என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்"

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதை போல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். விடுமுறை நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

    சென்னையில் எழிலகம் பின்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், மாயவன் ஆகியோர் கூறியதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் போராட்டம் நடைபெறுவதால் அரசு ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை 1.4.2026 பதிலாக வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க வேண்டும்.

    இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் அல்லது மறியல் போராட்டம் என தீவிரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரை:

    பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள பணப்பலன்களை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

    தமிழ்நாடு பட்டதாரிகள் ஆசிரியர் கழக மாவட்ட செயலாளரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளருமான முருகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்லப் பாண்டியன், தமிழக தமி ழாசிரியர் கழக மாவட்ட தலைவர் செல்வராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் 350-க் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அரசே, அரசே பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்து என்று கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×