என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாசம்"
- இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
- இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வெங்கடா சலம் (வயது 60). ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியரான இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இவர்க ளுக்கு சொந்தமான விவ சாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெங்கடாசலமும், சுமதியும் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது இவரது கூரை வீடு திடீரென புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை கண்ட வெங்கடாசலமும், சுமதியும் அலறி அடித்துக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மல மலவென கொழுந்து விட்டு எறிந்தது.
இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை முழுவது மாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணம், பீரோ, கட்டில், டி.வி., பிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்ப லானது. திடீரென கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏலக்காய் விவசாயிகளுக்கு பல ஆயிரக்கணக்கான ஏலக்காய் விவசாய தோட்டங்கள் கேரள மாநிலத்தில் உள்ளது.
கடந்த 4 நாட்களாக ஏலக்காய் விளையும் தோட்டங்கள் உள்ள கேரளா ஏலமுடி, பூப்பாறை, சாந்தாதாம்பாறை, கஜனாப்பாறை, சுண்டல், மூணாறு, வண்டன்மேடு உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழையும், சூறாவளி காற்றுடன் பெரும் மழையும் பெய்து வருகிறது.
இது சமயம் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய பெரும் மழையால் ஏலத்தோட்டங்களில் ஏலச்செடி நிழலுக்காக உள்ள பெரிய சிறிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த மரங்கள் அருகில் உள்ள ஏலச்செடிகளில் விழுந்து நாசம் ஆகின.
சூறாவளி காற்றால் ஏலச் செடிகள் ஒன்றுக்கொன்று முறுக்கி ஒடிந்து கீழே விழுந்துது உள்ளது. இதனால் தற்போது பறிக்கும் நிலையில் உள்ள ஏலக்காய், பழங்காய்கள், கருங்காய்கள், பிஞ்சுகள் பலத்த சேதம் அடைந்தன. இதை கண்ட ஏலக்காய் விவசாயிகள் மனமுடைந்து காணப்பட்டனர். கடன் வாங்கி ஏலக்காய் விவசாயம் செய்தவர்கள் குத்தகைக்கு எடுத்தவர்கள் பல லட்சகணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்கள் வழியாகவும், தெருச்சாலைகள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சூறாவளி காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக ஏல விவசாயிகள் குடியிருக்கும் வீடுகள், ஏலக்காயை பதப்படுத்தும் ஸ்டோர்கள், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்களில் முற்றிலும் மின்சாரம் சப்ளை இல்லாமல் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் கேரள மாநில அரசு செயல்பட்டு தேனி மாவட்ட ஏலக்காய் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்