்வட் பகுதியில் இன்று அதிகாலை லாரி மீது மினி பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
லாரி டயர் பஞ்சர் ஆனதால் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பஸ்சானது மத்தியப்பிரதேசம் மாநிலம் தானே மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews